Showing posts with label லெனின். Show all posts
Showing posts with label லெனின். Show all posts

Thursday, 20 January 2022

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? தொடர்-8

சுயநிர்ணயம் என்ற சொல்லின் பொருள் என்ன? சட்டரீதியான வரையறைகளிலிருந்து இதற்கு விடை தேடுவதை விடுத்து, உலகம் முழுவதிலும் நடைபெற்று வரும் தேசிய இயக்கங்களின் அனுபவத்திலிருந்து வரலாற்று–பொருளாதார ரீதியில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருள், மாருஷ்ய நாட்டரசிலிருந்து உக்ரைன், லித்துவேனியா, லாத்வியா போன்ற தேசிய இனங்கள் அல்லது இந்திய ஒன்றியம் என்கிற நாட்டரசிலிருந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து போன்ற தேசிய இனங்கள், அரசியல் ரீதியில் பிரிந்து தங்களுக்கான சுதந்திரமான தேசிய அரசு ஒன்றை அமைத்தல் என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது.

கணவன்-மனைவி இருவருக்குமான விவாகரத்து சுதந்திர உரிமையை ஆதரிப்பது எப்படித் தவறாகாதோ, அது போன்றுதான் தேசிய இனங்கள் பிரிந்து போகும் சுதந்திர உரிமையை ஆதரிப்பதும் தவறாகாது. கணவன்-மனைவி இருவருக்குமிடையே பிணக்குகள் தோன்றிய உடனேயே அவர்கள் பிரிந்து சென்று விடுவதில்லை. மாறாக, பிணக்குகளுக்கான காரணங்களைக் குறிப்பிட்ட குடும்ப வாழ்க்கையைப் பருண்மையாக ஆய்வு செய்த பிறகு, பிணக்குகளை தீர்ப்பதற்கு வேறு வழியே இல்லை என்கிற சூழ்நிலையில்தான் அவர்கள் பிரிந்து வாழ்வதற்கு விவாகரத்துக் கோருகிறார்கள். அது போன்றுதான் தேசிய இனப்பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனையை ஆராயும் போது அதை, அதன் திட்டவட்டமான வரலாற்று எல்லைக்குள் ஆராய்ந்து, அதன் பிறகே பிரிந்து செல்வது பற்றி தீர்மானிக்க வேண்டும்.

கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ அடக்கி ஒடுக்கும் ஒரு குடும்ப சூழ்நிலையில், அவர்கள் சேர்ந்து வாழலாமா? அல்லது பிரிந்து விடலாமா? குடும்ப நிலைமைகளைப் பாரதூரமாகப் பரிசீலிக்காமல் சேர்ந்து வாழ்வதா? அல்லது பிரிந்து விடுவதா? ‘இரண்டில் ஒன்று பதில் சொல்!’ என்று கேட்பது எப்படி அபத்தமானதோ அது போன்றுதான் தேசிய இனப் பிரச்சனையில் கேட்பதும்.

கணவனின் நலன் அல்லது மனைவியின் நலன் எதுவாக இருப்பினும், மொத்தத்தில் அது குடும்ப நலனுக்கு உட்பட்டதுதான் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து செல்லும் விவாகரத்து உரிமை. அது போல, பாட்டாளி வர்க்கத்துக்கும், வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் கீழ்ப்பட்டவைதான் தேசிய இனங்கள் பிரிந்து செல்வது குறித்த பிரச்சனையும்.

கணவன் மனைவி இருவரும். பிரிந்து செல்வதில் முடியுமா அல்லது சேர்ந்து வாழ்வதில் முடியுமா எனபதை எப்படி முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாதோ அது போலத்தான் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா அல்லது சம அந்தஸ்து பெற்று சேர்ந்திருப்பதில் முடியுமா என்பதை முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாது.

முடிவு எதுவானாலும், தனது மேம்பாட்டுக்கு வழிசெய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கியமானது. ஆனால், முதலாளித்துவ வர்க்கத்துக்கோ, பாட்டாளி வர்க்க நலனைவிட தனது நலனை முன்னிறுத்தி, பாட்டாளி வர்க்க நலனுக்கான  மேம்பாட்டை தடை செய்வதுதான் முக்கியம். எனவேதான், பாட்டாளி வர்க்கமானது, எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சாதகமாக இருப்போம் என்று உறுதி எதையும் அளிக்காமல், இன்னொரு தேசிய இனத்துக்குப் பாதகமாக எதையும் செய்வோம் என்றும் கூறாமல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்கிறது. பாதகமாக எதையும் செய்ய  மாட்டோம் என்று உறுதி அளிப்பதைத்தான் ‘எதிர்மறை’ கோரிக்கை என்கிறோம்..

சாத்தியமான தீர்வுகள் அனைத்திலும் மிகவும் ஜனநாயகமானத் தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு நடைமுறையில் சிறந்த உத்தரவாதத்தை இது ஒன்றுதான் அளிக்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கும் இந்தகையதொரு உத்தரவாதம்தான் தேவை.

விவாகரத்து உரிமையில் பிரிந்து வாழ்வதற்கு உத்தரவாதம் இருப்பதால்தான் ஒருவர் நலனை மற்றொருவர் பறிக்காமல் அவர்கள் ஒன்றிணைந்து ஒன்றாக வாழ முடிகிறது. தேசிய இனங்களுக்கும் இது சாலப் பொருந்தும்தானே?

விவாகரத்து உரிமை, குடும்பத்தைத் துண்டு படுத்துவதாகும் என்று உரத்துக் குரல் கொடுப்பவர்கள், ஆண்களின் சிறப்பு உரிமைகளையும், பெண்களை ஆண்கள் ஒடுக்குவதையும் ஆரிக்கும் பிற்போக்காளர்கள், நயவஞ்சகர்கள் ஆவர். விவாகரத்து உரிமையினால் குடும்பங்கள் துண்டுபட்டுப் போவதில்லை; மாறாக நாகரிக சமுதாயத்தில் அது ஒன்றுதான் ஜனநாயக அடிப்படையிலான சாத்தியமான நிலையான, குடும்ப உறவுகளை வலுப்பத்தும் ஒன்றாகும்.

சுயநிர்ணய உரிமை சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திர உரிமையை ஆதரிப்பதானது நாட்டைத் துண்டாடுவதற்குத் தூண்டிவிடுவதாகும் என்று குற்றம் சாட்டுவது நயவஞ்சகமானது, முட்டாள்தனமாது. விவாகரத்து சுதந்திர உரிமையை ஆதரிப்பவர்கள், குடும்ப உறவுகளைக் கெடுப்பவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது எந்த அளவுக்கு முட்டாள்தனமானதோ அந்த அளவுக்கு முட்டாள்தனமானது தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பது. உண்மையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பது என்பது ஒடுக்கும் தேசிய இனத்திற்கான சிறப்புச் சலுகைகளை ஆதரிக்கும், ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும்.

எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை உண்டு என்று சொல்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போவதற்குச் “சரி” அல்லது “இல்லை” என்று தெளிவாகச் சொல் என்று கேட்பதற்கு எதிராக நிற்கிறது பாட்டாளி வர்க்கம். உதாரணமாக, இலங்கையில் தமிழீழம், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தனியாகப் பிரிந்து செல்லலாமா? கூடாதா?. இரண்டில் ஒன்று தெளிவாகச் சொல்!” என்று கேட்பதற்கு எதிராக நிற்கிறது பாட்டாளி வர்க்கம்.

சம அந்தஸ்தும், தனக்கான தனி தேசிய அரசு ஒன்றை அமைத்துக் கொள்ளும் உரிமையும் ஒரு தேசிய இனத்திற்கு வேண்டும் என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளிகள் கூட்டாக இணைந்திருப்பதை மிகவும் முதன்மையானதாகக் கருதிப் போற்றுகிறது பாட்டாளி வர்க்கம்.

ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம், ஒடுக்கும் தேசிய இனத்தை எதிர்த்து எந்த அளவுக்குப் போராடுகிறதோ அந்த அளவுக்கு, அப்போராட்டத்தை ஒவ்வொரு நிலையிலும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும்; ஏன் என்றால் ஒடுக்குமுறைக்கு சிறிதும் விட்டுக் கொடுக்காத தீவிரமான எதிரி பாட்டாளி வர்க்கம் மட்டும்தான்.

பல்வேறு தேசிய இனங்கள் உள்ள ஒரு நாட்டில், பெரிய தேசிய இனத்துக்கான சிறப்பு உரிமைகள், தனிச் சலுகைகள் எதையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்காது. வர்க்க லட்சியத்தை நோக்கி நடைபோடுவதற்கு, அத்தகைய நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுத்த வேண்டும்.

ஒடுக்கும் பெரிய தேசிய இனத்துக்கான சிறப்பு உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் எதிர்த்தும், அனைத்து தேசிய இனங்களும் தங்களுக்கான தேசிய அரசுகளை அமைத்துக் கொள்ளச் சம உரிமை உண்டு என்பதை ஆதரித்தும் அன்றாடப் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகளை பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில்தான் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளிகள் சம அந்தஸ்துடன் ஒரு கூட்டணியை அமைத்துக் கொள்ள முடியும்.

உண்மையில் இந்தப் பிரச்சாரம் மட்டும்தான் மக்களிடையே சோசலிச உணர்வை  ஏற்படுத்தும். பல தேசிய இனங்கள் இருக்கும் ஒரு நாட்டில், அமைதி நிலவுவதற்கும், தேசிய இனங்கள் மிகவும் அமைதியாகத் தனித் தனி அரசுகளாகப் பிரிவதற்கும் அதிக வாய்ப்புகளை மேற்கண்ட பிரச்சாரம் மூலம் மட்டும்தான் ஏற்படுத்த முடியும். தேசிய இனப் பிரச்சனையில் பாட்டாளி வர்க்கத்தின் ஒரே கொள்கை இதுதான்.

எல்லா வகையான தேசியவாதத்தையும், குறிப்பாக ஒடுக்கும் தேசிய இனத்தின் தேசிய வாதத்தை எதிர்த்துப் போராடுவது (1) மற்றும் பொதுவாக எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமன்றி, அரசு அமைப்பதற்கான, சம உரிமைகளை, அதாவது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை, பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக்கொள்வது (2) ஆகியவைதான் பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள இரண்டு கடமைகளாகும்.

அதே சமயத்தில் அனைத்து விதமான தேசிய வாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டி, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஐக்கியத்தை, பாட்டாளி வர்க்க அமைப்புகளின் ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாக உள்ளது. இந்த அமைப்புகளை நன்கு நெருக்கமான சர்வதேச பொது  நிறுவனமாக இணைப்பதும் முக்கியக் கடமையாக உள்ளது.

“எல்லா தேசிய இனங்களுக்கும் சம உரிமைகள்; தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை; எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கிடையில் ஒற்றுமை”-இதுதான் மார்க்சியம் போதிக்கும் செயல் திட்டமாகும்.


1896, லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானங்கள், ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் 1903 செயல் திட்டம் மற்றும் 1912, 1913, 1914, 1916, 1922 ஆண்டுகளில்
  லெனின், ஸ்டாலின் ஆகிய இருவரின் வழிகாட்டுதல்படிதான் தேசிய இனப் பிரச்சனை குறித்து இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.

தாெடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3



தேசம் என்றால் என்ன? தொடர்-5



தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7


Sunday, 7 November 2021

வேலூரில் நவம்பர் புரட்சி விழா!

விலைவாசி உயர்வு, அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியாருக்கு, ஆலை மூடல்-ஆட்குறைப்பு, வேலையின்மை,  சுற்றுச்சூழல்-சுகாதாரக் கேடுகள், காசு உள்ளவனுக்கே கல்வி மற்றும் மருத்துவம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வரதட்சணை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதி ரீதியிலான வன்கொடுமைகள், மத-மொழி சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என மோடி ஆட்சிக் காலத்தில் இந்திய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்னல்களிலிருந்து தங்களுக்கு விடுதலை  கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

ருஷ்ய மக்களின் துன்ப துயரங்களுக்கு முடிவுகட்டி இம்மண்ணில் ஒரு பொன்னுலகைப் படைத்த 1917 நவம்பர் 7 சோசலிசப் புரட்சியைப் போன்றதொரு புரட்சியை நோக்கி பயணிப்பதன் மூலமாகத்தான் மக்கள் தங்களது துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.

சோசலிசம்தான் உழைக்கும் மக்களுக்கான ஒரே மாற்று என்றாலும்கூட கூட, இன்றைய சூழலில் இந்திய மக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் கார்ப்பரேட்-காவி பாசிச மோடி கும்பலை வீழ்த்துவதே மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது. அதற்காக, மோடிக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அறிவுத்துறையினர் ஓர் அணியில் சேர வேண்டும். இல்லையேல் காவிகள் நம்மை கபளீகரம் செய்வதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆம்! இன்றைய தேவை மோடிக்கு எதிரான ஒரு கூட்டமைப்பு. சாத்தியப்பட்ட எல்லா முனைகளிலும் தாக்குதல் நடத்தி மோடியை வீழ்த்துவதுதான் இன்றைய உடனடிக் கடமை. அதற்கான விதையை ஊன்றும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள்  நவம்பர் புரட்சி விழாவை தமிழகமெங்கும் கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக வேலூரில் நடைபெற்ற நவம்பர் புரட்சி விழா குறித்த ஒரு தொகுப்பு.

07.11.2021 மாலை, வேலூர் மாநகரில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி தலைமையில் நவம்பர் புரட்சி விழா எழுச்சியோடு நடைபெற்றது.

மக்களின் இன்றைய அவல நிலை குறித்து மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் இராவணன் அவர்களும், சங்கமாய் சேருவதன் அவசியம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் செல்வம் மற்றும் சேட்டு ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அடிமைத்தனம் மற்றும் மூட நம்பிக்கைகளை கைவிட்டு சமூக விடுதலைக்கான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து வழக்கறிஞர் பாலு அவர்களும், மீண்டும் ஒரு முறை பாஜக ஆட்சிக்கு வருமேயானால் 2025 ல், ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழாவின் போது இந்து ராஷ்டிரத்தை அறிவிக்கக் கூடும் என்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை ஒரே லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலா அவர்களும், சோசலிசத்தை நேசித்த விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் வரலாற்றை பதிவு செய்து தோழர் விசு அவர்களும், நேசம் தலைப்பில் தோழர் இரமணி அவர்களும் உரையாற்றினர்.

அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளில் நலனைக் காக்கவும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவவும் மேற்கொள்ளப்படும் மோடி அரசின் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை முறியடிக்க மோடி கும்பலுக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் ஓரணியில் ஐக்கிய முன்னணியாய் அணிசேர்வதன் அவசியத்தை வலியுறுத்தி தொழிற்சங்க முன்னோடி தோழர் மோகன்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

லெனினின் ஏன் தேவைப்படுகிறார்? என்ற தலைப்பில் மகஇக தோழர் முத்துராமன் கவிதை வாசிக்க, ‘அம்மா இல்லாம யாருமே இல்ல!’ , ‘சம்மதமா? சம்மதமா?’,  'சாமக்கோழி கூவும் நேரத்திலே,  ஊருக்கு ஊரு சாராயம்,  நாடு முன்னேறுதுங்குறான்,  மனுசங்கடா! நாங்க மனுசங்கடா!’,  டெல்லி சலோ! டெல்லி சலோ!’, உள்ளிட்ட பாடல்களை கலைக்குழு தோழர்கள் பாட, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சார்ந்த தோழர் சரவணன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

வேலூர் மாவட்டம்

விழா காட்சிகள்












காலையில் சங்கக் கிளைகளில் கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கி நவம்பர் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.











 

 

 

Friday, 23 April 2021

லெனின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்!

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளால் மகத்தான ரசிய சோசலிசப் புரட்சிக்கு வித்திட்ட பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர் மாமேதை லெனின் அவர்களின் 151-வது பிறந்த நாள் விழா 22.04.2021 அன்று கொண்டாடப்பட்டது. 

சென்னை, மகஇக

மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை கிளை சார்பாக நேரு பார்க் மற்றும் சேத்துப்பட்டு கிளைகளில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் நேருபார்க்கில் அமைப்பின் கொடியேற்றி விழாக் கொண்டாடப்பட்டது.
தோழர் வெங்கடேசன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார்.
தோழர் தீபன் பறையிசைத்தார்.
தோழர் தாமரைபரணி அவர்கள் கொடியேற்றி தோழர் லெனின் பற்றி உரையாற்றினார்.முழக்கங்களுடனும்,
இனிப்பும் வழங்கப்பட்டது.




பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை

ஆசான் லெனினின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு SRF பு.ஜ.தொ.மு மணலி, கிளை சார்பாக நடைபெற்ற ஆலைவாயில் கூட்டத்தில் தோழர் #C_வெங்கடாசலபதி (பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை நி.குழு உறுப்பினர்) தோழர் #P_R_சங்கர் (பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை தலைவர்) சிறப்புரையாற்றினார். இதில் கார்ப்பரேட் - காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்க்கப்பட்டது. இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல்: பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை.




கும்மிடிப்பூண்டி
தோழர் லெனின் பிறந்தநாளை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள #SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம் சார்பாக ஆலைவாயில் கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் #தோழர்_விஜயகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் சிறப்பு தலைவர் #தோழர்_ம_சி_சுதேஷ்_குமார் அவர்கள் கொடியேற்றினார். பின்பு ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர் லெனின் நமக்கு ஏன் தேவைப்படுகிறார் என உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் #தோழர்_விகந்தர் கலந்துக்கொண்டார். இறுதியில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.

புதுச்சேரி, புஜதொமு
மார்க்சிய ஆசான்களில் ஒருவரும், சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைப்பதற்கு பாட்டாளி வர்க்கக் கட்சி அமைப்பு பற்றிய கோட்பாடுகளை வகுத்தளித்தவரும் ரசியப் புரட்சியை தலைமை தாங்கி நடத்தியவருமான தோழர் லெனின் பிறந்த நாள் இன்று. 150 ஆண்டுகளுக்கு முன் பிறந்த "தோழர் லெனின் தற்போது ஏன் தேவை" என விளக்கி புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கங்களில் ஆலைவாயிற்க் கூட்டம் நடத்தப்பட்டது. தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.





வேலூர், புஜதொமு

உழைக்கும் மக்களின் ஆசான் தோழர் லெனின் அவர்களின் 151-வது பிறந்த நாள் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு கொண்டு இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கிளைச் சங்கமான தரைகடை வியாபாரி சங்கங்களின் சார்பாக மீன் மார்க்கெட் மற்றும் அண்ணா கலையரங்களம் ஆகிய கிளைகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. கிளைச் சங்கத் தோழர்களும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.








தருமபுரி, புமாஇமு

திருச்சி, புஜதொமு

மாமேதை தோழர் லெனின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் குட்செட் தோழர்கள் சார்பாக இன்று 22.04.2021 காலை 9 மணி அளவில் குட்செட் தொழிலாளர்கள் அலுவலகத்தில் மாமேதை தோழர் லெனினுடைய படத்திறப்பு விழா மற்றும் 151 வது பிறந்தநாளை கொண்டாடினர். சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் குட்செட் தலைவர் தோழர். குத்புதீன் தலைமையில் தோழர். பாலு வாழ்த்துரை வழங்கினார். சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவரும் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான தோழர். ராஜா வாழ்த்துரை வழங்கி பேசினார்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில் சிறப்பம்சங்களை விளக்கியும் இன்றைய அரசியல் சூழலில் கார்ப்பரேட் காவி பாசிச அபாயத்தை வீழ்த்த வேண்டிய நமது கடமைகளை வலியுறுத்தியும் பேசினார் . இறுதியாக சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் (இரும்பு செட்) பொருளாளர். தோழர் பாபு அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தகவல் :
சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்,
திருச்சி.





ஆட்டோ ஓட்டநர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி

திருச்சியில் ஆ. ஓ. பா. ச சார்பாக தோழர் லெனினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.




திருச்சி, மகஇக
இன்று ஜூலை-22 மாமேதை கம்யூனிச ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 151ம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கிலும் உள்ள பொதுவுடமைவாதிகள் அனைவரும் கொண்டாடும் நாள். ரசிய சோசலிச புரட்சியை நடத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி முதலாளித்துவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தோழர்.லெனின்.
தோழர்.லெனின் பிறந்த இந்நாளை சிறப்பிக்கும் வகையில் புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சியில் 3 இடங்களில் தோழர்.லெனின் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தில்லை நகர் காந்திபுரத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா தலைமையில் ம.க.இ.க தோழர்கள் மற்றும் கலைக்குழு தோழர்கள் பகுதி மக்களுடன் இணைந்து தோழர்.லெனின் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினர்.
கலைக்குழு தோழர்.சத்யா அவர்கள் தோழர்.லெனின் பிறந்தநாள் பற்றியும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அணி திரள்வது பற்றியும் உரையாற்றினார்.
மோடி அரசின் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த அணிதிரள்வோம் என முழக்கங்கள் இடப்பட்டது.
தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.





திருச்சி, புமாஇமு

மாமேதை தோழர் லெனின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜா பேட்டை பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக திருச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் அரிச்சந்திரன் தலைமையில் ,மாவட்ட பொருளாளர் தோழர் வின்சென்ட்ராஜ் மற்றும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு தோழர் லெனின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .
தோழர் லெனினை பற்றி தோழர் அரிச்சந்திரன் விளக்கி பேசினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ,
திருச்சி.
99448478885



கரூர், புமாஇமு
கரூரில் இன்று ஏப்ரல் 22 கம்யூனிச ஆசான் தோழர் லெனின் 151 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கரூர் தாந்தோன்றிமலையில் ஜீவா நகர் என்ற பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி RSYF அமைப்பின் கொடி ஏற்றி , தோழர் லெனின் போட்டோவிற்கு மாலை அணிவித்து , தற்போது நடக்கும் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்த போராடுவோம் என உறுதி ஏற்று , பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது . இதில்
மக்கள் அதிகாரம் , விடுதலை சிறுத்தை கட்சி , திராவிட அமைப்பு , தோழர்கள் மற்றும் ஜனநாயக பொறுப்புணர்வு கொண்ட வழக்கறிஞர்கள் மற்றும்
ஜீவா நகர் பொது மக்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளை சிறப்பித்தனர்
தகவல்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி
கரூர்


தஞ்சை

பாட்டாளி வர்க்க ஆசானகளில் ஒருவரும் மாபெரும் ரஷ்ய சோசலிச புரட்சியின் நாயகருமான தோழர் லெனினின் 151 வது பிறந்தநாள் விழா தஞ்சை இரயிலடியில் 22-042021 அன்று காலை 1030மணிக்கு நடைபெற்றது.
சிபிஐ(எம்) மாநகரச்செயலாளர் தோழர். என். குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னதாக லெனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர். முத்து. உத்திராபதி,
சிபிஜ மாவட்ட பொருளாளர் தோழர். என்.பாலசுப்பிரமணியன்,
சிபிஐ வடக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தோழர். ஆர்.தில்லைவனம்,
மக்கள் கலை இலக்கிய கழகம் மாநகரச் செயலாளர் தோழர். ராவணன்,
மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர். தேவா,
ஏஐடியூசி மாநிலச் செயலாளர் தோழர். சி. சந்திரகுமார்,
ஏஐடியூசி மாவட்ட தலைவர் தோழர். வெ. சேவையா,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மாலெ மாவோ சிந்தனை) மாவட்ட செயலாளர் தோழர். அருண்ஷோரி,
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் தோழர். எம்.பி.நாத்திகன்,
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தோழர். ச.அரவிந்தசாமி,
சிஐடியூ தோழர். மணிமாறன்,
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி தோழர். ஆர் கே. செல்வகுமார் ,
ஆர் எம் பி ஐ மாவட்டச் செயலாளர் தோழர். மதியழகன்,
தஞ்சை நஞ்சை கலைக்குழு அமைப்பாளர் தோழர். சாம்பான், தவத்திரு விசிறி சாமியார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் நன்றி கூறினார்.
உலக நாடுகளின் ஏழை எளிய மக்களிளை பசி பஞ்சம் பட்டினியில் இருந்து பாதுகாப்பது,
மூன்றாம் உலக நாடுகளை அச்சுறுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களை வீழ்த்துவது , தொழிலாளர்கள்,விவசாயிகளின் உரிமைகளை பறிக்கின்ற மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைப்பது,
கருத்துரிமை எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பது,
இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்ட ஆதரவு,
இடதுசாரிகள் ஒற்றுமைக்கும்,
ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்திற்கும் தொடர்ந்து பாடுபடுவது குறித்து உரைகள் முழக்கங்களளின் உள்ளடக்ங்கள் அமைந்திருந்தன. இடதுசாரி அமைப்புகளை சார்ந்த தோழர்களின்ஒற்றுமையயை பறைசாற்றிய நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது
22-04-2021








மதுரை

மதுரை ஒத்தக்கடை பகுதியில்..
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்...
ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில்
தொழிலாளியை தோழர் லெனினாக
தோழர் லெனினை தொழிலாளியாக
எவர்சில்வர்யைமின்னச் செய்யும் தொழிலாளியின் கைகளை...
உலகையே தன் வசப்படுத்த புரட்சிசெய்..

மதுரை ஒத்தக்கடை பகுதியில்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்..
தோழர் லெனின் அவர்களின் 151வது பிறந்தநாளில்..
தொழிலாளர்களிடம் பிரசுரத்தை விநியோகித்து பிரச்சாரம் செய்தனர்..