Tuesday, 11 March 2025

இந்துக்களை மட்டுமே வட்டமடிக்கும் கெரகச் சக்கரம்!

ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் நம்பும் ஐயன்மீர்! ஐயம் தீர்ப்பீர்!

கிரகங்களின் தாக்கம் இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்கள் மீதும் உள்ளது என்றால், அது ஏன் இந்துக்கள் மீது மட்டும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு இந்துக்கள் மீது மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

அக்கம் பக்கமாக வாழுகின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் மீது ஏன் அந்தக் கிரகக் கதிர்கள் விழுவதில்லை? கீழ் வீட்டில் இருக்கிற இந்து மீது, அதுவும் சாதிக்குத் தகுந்தவாறு விழுகிற கிரகக் கதிர்கள், மாடி வீட்டில் இருக்கிற இஸ்லாமிய - கிறிஸ்தவன் மீது விழுவதில்லையே. கிரகங்களுக்கே 'செலெக்ட்டிவ் அம்னீசியாவா'? இல்லை, இஸ்லாமிய - கிறிஸ்தவர்களைக் கண்டு கிரகங்களுக்ககே அச்சமா? 

கிரகங்களப் பாத்து இந்துக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பார்த்து கிரகங்களே அஞ்சுகின்றன. என்ன கொடுமை 'சார்' இது?


ஓ! புரியுது! புரியுது! உங்க அச்சம் ஏன்னு? இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள். அவிங்க குண்டு போட்டா கிரகங்களின் குண்டியே கிழிஞ்சிடுமோ? பெறவு, கிருஸ்தவன்? ஏசுவ பகைச்சிக்கிட்டா தேசம் போன இந்துக்கள் எல்லாம் திரும்ப வர வேண்டி இருக்குமே? அவங்களுக்கும் சேர்த்து பலன் பாக்கணும்னா கிரகங்களுக்கு 'ஒர்க்லோடு' அதிகமாயிடுமே? படா கில்லாடிங்கப்பா நீங்க?

அவன் இந்து, இவன் இஸ்லாமியன், இவன் கிருஸ்தவன் என்ற 'டேட்டாவை' கிரகங்களுக்கு யாரப்பா கொடுத்தது? மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே அரசுகள் ஓடி ஒளியும் பொழுது நீங்க எப்படிப்பா கணக்கெடுப்பு நடத்துனீங்க? அந்த ரகசியத்தை டாக்டர் ஐயாகிட்ட சொல்லலாம் இல்ல? பாவம் புலம்பிக்கிட்டே இருக்காரு.

ஜாதகம், ஜோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, பொறந்த நேரம், புண்ணாக்கு நேரம் இதெல்லாம், ஏன்டா இந்துக்களுக்கு மட்டுமே வைக்கிறீங்க? 

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே?

ஊரான்

Thursday, 6 March 2025

தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?

தமிழன் என்பதற்கு அடையாளம் என்ன? ஒருவன் தமிழன்தான் என்பதை எதை வைத்து முடிவு செய்வது? தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் எல்லாம் தமிழன் ஆகிவிட முடியுமா? தமிழன் என்பதை மரபணு ரீதியாக நிரூபிக்க வேண்டாமா? 

கருப்புதானே ஆதி தமிழனின் நிறம். அப்படியானால்
மரபணு ரீதியாக மாநிறம் மற்றும் சிவப்பாய் இருகிறவன் எவனும் தமிழனாக இருக்க முடியாதே? 


யார் தமிழன் என்பதற்கே இத்தனை சோதனைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக கருப்பா இருக்கிற பாலியல் குற்றவாளி சீமான் போன்றவர்கள் எல்லாம் ஆள வந்தால் என்னவாகும்? 

ஆள வருகிறவன் நல்லவனா கெட்டவனா என்பதுதானே முதன்மைத் தேவை. இதையெல்லாம் பார்க்காமல் தமிழன்தான் ஆள வேண்டும் என்றால் சாக்கடைகள்கூட உங்களை ஆள நேரிடும். பிறகு நீங்கள் புழுக்களாய்தான் நெளிந்து கொண்டிருப்பீர்கள்.

கடைசியாக ஒரு கேள்வி. பள்ளிக்கல்வி முதல் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் டெல்லிதானே தமிழ்நாட்டை ஆளுகிறது.  டெல்லியை ஆளுகிறவன் குஜராத்தியாக இருக்கிறானே? என்ன செய்ய?

தமிழ்மணி

Monday, 3 March 2025

சிந்து சமவெளி நாகரிகத்தை 'ஐஜேக்' பண்ண ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி!

உலகில் வெள்ளை, மஞ்சள், கருப்பு ஆகிய மூன்று இனங்களில் வெள்ளை இனம்தான் உயர்ந்தது என, நிற அடிப்படையில் பாகுபாடு இருந்ததாகவும், வின்சன்ட் சர்ச்சில் மற்ற இனத்தை நாய் போலக் கருதினார் என்றும் அங்கலாய்க்கிறார் ஆர்.என்.ரவி. 

"ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம். இந்தியா மீது ஆரியர் படை எடுத்தனர்" என்பதெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதாம். அதை பெரியார் தமிழகத்தில் திணிக்க முயற்சித்தாராம். ஆர்.என்.ரவி சொல்கிறார்.

இந்து தமிழ் மார்ச் 4, 2025

சர்ச்சில் ஒருபக்கம் இருக்கட்டும் சார், எங்களைப் போன்று கருப்பாய் இருப்பவர்களைப் பற்றி, பார்ப்பனர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களையெல்லாம் 'சூத்திரவாள்' 'வேசி மக்கள்' என்று, நாயைவிட மிகக் கேவலமானவர்களாக சொன்னது நீங்கள்தானே சார்? உங்கள் கூட்டம்தானே சார்? இன்றும்கூட எங்களை 'சூத்திரவாள்' என்றுதானே சார் விளிக்கிறீர்கள்!

பார்ப்பனர்கள் அனைவரும் இந்தியா முழுக்க ஏன்
வெள்ளையாக இருக்கிறார்கள்? 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்று பார்ப்பனர்கள் பெருமை பேசுவததற்கும் சர்ச்சிலுக்கும் என்ன வேறுபாடு ஐயா ஆர்.என். ரவி அவர்களே? இப்போ என்ன தீடீர் ஞானோதயம்? 

வரலாற்றைத் திருத்துவதுதானே உங்களது வேலை. அறநெறி தந்த வள்ளுவனை இந்து மத ஆன்மீக சன்யாசியாக்க முயற்சிப்பவர்கள்தானே நீங்கள். அதனால்தானே இன்று "சிந்து சமவெளி" நாகரிகத்தை 'சிந்து சரஸ்வதி' நாகரிகம் என்று கூற வேண்டும் என தொல்லியல் தரவுகள் எதுவும் இன்றி மடைமாற்ற முனைகிறீர்கள்.

ஆரியன் என்ற சொல்லை பெரியாரா உருவாக்கினார்? நீங்கள்தானே அந்தச் சொல்லை சமஸ்கிருதத்தில் வேதங்களில் வைத்திருக்கிறீர்கள்? ஆரியர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்று நேற்று வரை நீங்கள்தானே பெருமை பேசிக் கொண்டிருந்தீர்கள்? 

அப்புறம், ஆரியர்கள் என்றால் 'ஆசிரியர்கள், சிறந்தவர்கள்' என்பதைக் குறிப்பிடவே 'ஆரியர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று புது 'டிக்ஷனரி' எழுதுகிறீர்கள். அது எப்படி சார், பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருந்தார்கள்? இதற்கு யார் சார் காரணம்? வெள்ளைத் தோல் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக ஆவது இருக்கட்டும், நாலு எழுத்துக் கூட்டிப் படிப்பதற்குக்கூட முடியாமல் போனதற்கு யார் சார் காரணம்? 

கடைசியா "அனைவரும் சமம், அனைவரும் ஒரே குடும்பம்" என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதாகச் சொல்கிறீர்கள். இருக்கட்டும். இருக்கட்டும். அப்படியானால் இந்துக் கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் விசயத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்று ஏன் சார் அடம்பிடிக்கிறீர்கள்? 

நீங்கள் மட்டுமே ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது சார். இப்பொழுது நாங்களும் ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக வளர்ந்துவிட்டோம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் ரவி சார். 

தமிழ்மணி