Saturday 6 February 2021

ஒரு விரைவு இரயிலின் இறுதி மூச்சு நின்று போனது. ஐயகோ!


அவர் என்னோடும், நான் அவரோடும் ஓடி ஓடி ஒட்டிய சுவரொட்டிகளும், ஓயாமல் எழுதிய சுவரெழுத்துகளும் நினைவில் வந்து போகின்றன. உடலுழைப்பு கோரும் வேலைகளில் முதல் களப்பணியாளர். நான் திருச்சியை விட்டு வந்து 22 ஆண்டுகள் ஆனபோதிலும் என் நினைவில் என்றும் நிலை பெற்றவர். மாநாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெருங்கூட்டத்திற்கு மத்தியிலும் என்னையும் தோழர் வாணியையும் சந்திக்க மறக்காத பாசக்கார பாலுவை இனி நான் எங்கே தேடுவேன்? அப்பழுக்கற்றவர்கள்தானே இதயத்தில் இடம் பிடிக்க முடியும். தோழர்கள் சீனிவாசன், ஏகலைவனுக்கு அடுத்து என்னைப் பெரிதும் பாதித்த பேரிழப்பு. 

ஒரு விரைவு இரயிலின் இறுதி மூச்சு நின்று போனது. ஐயகோ!

கண்ணீருடன்

தமிழ்மணி 

தோழர் பாலு