Friday 6 November 2020

வேலூர்: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

நவம்பர் 7, 1917 கையேந்தி நின்றவர்கள் கைநீட்டி எடுத்துக்கொண்ட நாள்.

உரிமை மறுக்கப்பட்டவர்கள் அதை பறித்து எடுத்துக் கொண்ட நாள்.

அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்திற்கு வந்த நாள்.

வரலாறு தலைகீழாக மாறிய நாள்.

 ரஷ்ய புரட்சி நாள்.

மக்களைப் பேரழிவில் தள்ளி வரும் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் மட்டுமே. 

சோசலிசப் புரட்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள புரட்சிகர அமைப்புகளின் சார்பாக நவம்பர் புரட்சி 103 ஆம் ஆண்டு விழா - இதுதான் பாட்டாளி மக்களுக்கான விழா என்பதை உணர்த்தும் வகையில் - வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில தொழிற்சங்கத்தின் கீழ் செயல்படும் "வேலூர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்" சார்பாக வேலூரில் நவம்பர் புரட்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேலூர் அண்ணா கலையரங்கம் கிளைச் சங்கத்தின் சார்பாக கிளைப் பொருளாளர் தோழர் வி.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிளைத் தலைவர் தோழர் இ.சுப்பிரமணி அவர்கள் கொடியேறறினார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அகிலன் சிறப்புரையாற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி தோழர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். கிளை உறுப்பினர் தோழர் பி.பழனி நன்றி உரையாற்றினார்.


வேலூர் பழைய மீன் மார்க்கெட் கிளைச் சங்கத்தின் சார்பாக கிளை துணைச் செயலாளர் தோழர்  எ.பழனி தலைமையில் நடைபெற்ற விழாவில் கிளை உறுப்பினர் தோழர் ஜி.சுப்பிரமணி கொடியேற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் தோழர் பி.சரவணன் சிறப்புரையாற்றினார். மக்கள் கலை இலக்கிய கழகம் செயற்குழு உறுப்பினர்  தோழர் வாணி வாழ்த்துரை வழங்கினார். கிளை உறுப்பினர் தோழர் இஸ்மாயில் பரீத் நன்றி உரையாற்றினார்.






தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்

No comments:

Post a Comment