Wednesday 16 December 2020

கரூரில் காத்திருப்புப் போராட்டம்!

 விவசாயிகள் விரோத 3 வேளாண் மற்றும் தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டி காத்திருப்பு போராட்டம் 14/12/2020 அன்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.  இப்போராட்டம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் பெண்கள் மாணவர்கள் இளைஞர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் கரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் பங்கெடுத்து கொண்டனர். மேலும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக அனைத்து மாணவர்கள் விவசாயிகள் இளைஞர்கள் பொதுமக்கள் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று  போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமென்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அறைகூவி அழைக்கப்பட்டது.






தகவல் : 
மக்கள்அதிகாரம் 
கரூர்

No comments:

Post a Comment