Thursday 31 December 2020

இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு!.....5

வேளாண் குடிகள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் உழுபவனுக்கு நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். அவன் விளைவிக்கின்ற விளைபொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிற அதிகாரம் அவனுக்கு இருந்தால்தான், முட்டுச் செலவு போக அவன் கையில் காசு புரளும், தனக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை வாங்க முடியும். உற்பத்திப் பொருட்கள் விற்பனையானால் ஆலைகள் உருவாகும், வேலைவாய்ப்புகள் பெருகும். அனைவருக்கும் உத்தரவாதமான வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுவிட்டால் அதுதானே பொன்னுலகம். இதைக் கொள்கையாகக் கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் என்னைப் பிணைத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினேன். இதற்காக எத்தகைய இன்னல்வரினும் எதிர்கொள்ளத் துணிந்தேன்.

வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார்கள். எனது இயக்க வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிற, தாலி-சடங்கு-சம்பிரதாயங்கள், மொய்-சீர்-வரதட்சணையை மறுக்கின்ற துணைதான் தேவை என அப்பாவுக்குக் கடுதாசுப் போட்டேன். தாய்மாமன் பரிந்துரைத்தப் பெண் வீட்டார்  இதை ஏற்க மறுத்ததால் அப்பெண்ணை நிராகரித்தேன். மாமன் சொல்லைத் தட்டிக் கழித்ததால் பின்னாளில் அவருடனான உறவையும் இழந்தேன். வையத்தில் எங்கு தேடினாலும் தாலி மறுப்புக்குப் பெண் கிடைக்காது என்று கை விரித்தார்கள். நானாகத் தேடினேன். அப்பொழுதுதான் பெல் நிறுவன பயிற்சியாளர்களின் IV-வது தொகுப்பைச் (technician apprentice 4th batch) சேர்ந்த சகப் பயிற்சியாளரான ரங்கன் உதவிக்கு வந்தார்.

3-வது, 4-வது மற்றும் 5-வது தொகுப்பைச் சேரந்த சுமார் 400 பேர் 1978 ஆம் ஆண்டு பட்டயதாரர்கள். ஆறு மாதம் வகுப்பறைப் பயிற்சி, ஆறுமாதம் களப்பணிப் பயிற்சி என பெல் மனிதவள மேம்பாட்டு மையம் கொடுத்தப் பயிற்சியால் பொறியியற்க் களஞ்சியமாய் வார்க்கப்பட்டோம். AMIE  முடித்து எப்படியாவது 'எக்சிகூட்டிவ்' ஆகிவிட வேண்டும் என்ற முனைப்போடு சிலரும்,  "Be Happy Enjoy Life" என மகிழ்ந்த சிலரும், ஆலைப் பணியோடு சமூகப் பணியிலும் அக்கறை கொண்ட சிலரும் என கதம்பமாய்த் திகழ்ந்தது எங்கள் அணி. தமிழறிஞர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களை பயிற்சிக் காலத்தின் போது விடுதிக்கு அழைத்து, அவரது தமிழைச் சுவைத்தவர்கள் நாங்கள். 

நண்பர் ரங்கன் அறிமுகப்படுத்தியப் பெண் மகஇக-வோடு மாற்றுக் கருத்துடைய மக்கள் கலாசாரக் கழகத்தின் களப்பணியாளர். நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளை கைவிட்டதால், அவர்கள் "ஓடுகாலிகள்" என்று விளிக்கப்பட்ட காலம் அது. மாற்று அமைப்பு என்பதால் அரசியல் பேசி, இணங்கிய பிறகு இருவரும் இணைவது என உறுதியானது. 

'இருவரும் ஒப்புக்கொண்ட பிறகு மணவிழா எதற்கு, சேர்ந்து வாழுங்களேன்' என சில சொந்தங்கள் வெறுப்பாய்ச் சொன்னபோது, எட்டுவகைத் திருமணங்களில் இது காந்தர்வத் திருமணம் என பெரியப்பா நாராயணசாமி ஆதரவுக் கரம் நீட்ட, அவர் பெயரிலேயே அழைப்பிதழும் போடப்பட்டது. 

மின்சாரம் இல்லாத ஊராச்சே, பேச வேண்டும், பாட வேண்டும் என்பதற்காக கிழக்கே நானூறு மீட்டர், மேற்கே நானூறு மீட்டர் என இரண்டு பம்ப் செட்டுகளிலிருந்து உயரமானக் கழிகளை ஊன்றி ஒயர் இழுத்துக் கொண்டு வந்தோம் மின்சாரத்தைத் தெருவுக்கு. இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் செங்கம் கொட்டாவூரிலிருந்து வாழை இலைகள் மிதிவண்டியிலேயே உறவுகளால் எடுத்து வரப்பட்டன. உறவுகள் ஓடி ஆடி வேலை செய்ய 1986, ஜூன் முதல் நாள், ஞாயிறு மாலை ராகு காலத்தில் உரை வீச்சு, உருக வைத்த நாடகம், கலை நிகழ்ச்சி என களைகட்ட, தோழர் கதிரவன் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு விழா எனது வீட்டு வாசலிலேயே இனிதே நடந்தது. வீடியோ பதிவு ஆடம்பரம் என்பதால் ஆதியின் ஆக்கத்தில் நிகழ்வுகள் நிழற்படமாய் மாறின. 'கலிகாலத்தில் இப்படியுமா? பிழைக்கத் தெரியாதவன்' என எண்ணியோரும் உண்டு.

இணை ஏற்பு

லதா, கலைக்குழு

தொடரும்

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்:

இழி குணம்: என்னை ஈர்த்த மக்கள் கலை இலக்கியக் கழகம்!.....4

இழி குணம்: கூட்டுறவு சொசைட்டி பொது நலன் சார்ந்ததா?.....3







Wednesday 30 December 2020

இழி குணம்: என்னை ஈர்த்த மக்கள் கலை இலக்கியக் கழகம்!.....4

பட்டயப் படிப்பு முடிந்து விட்டது. பெயருக்குப் பின்னால் பெருமையாய் DME (diploma in mechanical engineering) ஒட்டிக் கொண்டது. ஆனால் வேலை? கிடைக்காமலா போய் விடும் என்ற நம்பிக்கையோடு திருச்சி பெல் நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வை முடித்துவிட்டு கிராமத்துக்குத் திரும்பினேன். 'ஐந்தைப் பெற்றவன் ஆண்டியாவான்' என்பார்கள். நாங்களோ அதற்கும் மேலே, இரண்டு ஆண் வாரிசுகளோடு ஈன்றவர்கள் உட்பட ஒன்பது பேர். கைக்கும் வாய்க்குமே எட்டாத சூழலில் பட்டணத்துப் படிப்பு என்றால் சும்மாவா? ஒரு இளங்காளையையும் அரை ஏக்கர் புன்செய்யையும் DME உள்வாங்கிக் கொண்டது.

இடையில் திருச்சி பெல்லுக்குச் சென்று மற்றுமொரு எழுத்துத் தேர்வையும்  நேர்காணலையும் எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றுத் திரும்பினேன்.  தேர்வில் நான் 'காப்பி' அடிப்பதாக நினைத்துக் கொண்டு "ஏய் யு ப்ளு சர்ட்?" என மேற்பார்வை செய்து கொண்டிருந்த  ஒரு அதிகாரி என்னைப் பார்த்துக் கூச்சலிட்ட போது,  எனது திறமையை சந்தேகிக்கிறாரே என, வந்த வேலை கெட்டு விடக்கூடாது என்பதற்காக என்னுள் எழுந்த ஆத்திரத்தை உள் அழுத்திக் கொண்டேன். மாதங்கள் உருண்டோடின. ஆனால் அழைப்பு மட்டும் வந்தபாடில்லை. 

பட்டணத்து வாசிகளுக்குப் பிரச்சனை இல்லை. நாலு கம்பெனி படி ஏறினாலே ஏதாவது ஒன்றில் நுழைந்து விட முடியும்‌. அத்திமூரான் கொட்டாயில் நான் எங்கே தேட? பெல்லிலிருந்து தபால் வருமா என ஆறு மாதம் காத்திருந்து பட்டணத்திற்குப் பயணமானேன். தபாலே வந்தாலும், தபால்காரரின் பாதம் படாத கொட்டாய்க்கு மட்டும் வந்து விடுமா என்ன? தபால்காரர் கை மாற்ற, வழிப்போக்கர்களே கடுதாசியைச் சேர்க்கும் காலம் அது.  'ஏதோ கடுதாசி!, கொடுக்கலாம்!' என எரவாணத்தில் (தாழ்வாரக் கூரை) சொருகிவிட்டால் அது 'அப்பாயின்மெண்ட் ஆர்டராக' இருந்தாலும் அத்தோடு முடிந்தது கதை; ஆடு மாடுகளோடு காலத்தைக் கடத்த வேண்டியதுதான். 

ஊரைத் தாண்டி நடந்து வந்தேன்.  எதிர்ப்பட்டான் இளைய பங்காளி. உள்ளத்தில் பகை இருந்தாலும், வஞ்சிக்க எண்ணாமல், அவன் கொடுத்த கடுதாசியே பட்டணத்துப் பயணத்தைத் திருச்சிக்குத் திசை மாற்றியது. டிசம்ர் 4, 1978, திருச்சி பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராய் தற்காலிகப் (NMR) பணி. ஒரு நாள் ஊதியம் ரூ.13.20. வாடகை, போக்குவரத்து, உணவு, பராமரிப்பு போக மாதம் 100 ரூபாய் வீட்டுக்கும் அனுப்பி வந்தேன். ஓராண்டு NMR,  ஓராண்டு  பயிற்சி முடித்து, மீண்டும் ஒரு நேர்காணலைச் சந்தித்து  ரூ.520 அடிப்படை ஊதியத்தில் 28.03.1981 ல் பொறுப்பாளராய் நிரந்தரப் பணி. 

சிலகாலம் கீழரண் சாலை முருகன் திரையரங்கு எதிரில் லிபர்ட்டி, லாட்ஜ், அதன் பிறகு அல்லிமால் தெரு அமுதா லாட்ஜ் வாசம். 

1980 களின் தொடக்கத்தில், பெல்லில் பணியாற்றிய சில ஊழிர்களை ஈர்த்தது போலவே என்னையும் உள்வாங்கிக் கொண்டது மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக). அதுமுதல் தமிழ்மணி ஆனேன். பகலில் ஆலைப்பணி, மாலையில் மக்கள் பணி என்பது வழமையாய் மாறிப்போனது. நக்சலைட் பயங்கரவாத அமைப்பு என்கிற பயம் பலரை அச்சுறுத்தினாலும் பிரசுரம், சுவரெழுத்து, சுவரொட்டி, தெருமுனைப் பிரச்சாரம், பேச்சு என அனைத்திலும் ஆர்வத்துடன் அஞ்சாமல் பயணத்தைத் தொடர்ந்தேன். 

நண்பர்களோடு வீடெடுத்து தில்லை நகரிலும், மலைக்கோட்டை தெற்குத் தெருவிலும் கருணா-காங்க்ஸ்-எபி-கோவிந்தா-குணா-ராம்கியோடு சிலகாலம் வாசம். உறவுகள் கூட வெறுக்கும் சொரியாசிஸ் என்னை ஆட்கொண்ட போதும் பண்போடு அரவணைத்த பாசக்கார நண்பர்கள்‌. சமையலுக்கு ஆள் வைத்தோம். அன்னமிட்ட காடப்பன் மட்டும் இன்றும் என் நினைவில். 

வயது கூடியது. பருவ வயதில் பலரைப் கண்டாலும் காதல் மட்டும் எட்டாக் கனியாய், வாழ்க்கைத் துணையைத் தேடி....

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்:

இழி குணம்: கூட்டுறவு சொசைட்டி பொது நலன் சார்ந்ததா?.....

Tuesday 29 December 2020

இழி குணம்: கூட்டுறவு சொசைட்டி பொது நலன் சார்ந்ததா?.....3

பொறியியல், கணித அறிவியல், இரசாயணம், தோல், அச்சுத் தொழில்நுட்பம், பாலிமர், ஹோட்டல் மேலாண்மை, ஜவுளித் தொழில், வர்த்தகம், திரைப்படம் என விதவிதமாய் பல்தொழில் பயில்வதற்கான இடம்தான் சென்னை தரமணியில் உள்ள சிஐடி வளாகம் (Central Institute of Technology). உலகத் தமிழாரய்ச்சி நிறுவனமும் இங்குதான்.

அருகில்தான் ஐஐடி மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகங்கள். அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு சிஐடி வளாகமும், மேட்டுக்குடியினருக்கு கிண்டி பொறியியல் கல்லூரி வளாகமும், உயர்சாதிப் பணக்காரர்களுக்கு ஐஐடி வளாகமும் என்பது பின்னாளில்தான் புரிய வந்தது. பத்தாவது முடித்த  கிராமப்புற கீழ்த்தட்டு மக்களுக்கானதுதான் ஐடிஐ (ITI) படிப்பு.

இயந்திரவியல், மின்னியல், கட்டிடவியல் பட்டயப் (Diploma) படிப்புக்கான தொழில்நுட்பக் கல்லூரிதான் மைய பாலிடெக்னிக் கல்லூரி (Central polytechnic-CPT). முதலாண்டு படிப்புக்கு 'முன் தொழில்நுட்பப் படிப்பு', PTC-Pre Technical Course, என்று பெயர். இதில் தேறினால்தான் பட்டயப் படிப்பைத் தொடர முடியும். கல்லூரிகளில் பட்டப் படிப்பிற்கு செல்லும் முன் படிக்கக்கூடிய PUC-Pre University Course போன்றது இது. PTC முடித்த பிறகு பொறியியல் பட்டப் படிப்பிலும் சேர முடியும்.

CPT மிகப்பெரிய பாலிடெக்னிக் கல்லூரி. முதலாமாண்டில் A முதல் E வரை வகுப்புகள் உண்டு. இது தவிர மூன்றரையாண்டு சாண்ட்விச் படிப்பும் உண்டு.  CPT முதல் தரமான பாலிடெக்னிக் என்பதால் தமிழகமே அங்கு சங்கமிக்கும். பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில். பள்ளி இறுதித் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 38 ஐத் தொடுவதற்கே கண்களை மூடி, தலையை அசைத்து, நடந்து, விரல்களை ஆட்டி உரு போட்ட எனக்குக் கண்ணைக் கட்டி விட்டது போலத்தான் இருந்தது. நல் வாய்ப்பாக எனக்குப் பக்கத்து இருக்கையில் சேக்ரி ராஜன். ஆங்கில வழிக் கல்வியை அனாயசமாக எதிர்கொள்ள அவன்தான் எனக்குக் கிரியா ஊக்கி. பட்டணத்து மாணவர்கள் முயலாய் இருந்தாலும் வாலிகண்டபுரம், அத்திமூரான் கொட்டாய், நாட்டார்மங்கலம் கிராமத்து ஆமைகளே முதல் மூன்று இடத்தைப் பிடித்தன. 

விடுதி மாணவர்கள்-வீட்டிலிருந்து வரும் மாணவர்கள் என்கிற சிறு முரணைத் தவிர சாதி-மத-இன முரண் எதையும் நான் கண்டதில்லை. படிப்பிலே போட்டி இருந்தாலும் கூடிப் படிப்பதை பண்பாய்க் கொண்டிருந்தோம்.

மூன்றாமாண்டு தொடக்கத்தில் கிராமத்தில் வயல் வேலைகளை முடித்துவிட்டு ஒரு நாள் தாமதமாக வந்ததற்காக, இரண்டாம் ஆண்டு தர வரிசையில் முன்னிலையில் இருந்த எனக்கு, விரும்பிய விருப்பப்பாடம் கிடைக்காத வெறுப்பில் பலரும் வெறுக்கும் 'பவுண்ட்ரி டெக்னாலஜியை' கேட்டுப் பெற்றேன். நேர்மையற்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டேன்; வஞ்சிக்கப்பட்டேன் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் துவண்டு விடவில்லை‌‌. முத்திரையைப் பதித்து விட்டுத்தான் மூன்றாண்டு முடிந்து வெளியே வந்தேன்.

மூன்றாண்டு காலத்தில் மறக்க முடியாத எண்ணற்ற நிகழ்வுகள். சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஆண்டு இறுதியில் தவறாமல் நடைபெறும் ஆண்டு விழா இசைக் கச்சேரிகளும்,  சிஐடி வளாகத்தில் நடைபெறும் பொறியியல் பொருட்காட்சியும் பிரபலமானவை. வளாகத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள்  நுழையும் வாய்ப்பும் இளவட்டங்களுக்கு அப்பொழுதுதான் கிட்டும். 

வண்ணத்திரையில் கண்ட நட்சத்திரங்களை நேரில் காணும் வாய்ப்பும் எங்களுக்கு வாய்த்ததுண்டு. T-ஸ்கொயரோடு கமல்ஹாசனை வகுப்பறையில் பார்த்ததுண்டு. நூலகத்தில் கமல்-ஸ்ரீபிரியா காதல் காட்சிகளையும் கண்டதுண்டு. திரைப்படக் கல்லூரி வளாகத்தில் மு.க. முத்துவோடு கைகுலுக்கிப் பேசியதும் உண்டு. மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட 'பசி' திரைப்படம் இங்குதான் உருவாக்கப்பட்டது.

(பொறியியல் வரைபடம் வரைவதற்கு உதவும் T வடிவிலான ஒரு கருவி, அதன்பிறகு வந்துதான் மினி டிராஃப்டர்) 

விடுதிக்கு மிக அருகில்தான் மாடர்ன் பிரட் ஆலை. மாடர்ன் பிரட் வாசத்துடன்தான் விடுதியின் காலைப் பொழுதே விடியும். கூட்டுறவு முறையில் விடுதியின் உணவகம் நடத்தப்பட்டதால் மாணவர்களே மளிகை- காய்கறிகள் வாங்கக் கொத்தவால் சாவடி செல்வோம். வஞ்சமில்லா பிஞ்சு உள்ளங்களை லஞ்சப் பேய் அண்டியதில்லை. வஞ்சனையின்றி உண்டோம். வெள்ளிக்கிழமை காலை பிரட் மசாலா என்னைக் கவர்ந்த விருப்ப உணவு. பள்ளியிலே முதல் வரிசைக் குள்ளனாய் இருந்த நான் வளர்ந்ததற்கும் சென்னை கல்லூரிகளின் விடுதி உணவகங்களுக்கே வழிகாட்டிய எங்கள் விடுதிச் சாப்பாடே ஆதாரம். கூட்டுறவு சொசைட்டி முறைக்குத்தான் எத்தனை பலம், பொது நலன் பேண! ஆனால் இன்றும்தான் சிலர் சொசைட்டி நடத்துகிறார்கள், தங்கள் பையை நிரப்பிக் கொள்ள!

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: முதல் முறை ஏமாற்றப்பட்டேனோ?.....2

Sunday 27 December 2020

இழி குணம்: முதல் முறை ஏமாற்றப்பட்டேனோ?.....2

எனது கிராமம் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், மட்டவெட்டு கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அத்திமூரான் கொட்டாய். இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் ஒரே மூதாதையரின் வாரிசுகள். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து கொட்டாய் அமைத்து வாழ்ந்ததனால் கொட்டாய் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது போலும். ஆனால் கொட்டாயோடு அத்திமூர் எப்படி சேர்ந்து கொண்டது? 

இதே மாவட்டத்தில் போளூர் அருகே சவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் அத்திமூர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு மன்னன் மலைக்கு மேலே கோட்டை அமைத்து ஆட்சி புரிந்ததாகவும், கோட்டையைக் கைப்பற்ற ஆங்கிலேயர் ஒரு சிறு படையுடன் வந்தபோது அவர்களை வெட்டி வீழ்த்திய வீரன் ஒருவன், பின்னர் ஆங்கிலேயரின் பெரும்படை வருவதைக் கண்டு அங்கிருந்து தனது மனைவியோடு தப்பி அடர் காடுகளின் ஊடாக பருவத மலையைக் கடந்து, அதற்கு அடுத்துள்ள பெருமாள் மலை உச்சியிலே சில காலம் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், வாரிசுகள் உருவான பிறகு அவன் மலையை விட்டேகி பாலூர் கிராமத்தில் வசித்த பிறகு,  மட்டவெட்டு மலை அடிவாரத்தில் விவசாய நிலம் இருந்த இடத்திலேயே குடிபெயர்ந்ததால் அவ்விடம் அத்திமூரான் கொட்டாயாக பரிணமித்தது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த எனது பெரியப்பா நாராயணசாமி அவர்கள் வாய் வழியாகச் சொன்ன செய்தி இது. மூதாதையர் அத்திமூர் என்பதனால் இது அத்திமூரான் கொட்டாயானது. நான் அத்திமூரான் கொட்டாய்க்காரன்.

அத்திமூர் மலைக்கோட்டை மதிற்சுவர் 

1975, பழைய எஸ்எஸ்எல்சி ஆண்டு இறுதித் தேர்வு 600க்கு 398 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாவதாக வந்தேன். முதல் மாணவன் எனது நண்பன் சண்முகம். இருவருமே சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தி அற்றவர்கள்‌. ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கு ஒரே ஆசிரியர். இரண்டிலும் பாதி பாடங்கள் கூட நடத்தப்படவில்லை. யார் யாரெல்லாம் இறுதியில் தேறுவார்கள் என்று கணக்கிட்டு அவர்களை சில மாதம் பள்ளியிலேயே தங்கச் சொன்னார்கள். அதில் நானும் அடக்கம். உண்டு உறைவிடப் பள்ளி போல. ஆனால் உணவு மட்டும் வீட்டுடிலிருந்து வந்து விட வேண்டும். கொஞ்சம் பேராவது தேறினால்தான் பள்ளியின் மானம் கப்பல் ஏறாமல் இருக்கும். கிராமப்புற பள்ளிகளில் நிலைமை இதுதான்.

பட்டணம் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ மெட்ராஸ் மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் (CPT) சேர்க்க எனது பெரியப்பா மகன் அண்ணன் கண்ணன் எனக்காக விண்ணப்பம் வாங்கி வந்து மெட்ராஸ் பட்டணத்தில் பட்டயப் படிப்புப் படிக்க ஏற்பாடு செய்தார். இல்லையேல் நானும் அத்திமூரான் கொட்டாயோடு முடங்கிப் போய் இருப்பேன்.

12.07.1975 அன்றைய நேர்காணலுக்காக முதல் நாள் இரவே மெட்ராஸ் சென்றபோது எல் ஐ சி கட்டிடம் எரிந்துகொண்டிருந்தது. சில நாட்கள் கழித்து படிப்பில் சேர அழைப்பு வந்ததால் நான் மட்டும் தனியாக திருவண்ணாமலையிலிருந்து 122 ல் ரூ.6 பயணக் கட்டணம் செலுத்தி மெட்ராசுக்குப் பயணமாகி, பிராட்வே பேருந்து நிலையத்தில் இறங்கி உயர்நீதிமன்ற வாயிலை சென்றடைந்தேன். அடையாறு செல்லும் பேருந்து இருக்குமிடத்தைக் காட்டுவதாகச் சொல்லி ரிக்சாவில் ஐந்து ரூபாயைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு அழைத்துச் சென்றார் ஒரு ரிக்சாக்காரர். உயர்நீதிமன்ற வளாகத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு, விசாரித்த இடத்திற்குச் சற்றுப் பக்கத்திலேயே அவர் என்னை இறக்கி விட்டார் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்ட போது, முதல் முறையாகப் பட்டணத்தில் ஏமாற்றப்பட்டேனோ என்ற நினைவு மட்டும் இன்றும் என்னுள் நிழலாடுகிறது. அடையாறு செல்ல சைதாப்பேட்டையிலேயே இறங்கி விடலாம் என்பதையும் அனுபவம்தானே உணர்த்தியது. பட்டால்தான் புரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.

தமிழ்மணி 

தொடரும் 

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்!.....1


தஞ்சை விவசாயிகள் மாநாடு: டிசம்பர் 29-அணிதிரள்வீர்!

திருச்சி

வேளாண் திருத்த சட்டத்துக்கு எதிராகவும், டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பாக டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற இருக்கின்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி ,லால்குடி, மணக்கால் பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக இளைஞர்களிடம் மற்றும் ஊர் பொதுமக்களிடம் விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது.



தகவல்:

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
திருச்சி.

வருகிற இருபத்தி ஒன்பதாம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை ஒட்டி மக்கள் அதிகாரம் சார்பாக  திருச்சியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. ம. க. இ. க கலைக்குழுவின் சார்பாக பாடல்கள் பாடப்பட்டது.



வருகிற இருபத்தி ஒன்பதாம் தேதி. வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து  தஞ்சையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தை ஒட்டி திருச்சி  நத்தர்ஷா பள்ளிவாசலில் மக்கள் அதிகாரம் சார்பாக  நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது.


தகவல்

மக்கள் அதிகாரம் 
திருச்சி

கோத்தகிரி

இன்று 27 /12/ 2020 வேளான் விரோத இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பை அளிக்கும் பாசிச மோடியின் சட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது. கோத்தகிரியில் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் வரும் 29ஆம் தேதி தஞ்சையில் அனைத்து இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு(AIKSCC) சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், ஆதரவு கொடுக்குமாறும் பிரச்சாரம் செய்யப்பட்டது. தஞ்சையை "டெல்லி சிங்கு எல்லையாக" மாற்றுவோம் வாரீர்.




தகவல்
மக்கள் அதிகாரம் 
கோத்தகிரி

தஞ்சை

தஞ்சையில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு 29.12.2020 அன்று
பேரணி - பொதுக்கூட்டம் மக்கள்அதிகாரம் பிரச்சாரம்.
============================
மோடி அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் கடும் பனியில் இரவு பகல் பாராமல் உயிர் தியாகத்திற்கு அஞ்சாமல்  தொடர்ந்து போராடும் விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டத்தை ஆதரித்தும்,  விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு  தஞ்சையில் 29-12-2020 மாலை நடைபெற இருக்கும் மாநிலம் தழுவிய பேரணி பொதுக்கூட்டதை பிரச்சாரம் செய்தும், மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கினைப்பபாளர் தோழர் தேவா தலைமையில் விவசாயிகள் சந்திப்பு இயக்கம் ரெட்டிப்பாளையம், வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி .சீராளூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.  பிரச்சார இயக்கம் தொடர்கிறது. 



தகவல் 
மக்கள் அதிகாரம் 
தஞ்சை

விழுப்புரம்

முதல் நாள்

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் கடும் பனியில் இரவு பகல் பாராமல் உயிர் தியாகத்திற்கு அஞ்சாமல் இன்றோடு 28 நாட்கள் தொடர்ந்து போராடும் விவசாயிகளின் பேர் எழுச்சிமிக்க போராட்டத்தை ஆதரித்தும், இந்த வேளாண் சட்டங்களால் ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் வருங்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் தமிழகத்தில் தமிழக விவசாயிகள் சங்கங்கள், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நவம்பர் 26 ஆம் தேதியில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம் குறிப்பாக 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.

 5 ஆம் தேதி மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி உருவபொம்மை எரிப்புப் போராட்டம்.

 8 தேதி மறியல். 

14, 15 ,16  தேதிகளில் காத்திருப்பு போராட்டம் என தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த காத்திருப்பு போராட்டத்தை மோடியின் அடிமை எடப்பாடி அரசு  போராட்டத்தை ஒடுக்க முயன்றும் தடுத்தும் அனுமதி மறுத்த நிலையிலும் விழுப்புரத்தில் தடையை மீறி  போராட்டம்  நடத்தப்பட்டது. 
இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக 23, 24 ,25 தேதிகளில் தொடர் பிரச்சார இயக்கத்தை விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய வட்டாரங்களிலும் தாலுகாவிலும், நடத்துவது என்ற அடிப்படையில்  முதல் நாளான 23 ஆம் தேதி   தொடர் பிரச்சார இயக்கத்தை கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம், திருச்சிற்றம்பலம், கூட்ரோடு கிளியனூர், மரக்காணம் ஆகிய இடங்களில் நடத்தி முடித்திருக்கிறோம். திட்டமிட்ட இடங்களில் அடுத்தடுத்த நாள் நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.






தகவல்
மக்கள் அதிகாரம், 
விழுப்புரம் மண்டலம்.
94865 97801

2-வது நாள்

இரண்டாவது நாளான 24 ஆம் தேதி  தொடர் பிரச்சார இயக்கத்தை விக்கிரவாண்டி,
கூட்டேரிப்பட்டு,
திண்டிவனம்,
செஞ்சி,
வளத்தி 
ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.




தகவல்
மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம்.
94865 97801

மூன்றாவது நாள்

மூன்றாவது நாளான 25 ஆம் தேதி   தொடர் பிரச்சார இயக்கத்தை கண்டாச்சிபுரம்,
கெடார்,
காணை,
திருவெண்ணெய்நல்லூர்,
அரசூர்
ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.



தகவல்
மக்கள் அதிகாரம்
விழுப்புரம் மண்டலம்.
94865 97801



விவசாயிகள் விரோத ஆட்சிக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒங்கிணைப்புக்குழு நடத்தும் 

#பேரணி_பொதுக்கூட்டம் 
டிசம்பர் 29, திலகர் திடல் தஞ்சை.
அழைக்கிறது மக்கள் அதிகாரம்

தஞ்சை அழைக்கிறது அணிதிரண்டு வாரீர்.

தோழர் சி.ராஜூ,  
மாநில ஒருங்கிணைப்பாளர், 
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை  

https://youtu.be/bTTTeqP3QYo



Wednesday 23 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?

தொடராக வெளியிட்ட கட்டுரையை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

*****

1850 களின் தொடக்கம்,  கடைசி முகலாயன் ஜாபர் என்கிற பகதூர் ஷா II வின் காலம் அது. முகலாயர்களின் நீதிபரிபாலன முறையை அகற்றி விட்டு பிரிட்டிஷ் சட்டங்களைப் புகுத்த முற்பட்டதோடு மட்டுமன்றி கிறிஸ்தவத்தையும் பரப்ப முயன்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு எதிர்வினையாக உருவெடுத்ததுதான் 1857 மாபெரும் சிப்பாய்க் 'கலகம்.' இதைக் கலகம் என்று சொல்வதை விட ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடுத்த ஒரு விடுதலைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆங்கிலேய இராணுவத்தில் பணியாற்றிய இந்தியச் சிப்பாய்கள் டெல்லியை முற்றுகையிட்டனர். ஒன்று சிப்பாய்களை அடக்கி ஒடுக்கி டெல்லியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் அல்லது இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் ஓட வேண்டும் என்பதுதான் அன்றையச் சூழல். அதைத் தொடர்ந்து டெல்லியே இரத்தக்களறியானது. பின்னாளிலே ஆங்கிலேயப் படையினரால் சிப்பாய்கள் அடக்கப்பட்டனர். பகதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மியச் சிறையிலேயே மாண்டு போனார் என்பது வரலாறு.

வேளாண்மையில் விவசாயிகளின் சுயசார்பு நடைமுறைகளை அகற்றிவிட்டு விவசாயிகளைக் கொத்தடிமைகளாக மாற்றவும், கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கவும் வழிவகுக்கும் புதிய சட்டங்களைப் புகுத்தும் மோடி-அமித்ஷா காவிகளின் காலம் இது. அன்று ஆங்கிலேயருக்கு எதிராக வட இந்திய சிப்பாய்கள் டெல்லியை முற்றுகையிட்டனர். இன்று வட இந்திய விவசாயிகள் மோடி-அமித்ஷா காவிகளுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். 

அன்றைய டெல்லி முற்றுகை 6 மாதம் காலம் நீடித்தது. ஆறு மாத காலத்திற்குத் தேவையான தயாரிப்போடுதான் இன்றைய டெல்லி முற்றுகையும் தொடர்கிறது. 1857 சிப்பாய்களின் டெல்லி முற்றுகையை நினைவுபடுத்துகிறது விவசாயிகளின் இன்றைய டெல்லி முற்றுகை. 

25 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டம் வெற்றி பெறுமா? தோல்வியில் முடியுமா? வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? என்கிற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழத்தான் செய்யும். ஒரு போராட்டம் வெற்றி பெறலாம் அது தோல்வியிலும் முடியலாம். ஆனால் அது ஒரு வரலாற்றுச் செய்தியை உணர்த்தி விட்டுத்தான் செல்கிறது. இன்றைய டெல்லி முற்றுகை நமக்கு உணர்த்துவது என்ன?

இத்தகையச் சூழலில் வேளாண் சட்டங்கள் குறித்தும், டெல்லி முற்றுகை குறித்தும், அதன் அரசியல்  தன்மை குறித்தும் நாம் விரிவாகத் தெரிந்து கொண்டால்தான் இன்றைய டெல்லி முற்றுகை நமக்கு உணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநில விவசாயிகள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தைக் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடத்தி வருகின்றனர். 96,000 டிராக்டர்கள், 6 மாத காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளுடன் 1.2 கோடி விவசாயிகள் டெல்லியின் நுழைவு வாயில்களை முற்றுகையிட்டுள்ளனர். சிறுவர், முதியோர், ஆண், பெண் என பலரும் குடும்பம் குடும்பமாகபோராட்டக் களத்தில் உள்ளனர்.

இந்திய தேசியக் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி( மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் என பலரும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர்.

ஆங்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் 36 பேர் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அந்நாட்டின் வெளியுறவு செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராட்டத்தை ஆதரித்து பேசியுள்ளார். இந்தியாவின் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தனது கேல்ரத்னா விருதை திரும்பத் தரப்போவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனது பத்மவிபூஷண் விருதை ஏற்கனவே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டமத்திய அரசு குழுவினர் விவசாயப் பிரதிநிதிகளுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எதுவும் ஏற்படாமல் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதுவரை 33 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர்நீத்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு டிசம்பர் 21 அந்த நாடெங்கிலும் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்கள்

1.விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்

2.விலை பொருள் உறுதி மற்றும் சேவைகள் சட்டம்

3.அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்

விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கும் என்கிறது மத்திய அரசு. இல்லை, இவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் பயனளிக்கும்; விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சிறு வணிகர்களுக்கும் எதிரானது என்கின்றனர் சட்டத்தை எதிர்ப்போர். இவற்றில் எது உண்மை? 

விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை சேமித்து வைத்துக்கொண்டு நல்ல விலை கிடைக்கும் போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்றும், விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை எந்தவித தடையுமின்றி இந்தியாவெங்கும் இணையவழி மூலம் நேரடியாக விற்பனை செய்து கொள்ள முடியும் என்றும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்றும், குறைந்த விலையில் நுகர்வோருக்கும் பொருள் கிடைக்கும் என்றும் சட்டத்தை ஆதரிப்போர் தரப்பில் சொல்லப்படுகிறது.

விவசாயத்தில் ஈடுபடுவோரில் 75% பேர் சிறு குறு விவசாயிகள். கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப்பரட்சி, இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட விதை போன்றவைகளால் இயற்கை வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனால் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் பயனடைந்தனர்; விவசாயிகளோ தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். எங்கெல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் நுழைகின்றனவோ அங்கெல்லாம் உணவு உற்பத்தி சங்கிலியின் கண்ணிகள் நொறுக்கப்பட்டு மொத்தமும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றன. உணவு உற்பத்தியில் தற்சார்பை ஒழித்துக்கட்டி, விவசாய உற்பத்தி முதல் மொத்த வணிகம், சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக இருக்கிறது. 

உணவிற்கு இனி உத்தரவாதம் உண்டா?

உயிர் வாழ வேண்டும் என்றால் உணவு அடிப்படைத் தேவை. உணவு கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றால் உயிர் போவதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவர் உயிர் வாழ்வதை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்பதால்தான் உயிர்வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம். 

விலை பொருட்களை விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து இருப்பதால்தான் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவோ, மலிவு விலையிலோ கிடைக்கின்றன. இதை நம்பி இந்தியாவில் சுமார் 76 கோடி பேர் உயிர் வாழ்கின்றனர். அரசே நேரடியாக விளை பொருட்களை கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வருகிறது.  இனி கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கார்ப்பரேட்டுகளே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதற்கும், நியாயவிலைக் கடைகளுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. உணவுக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் 76 கோடி மக்களின் உயிர் வாழும் உரிமையும் ஊசலாடுகிறது. 

வெங்காயம், உருளைக் கிழங்கு, பருப்பு வகைகள், தானியம், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள்  என இனி எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கார்ப்பரேட்டுகள் பதித்து வைத்துக் கொள்ள முடியும். உணவு சேமிப்புக் கிடங்குகள் மூடப்படுவதால் புயல், பெருவெள்ளம்,  நில அதிர்ச்சி, வறட்சி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அரசு கையறு நிலையில்தான் நிற்கும். அதிக விளைச்சல் இருந்தாலும்  பதுக்கலுக்கு வழிவகுத்திருப்பதால் மக்களுக்கு எளிதில் பொருட்கள் கிடைக்காது. பேரிடர் காலங்களில் கார்ப்பரேட்டுகளிடருந்து அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கி மக்களைக் காக்க எந்த அரசும் முன் வராது. எனவே மக்களின் உயிர்வாழும் உரிமை மீண்டும் ஒரு முறை பறிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் இடிபாடுகளின் மீது கார்ப்பரேட்டுகளின் சேமிப்புக் கிடங்குகள்!

எம்.எஸ் சுவாமிநாதன் குழு முன்வைத்த குறைந்தபட்ச ஆதார விலையைத் தருவதாக சவடால் அடித்துதான் மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளது. 23 பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் 7 பொருட்களை மட்டுமே அந்த விலைக்கு வாங்குகிறது. விளைவிக்கும் நெல், கோதுமை உள்ளிட்ட விளை பொருட்களில் 20-30 % பொருட்களை மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலைக்கு அரசு வாங்குகிறது. கிடங்குகள் நிறைந்து விட்டன என்று அரசு கைவிரித்து விடுவதால் மற்றவர்கள் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு விற்கத் தள்ளப்படுகிறார்கள். விளை பொருட்களை வாங்கிய கடனுக்காக கடன்காரனிடமோ அல்லது கமிஷன் மண்டிக்காரனிடமோதான் அவர்கள் கேட்கிற விலைக்கு களத்து மேட்டிலேயே விற்பனை வருகிறார்கள். 

ஒரு பக்கம் சில விளைபொட்களுக்கு கொள்முதல் விலையை அரசு சில சமயங்களில் உயர்த்துவதோடு சரி. ஆனால் பொருட்களை வாங்குவதற்கான கொள்முதல் நிலையங்களைத் திறப்பதே இல்லை. அப்படியே திறந்தாலும் ஒரு சில நிலையங்களை மட்டும் திறப்பது என்பதை அரசு திட்டமிட்டே செய்கிறது. இதனால் வேறு வழியின்றி வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.

கொள்முதல் செய்த தானியங்களைக் கூட பாதுகாக்க வக்கற்றுப் போன அரகளைத்தான் நாம் இந்தியாவெங்கும் பார்த்து வருகிறோம். கொள்முதல் நிலையங்களில் பாழாகிப் போன அரிசி-கோதுமையைத்தான் நியாயவிலைக் கடைகளில் வழங்குகிறார்கள். அதைக் கொண்டுதான் நாமும் உயிர் வாழ்ந்து வருகிறோம்.

உள்ளூரிலேயே நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கும் சிறு குறு விவசாயிகள் இணையவழி மூலம் இந்தியாவெங்கும் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுகிறது மோடி அரசு. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, உள்ளூர் சிறுவணிகர்களும் ஒழிக்கப்பட்டுவிட்ட சூழலில் இணையவழி மூலம் எவனுமே பொருளை வாங்க முன் வரவில்லை என்றால் விவசாயி என்ன செய்வான்? ஒன்று சாலையில் கொட்ட வேண்டும், இல்லை என்றால் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் அள்ளிக் கொடுக்க வேண்டும். 'உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அசலூரில் ஆணை பிடிக்கப் போனானாம்்' என்ற கதையாக உள்ளூரிலேயே குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காத போது ஆன்லைன் மூலம் அகிலமெங்கும் விற்று லாபத்தை அள்ளலாம் என்று புதுமொழி எழுதுகிறது மோடி கும்பல்.

அனைத்து விளை பொருட்களையும் குறைந்த பட்ச ஆதார விலை கொடுத்து அரசாங்கமே கொள்முதல் செய்தால் அனைவருக்கும் பயன்படுமே! அதை விடுத்து இருக்கிற அரைகுறை கொள்முதல் முறையையும் ஒழித்துக் கட்டுவதால் யாருக்கு பயன்? அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளைத் தவிர? அதனால்தானோ என்னவோ கார்ப்பரேட்டுகள் நவீன சேமிப்புக் கிடங்குகளை கட்டி வருகிறார்கள். சன் குழுமம் கூட தொலைக்காட்சி மட்டும் நடத்தினால் போதாது, சேமிப்புக் கிடங்குகளையும் கட்டட்டுமே என்று அங்கலாய்க்கிறார் அக்கா வானதி. 

நிலக்கிழார் எல்லாம் இனி கிழிந்த கோவணத்தோடு.....!

கால் காணி இருந்தாலே நிலக்கிழார் என்று மீசையை முருக்குபவன் நம்ம ஊர் விவசாயி. கஞ்சி குடிக்க வழி இல்லை என்றாலும் யார் முன்பும் கைகட்டி நிற்க மாட்டான். இனி.....‌?

சொந்தமாக தொழில் செய்யும் போதே சோத்துக்கு வழி இல்லை. இதுல ஒப்பந்த விவசாயமாம். நிரந்தரத் தொழிலாளியாக இருந்து ஒப்பந்தத் தொழிலாளியாக மாறும் ஒரு தொழிலாளியின் நிலையைப் போலத்தான் சொந்தமாக விவசாயம் செய்யும் ஒரு ஒப்பந்த விவசாயின் நிலையும் இருக்கும்.

ஏற்கனவே கரும்பு, உருளை, வாழை உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்கள் ஒப்பந்த முறையில்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. கரும்பை பெற்றுக் கொண்ட 15 நாட்களுக்குள் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வட்டியோடு ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் கரும்பு ஆலை முதலாளிகள் அதை மயிரளவுக்கும் மதிப்பதில்லை. இந்தியாவில் சுமார் 24,000 கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை முதலாளிகள் பாக்கி வைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ரூ 2300 கோடி அளவுக்கு பணம் வர வேண்டியுள்ளது.  மோடியும் எடப்பாடியும் என்ன செய்து கிழித்தார்கள்? தற்போது கொண்டு வரப்படும் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் நெல்லுக்கும் கோதுமைக்கும் அப்படி பாக்கி வைத்தால் புதிதாக ஏதாவது கிழிக்கவாப் போகிறார்கள்? 

சுயசார்பாய் இருக்கிற விவசாயிகளையும் முதலாளிகளின் கண்ணியிலே பிணைப்பதுதான் மோடியின் திட்டம். ஒப்பந்தம் போட்டு விவசாயம் செய்த பிறகு உருளையில் ஓட்டை இருக்கிறது, நெல்லில் ஈரம் இருக்கிறது, கரும்பில் சாறு இல்லை, வேர்க்கடலையில் எண்ணெய் இல்லை, வாழையில் ருசி இல்லை; அதனால் ஒப்பந்த விலையைத் தர முடியாது என்று பிகு பண்ணினால் விவசாயி என்ன செய்வான்? கலெக்டர் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கி இளைத்துப் போவதைத் தவிர? அவன் இருப்பதையும் இழந்து கோவணத்தோடு கார்ப்பரேட்டுகள் முன்னால் கைகட்டி நிற்க வேண்டும், "ஐயா ஏதாவது பார்த்து குடுங்க" என்று!

ஜல்லிக்கட்டா? டெல்லிக்கட்டா?

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகளே நிறைந்துள்ளனர். ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்கக் கூடியவைதான் புதிய வேளாண் சட்டங்கள். டெல்லி மட்டும் களை கட்டுகிறது. ஜல்லிக்கட்டைக் கண்ட தமிழகமோ தத்தித் தவழுகிறது. மற்ற இடங்களில்  சுவடுகூட இல்லை. ஏன் இந்த நிலை?

நெருப்பைத் தொட்டவன், சுட்டதனால் சீறி எழுகிறான். மற்றவனோ பட்டால்தான் எழுவேன் என்கிறான். புதிய சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் ஏற்கனவே பஞ்சாப், அரியானா விவசாயிகள் அனுபவித்து விட்டார்கள். அதனால் சீறுகிறார்கள். எஞ்சிய இந்தியாவோ கெஞ்சிக் கொண்டிருக்கிறது. பாடங்களிலிருந்து படிப்பினை பெறாதவன் ஒருபோதும் வரலாற்றைப் படைக்க முடியாது.

தாக்குதல் பலமாக இருக்கும் போது அதற்கான எதிர்வினை.........?

ஏழ்மையில் உள்ள விவசாயிகளை உய்விக்கப்போவதாகவும், இடைத்தரகர்களிடமிருந்து அவர்களை மீட்கப் போவதாகவும் மோடி சொல்வதெல்லாம் உண்மையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்றுமில்லாத அளவில் அடிமைச் சேவகம் செய்து, எல்லை இல்லாத அளவில் விவசாயிகளைக் கொடுமையாகச் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்வதுதான்.

1990களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளைகளாலும், காட் ஒப்பந்தப்படி உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கிணங்க நமது நாட்டின் அனைத்துத் துறைகளையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடுவதை தீவிரப்படுத்தி உள்ளது மோடி-அமித்ஷா கும்பல். அதற்கு ஏற்ப தொழிலாளர் நலச் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், மின்சார சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்கீடு மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது மோடி-அமித்ஷா கும்பல். சுரண்டலையேத் தொழிலாகக் கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளும், வேளாண்மையை இழிதொழில் என வரையறுக்கும் அதிகாரத்தில் உள்ள மனுவாதிகளும் இங்கே கை கோர்க்கிறார்கள்.  எதிர்ப்போரை ஈவிரக்கமின்றி அடக்குகிறார்கள், தாக்குகிறார்கள்,  வேட்டையாடுகிறார்கள். கார்ப்பரேட்டுகளும் காவிகளும் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். 

பாதிப்பை உணர்ந்தவர்கள் வீதிக்கு வருகிறார்கள். காவியின் ஒடுக்குமுறையை புரிந்துகொண்ட நாம் அன்று காளைகளாய் சீறி எழுந்து ஜல்லிக்கட்டு கண்டோம். கார்ப்பரேட்டுகளின் பாதிப்பை உணர்ந்தவர்கள் இன்று சிங்கங்களாய் கர்ஜித்து டெல்லிக்கட்டைக் காண்கிறார்கள். 

மக்களின் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்றுபவனே மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும்; மக்களின் கோரிக்கைகளுக்கு, தேவைகளுக்குப் புறம்பாக தங்களது திட்டத்தை நிறைவேற்ற யார் முன் வந்தாலும் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்பார் மாபெரும் பாசிச எதிர்ப்புப் போராளி தோழர் ஸ்டாலின். வேளாண் சட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் மக்களின் கோரிக்கைக்கு, தேவைக்கு எதிராக செயல்படும் கார்ப்பரேட்-காவி, மோடி-அமித்ஷா கும்பலை விரட்டி அடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக அவர்களை வீழ்த்தாமல் வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவில்லை. ஜல்லிக்கட்டும் டெல்லிக்கட்டும் மொத்தமாய் சேர்ந்து மல்லுக்கட்டும் நாள் எந்நாளோ!

தமிழ்மணி

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....6

ஜல்லிக்கட்டா? டெல்லிக்கட்டா?

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகளே நிறைந்துள்ளனர். ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்கக் கூடியவைதான் புதிய வேளாண் சட்டங்கள். டெல்லி மட்டும் களை கட்டுகிறது. ஜல்லிக்கட்டைக் கண்ட தமிழகமோ தத்தித் தவழுகிறது. மற்ற இடங்களில்  சுவடுகூட இல்லை. ஏன் இந்த நிலை?

நெருப்பைத் தொட்டவன், சுட்டதனால் சீறி எழுகிறான். மற்றவனோ பட்டால்தான் எழுவேன் என்கிறான். புதிய சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் ஏற்கனவே பஞ்சாப், அரியானா விவசாயிகள் அனுபவித்து விட்டார்கள். அதனால் சீறுகிறார்கள். எஞ்சிய இந்தியாவோ கெஞ்சிக் கொண்டிருக்கிறது. பாடங்களிலிருந்து படிப்பினை பெறாதவன் ஒருபோதும் வரலாற்றைப் படைக்க முடியாது.

தாக்குதல் பலமாக இருக்கும் போது அதற்கான எதிர்வினை.........?

ஏழ்மையில் உள்ள விவசாயிகளை உய்விக்கப்போவதாகவும், இடைத்தரகர்களிடமிருந்து அவர்களை மீட்கப் போவதாகவும் மோடி சொல்வதெல்லாம் உண்மையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்றுமில்லாத அளவில் அடிமைச் சேவகம் செய்து, எல்லை இல்லாத அளவில் விவசாயிகளைக் கொடுமையாகச் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்வதுதான்.

1990களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளைகளாலும், காட் ஒப்பந்தப்படி உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கிணங்க நமது நாட்டின் அனைத்துத் துறைகளையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடுவதை தீவிரப்படுத்தி உள்ளது மோடி-அமித்ஷா கும்பல். அதற்கு ஏற்ப தொழிலாளர் நலச் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், மின்சார சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்கீடு மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது மோடி-அமித்ஷா கும்பல். சுரண்டலையேத் தொழிலாகக் கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளும், வேளாண்மையை இழிதொழில் என வரையறுக்கும் அதிகாரத்தில் உள்ள மனுவாதிகளும் இங்கே கை கோர்க்கிறார்கள்.  எதிர்ப்போரை ஈவிரக்கமின்றி அடக்குகிறார்கள், தாக்குகிறார்கள்,  வேட்டையாடுகிறார்கள். கார்ப்பரேட்டுகளும் காவிகளும் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். 

பாதிப்பை உணர்ந்தவர்கள் வீதிக்கு வருகிறார்கள். காவியின் ஒடுக்குமுறையை புரிந்துகொண்ட நாம் அன்று காளைகளாய் சீறி எழுந்து ஜல்லிக்கட்டு கண்டோம். கார்ப்பரேட்டுகளின் பாதிப்பை உணர்ந்தவர்கள் இன்று சிங்கங்களாய் கர்ஜித்து டெல்லிக்கட்டைக் காண்கிறார்கள். 

மக்களின் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்றுபவனே மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும்; மக்களின் கோரிக்கைகளுக்கு, தேவைகளுக்குப் புறம்பாக தங்களது திட்டத்தை நிறைவேற்ற யார் முன் வந்தாலும் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்பார் மாபெரும் பாசிச எதிர்ப்புப் போராளி தோழர் ஸ்டாலின். வேளாண் சட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் மக்களின் கோரிக்கைக்கு, தேவைக்கு எதிராக செயல்படும் கார்ப்பரேட்-காவி, மோடி-அமித்ஷா கும்பலை விரட்டி அடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக அவர்களை வீழ்த்தாமல் வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவில்லை. ஜல்லிக்கட்டும் டெல்லிக்கட்டும் மொத்தமாய் சேர்ந்து மல்லுக்கட்டும் நாள் எந்நாளோ!

முற்றும்

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்

என்ன?.....5

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....4



விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....5

நிலக்கிழார் எல்லாம் இனி கிழிந்த கோவணத்தோடு.....!

கால் காணி இருந்தாலே நிலக்கிழார் என்று மீசையை முருக்குபவன் நம்ம ஊர் விவசாயி. கஞ்சி குடிக்க வழி இல்லை என்றாலும் யார் முன்பும் கைகட்டி நிற்க மாட்டான். இனி.....‌?

சொந்தமாக தொழில் செய்யும் போதே சோத்துக்கு வழி இல்லை. இதுல ஒப்பந்த விவசாயமாம். நிரந்தரத் தொழிலாளியாக இருந்து ஒப்பந்தத் தொழிலாளியாக மாறும் ஒரு தொழிலாளியின் நிலையைப் போலத்தான் சொந்தமாக விவசாயம் செய்யும் ஒரு ஒப்பந்த விவசாயின் நிலையும் இருக்கும்.

ஏற்கனவே கரும்பு, உருளை, வாழை உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்கள் ஒப்பந்த முறையில்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. கரும்பை பெற்றுக் கொண்ட 15 நாட்களுக்குள் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வட்டியோடு ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் கரும்பு ஆலை முதலாளிகள் அதை மயிரளவுக்கும் மதிப்பதில்லை. இந்தியாவில் சுமார் 24,000 கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை முதலாளிகள் பாக்கி வைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ரூ 2300 கோடி அளவுக்கு பணம் வர வேண்டியுள்ளது.  மோடியும் எடப்பாடியும் என்ன செய்து கிழித்தார்கள்? தற்போது கொண்டு வரப்படும் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் நெல்லுக்கும் கோதுமைக்கும் அப்படி பாக்கி வைத்தால் புதிதாக ஏதாவது கிழிக்கவாப் போகிறார்கள்? 

சுயசார்பாய் இருக்கிற விவசாயிகளையும் முதலாளிகளின் கண்ணியிலே பிணைப்பதுதான் மோடியின் திட்டம். ஒப்பந்தம் போட்டு விவசாயம் செய்த பிறகு உருளையில் ஓட்டை இருக்கிறது, நெல்லில் ஈரம் இருக்கிறது, கரும்பில் சாறு இல்லை, வேர்க்கடலையில் எண்ணெய் இல்லை, வாழையில் ருசி இல்லை; அதனால் ஒப்பந்த விலையைத் தர முடியாது என்று பிகு பண்ணினால் விவசாயி என்ன செய்வான்? கலெக்டர் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கி இளைத்துப் போவதைத் தவிர? அவன் இருப்பதையும் இழந்து கோவணத்தோடு கார்ப்பரேட்டுகள் முன்னால் கைகட்டி நிற்க வேண்டும், "ஐயா ஏதாவது பார்த்து குடுங்க" என்று!

தமிழ்மணி

தொடரும்

தொடர்புடைய பதிவுகள் 

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....4



Tuesday 22 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....4

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் இடிபாடுகளின் மீது கார்ப்பரேட்டுகளின் சேமிப்புக் கிடங்குகள்

எம்.எஸ் சுவாமிநாதன் குழு முன்வைத்த குறைந்தபட்ச ஆதார விலையைத் தருவதாக சவடால் அடித்துதான் மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளது. 23 பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் 7 பொருட்களை மட்டுமே அந்த விலைக்கு வாங்குகிறது. விளைவிக்கும் நெல், கோதுமை உள்ளிட்ட விளை பொருட்களில் 20-30 % பொருட்களை மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலைக்கு அரசு வாங்குகிறது. கிடங்குகள் நிறைந்து விட்டன என்று அரசு கைவிரித்து விடுவதால் மற்றவர்கள் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு விற்கத் தள்ளப்படுகிறார்கள். விளை பொருட்களை வாங்கிய கடனுக்காக கடன்காரனிடமோ அல்லது கமிஷன் மண்டிக்காரனிடமோதான் அவர்கள் கேட்கிற விலைக்கு களத்து மேட்டிலேயே விற்பனை வருகிறார்கள். 

ஒரு பக்கம் சில விளைபொட்களுக்கு கொள்முதல் விலையை அரசு சில சமயங்களில் உயர்த்துவதோடு சரி. ஆனால் பொருட்களை வாங்குவதற்கான கொள்முதல் நிலையங்களைத் திறப்பதே இல்லை. அப்படியே திறந்தாலும் ஒரு சில நிலையங்களை மட்டும் திறப்பது என்பதை அரசு திட்டமிட்டே செய்கிறது. இதனால் வேறு வழியின்றி வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.

கொள்முதல் செய்த தானியங்களைக் கூட பாதுகாக்க வக்கற்றுப் போன அரகளைத்தான் நாம் இந்தியாவெங்கும் பார்த்து வருகிறோம். கொள்முதல் நிலையங்களில் பாழாகிப் போன அரிசி-கோதுமையைத்தான் நியாயவிலைக் கடைகளில் வழங்குகிறார்கள். அதைக் கொண்டுதான் நாமும் உயிர் வாழ்ந்து வருகிறோம்.


உள்ளூரிலேயே நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கும் சிறு குறு விவசாயிகள் இணையவழி மூலம் இந்தியாவெங்கும் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுகிறது மோடி அரசு. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, உள்ளூர் சிறுவணிகர்களும் ஒழிக்கப்பட்டுவிட்ட சூழலில் இணையவழி மூலம் எவனுமே பொருளை வாங்க முன் வரவில்லை என்றால் விவசாயி என்ன செய்வான்? ஒன்று சாலையில் கொட்ட வேண்டும், இல்லை என்றால் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் அள்ளிக் கொடுக்க வேண்டும். 'உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அசலூரில் ஆணை பிடிக்கப் போனானாம்்' என்ற கதையாக உள்ளூரிலேயே குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காத போது ஆன்லைன் மூலம் அகிலமெங்கும் விற்று லாபத்தை அள்ளலாம் என்று புதுமொழி எழுதுகிறது மோடி கும்பல்.

அனைத்து விளை பொருட்களையும் குறைந்த பட்ச ஆதார விலை கொடுத்து அரசாங்கமே கொள்முதல் செய்தால் அனைவருக்கும் பயன்படுமே! அதை விடுத்து இருக்கிற அரைகுறை கொள்முதல் முறையையும் ஒழித்துக் கட்டுவதால் யாருக்கு பயன்? அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளைத் தவிர? அதனால்தானோ என்னவோ கார்ப்பரேட்டுகள் நவீன சேமிப்புக் கிடங்குகளை கட்டி வருகிறார்கள். சன் குழுமம் கூட தொலைக்காட்சி மட்டும் நடத்தினால் போதாது, சேமிப்புக் கிடங்குகளையும் கட்டட்டுமே என்று அங்கலாய்க்கிறார் அக்கா வானதி. 

தமிழ்மணி 

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....3

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....2










விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....3

விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை சேமித்து வைத்துக்கொண்டு நல்ல விலை கிடைக்கும் போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்றும், விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை எந்தவித தடையுமின்றி இந்தியாவெங்கும் இணையவழி மூலம் நேரடியாக விற்பனை செய்து கொள்ள முடியும் என்றும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்றும், குறைந்த விலையில் நுகர்வோருக்கும் பொருள் கிடைக்கும் என்றும் சட்டத்தை ஆதரிப்போர் தரப்பில் சொல்லப்படுகிறது.

விவசாயத்தில் ஈடுபடுவோரில் 75% பேர் சிறு குறு விவசாயிகள். கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப்பரட்சி, இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட விதை போன்றவைகளால் இயற்கை வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனால் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் பயனடைந்தனர்; விவசாயிகளோ தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். எங்கெல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் நுழைகின்றனவோ அங்கெல்லாம் உணவு உற்பத்தி சங்கிலியின் கண்ணிகள் நொறுக்கப்பட்டு மொத்தமும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றன. உணவு உற்பத்தியில் தற்சார்பை ஒழித்துக்கட்டி, விவசாய உற்பத்தி முதல் மொத்த வணிகம், சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக இருக்கிறது. 

உணவிற்கு இனி உத்தரவாதம் உண்டா?

உயிர் வாழ வேண்டும் என்றால் உணவு அடிப்படைத் தேவை. உணவு கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றால் உயிர் போவதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவர் உயிர் வாழ்வதை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்பதால்தான் உயிர்வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம். 

விலை பொருட்களை விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து இருப்பதால்தான் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவோ, மலிவு விலையிலோ கிடைக்கின்றன. இதை நம்பி இந்தியாவில் சுமார் 76 கோடி பேர் உயிர் வாழ்கின்றனர். அரசே நேரடியாக விளை பொருட்களை கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வருகிறது.  இனி கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கார்ப்பரேட்டுகளே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதற்கும், நியாயவிலைக் கடைகளுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. உணவுக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் 76 கோடி மக்களின் உயிர் வாழும் உரிமையும் ஊசலாடுகிறது. 

வெங்காயம், உருளைக் கிழங்கு, பருப்பு வகைகள், தானியம், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள்  என இனி எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கார்ப்பரேட்டுகள் பதித்து வைத்துக் கொள்ள முடியும். உணவு சேமிப்புக் கிடங்குகள் மூடப்படுவதால் புயல், பெருவெள்ளம்,  நில அதிர்ச்சி, வறட்சி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அரசு கையறு நிலையில்தான் நிற்கும். அதிக விளைச்சல் இருந்தாலும்  பதுக்கலுக்கு வழிவகுத்திருப்பதால் மக்களுக்கு எளிதில் பொருட்கள் கிடைக்காது. பேரிடர் காலங்களில் கார்ப்பரேட்டுகளிடருந்து அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கி மக்களைக் காக்க எந்த அரசும் முன் வராது. எனவே மக்களின் உயிர்வாழும் உரிமை மீண்டும் ஒரு முறை பறிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழ்மணி

தொடரும்

தொடர்புடைய  பதிவுகள்


விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....2

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநில விவசாயிகள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தைக் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடத்தி வருகின்றனர். 96,000 டிராக்டர்கள், 6 மாத காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளுடன் 1.2 கோடி விவசாயிகள் டெல்லியின் நுழைவு வாயில்களை முற்றுகையிட்டுள்ளனர். சிறுவர், முதியோர், ஆண், பெண் என பலரும் குடும்பம் குடும்பமாக
போராட்டக் களத்தில் உள்ளனர்.

இந்திய தேசியக் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி( மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் என பலரும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர்.

ஆங்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் 36 பேர் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அந்நாட்டின் வெளியுறவு செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராட்டத்தை ஆதரித்து பேசியுள்ளார். இந்தியாவின் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தனது கேல்ரத்னா விருதை திரும்பத் தரப்போவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனது பத்மவிபூஷண் விருதை ஏற்கனவே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட
மத்திய அரசு குழுவினர் விவசாயப் பிரதிநிதிகளுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எதுவும் ஏற்படாமல் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதுவரை 33 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர்நீத்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு டிசம்பர் 21 அந்த நாடெங்கிலும் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்கள்

1.விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்
2.விலை பொருள் உறுதி மற்றும் சேவைகள் சட்டம்
3.அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்

விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கும் என்கிறது மத்திய அரசு. இல்லை, இவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் பயனளிக்கும்; விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சிறு வணிகர்களுக்கும் எதிரானது என்கின்றனர் சட்டத்தை எதிர்ப்போர். இவற்றில் எது உண்மை? 

தமிழ்மணி

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

Monday 21 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....1

1850 களின் தொடக்கம்,  கடைசி முகலாயன் ஜாபர் என்கிற பகதூர் ஷா II வின் காலம் அது. முகலாயர்களின் நீதிபரிபாலன முறையை அகற்றி விட்டு பிரிட்டிஷ் சட்டங்களைப் புகுத்த முற்பட்டதோடு மட்டுமன்றி கிறிஸ்தவத்தையும் பரப்ப முயன்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு எதிர்வினையாக உருவெடுத்ததுதான் 1857 மாபெரும் சிப்பாய்க் 'கலகம்.' இதைக் கலகம் என்று சொல்வதை விட ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடுத்த ஒரு விடுதலைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆங்கிலேய இராணுவத்தில் பணியாற்றிய இந்தியச் சிப்பாய்கள் டெல்லியை முற்றுகையிட்டனர். ஒன்று சிப்பாய்களை அடக்கி ஒடுக்கி டெல்லியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் அல்லது இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் ஓட வேண்டும் என்பதுதான் அன்றையச் சூழல். அதைத் தொடர்ந்து டெல்லியே இரத்தக்களறியானது. பின்னாளிலே ஆங்கிலேயப் படையினரால் சிப்பாய்கள் அடக்கப்பட்டனர். பகதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மியச் சிறையிலேயே மாண்டு போனார் என்பது வரலாறு.

வேளாண்மையில் விவசாயிகளின் சுயசார்பு நடைமுறைகளை அகற்றிவிட்டு விவசாயிகளைக் கொத்தடிமைகளாக மாற்றவும், கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கவும் வழிவகுக்கும் புதிய சட்டங்களைப் புகுத்தும் மோடி-அமித்ஷா காவிகளின் காலம் இது. அன்று ஆங்கிலேயருக்கு எதிராக வட இந்திய சிப்பாய்கள் டெல்லியை முற்றுகையிட்டனர். இன்று வட இந்திய விவசாயிகள் மோடி-அமித்ஷா காவிகளுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். 

அன்றைய டெல்லி முற்றுகை 6 மாதம் காலம் நீடித்தது. ஆறு மாத காலத்திற்குத் தேவையான தயாரிப்போடுதான் இன்றைய டெல்லி முற்றுகையும் தொடர்கிறது. 1857 சிப்பாய்களின் டெல்லி முற்றுகையை நினைவுபடுத்துகிறது விவசாயிகளின் இன்றைய டெல்லி முற்றுகை. 

25 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டம் வெற்றி பெறுமா? தோல்வியில் முடியுமா? வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? என்கிற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழத்தான் செய்யும். ஒரு போராட்டம் வெற்றி பெறலாம் அது தோல்வியிலும் முடியலாம். ஆனால் அது ஒரு வரலாற்றுச் செய்தியை உணர்த்தி விட்டுத்தான் செல்கிறது. இன்றைய டெல்லி முற்றுகை நமக்கு உணர்த்துவது என்ன?

இத்தகையச் சூழலில் வேளாண் சட்டங்கள் குறித்தும், டெல்லி முற்றுகை குறித்தும், அதன் அரசியல்  தன்மை குறித்தும் நாம் விரிவாகத் தெரிந்து கொண்டால்தான் இன்றைய டெல்லி முற்றுகை நமக்கு உணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்மணி

தொடரும்.