Friday 23 April 2021

லெனின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்!

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளால் மகத்தான ரசிய சோசலிசப் புரட்சிக்கு வித்திட்ட பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர் மாமேதை லெனின் அவர்களின் 151-வது பிறந்த நாள் விழா 22.04.2021 அன்று கொண்டாடப்பட்டது. 

சென்னை, மகஇக

மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை கிளை சார்பாக நேரு பார்க் மற்றும் சேத்துப்பட்டு கிளைகளில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் நேருபார்க்கில் அமைப்பின் கொடியேற்றி விழாக் கொண்டாடப்பட்டது.
தோழர் வெங்கடேசன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார்.
தோழர் தீபன் பறையிசைத்தார்.
தோழர் தாமரைபரணி அவர்கள் கொடியேற்றி தோழர் லெனின் பற்றி உரையாற்றினார்.முழக்கங்களுடனும்,
இனிப்பும் வழங்கப்பட்டது.




பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை

ஆசான் லெனினின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு SRF பு.ஜ.தொ.மு மணலி, கிளை சார்பாக நடைபெற்ற ஆலைவாயில் கூட்டத்தில் தோழர் #C_வெங்கடாசலபதி (பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை நி.குழு உறுப்பினர்) தோழர் #P_R_சங்கர் (பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை தலைவர்) சிறப்புரையாற்றினார். இதில் கார்ப்பரேட் - காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்க்கப்பட்டது. இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல்: பு.ஜ.தொ.மு SRF மணலி கிளை.




கும்மிடிப்பூண்டி
தோழர் லெனின் பிறந்தநாளை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள #SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம் சார்பாக ஆலைவாயில் கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் #தோழர்_விஜயகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் சிறப்பு தலைவர் #தோழர்_ம_சி_சுதேஷ்_குமார் அவர்கள் கொடியேற்றினார். பின்பு ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர் லெனின் நமக்கு ஏன் தேவைப்படுகிறார் என உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் #தோழர்_விகந்தர் கலந்துக்கொண்டார். இறுதியில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.

புதுச்சேரி, புஜதொமு
மார்க்சிய ஆசான்களில் ஒருவரும், சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைப்பதற்கு பாட்டாளி வர்க்கக் கட்சி அமைப்பு பற்றிய கோட்பாடுகளை வகுத்தளித்தவரும் ரசியப் புரட்சியை தலைமை தாங்கி நடத்தியவருமான தோழர் லெனின் பிறந்த நாள் இன்று. 150 ஆண்டுகளுக்கு முன் பிறந்த "தோழர் லெனின் தற்போது ஏன் தேவை" என விளக்கி புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கங்களில் ஆலைவாயிற்க் கூட்டம் நடத்தப்பட்டது. தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.





வேலூர், புஜதொமு

உழைக்கும் மக்களின் ஆசான் தோழர் லெனின் அவர்களின் 151-வது பிறந்த நாள் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு கொண்டு இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கிளைச் சங்கமான தரைகடை வியாபாரி சங்கங்களின் சார்பாக மீன் மார்க்கெட் மற்றும் அண்ணா கலையரங்களம் ஆகிய கிளைகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. கிளைச் சங்கத் தோழர்களும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.








தருமபுரி, புமாஇமு

திருச்சி, புஜதொமு

மாமேதை தோழர் லெனின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் குட்செட் தோழர்கள் சார்பாக இன்று 22.04.2021 காலை 9 மணி அளவில் குட்செட் தொழிலாளர்கள் அலுவலகத்தில் மாமேதை தோழர் லெனினுடைய படத்திறப்பு விழா மற்றும் 151 வது பிறந்தநாளை கொண்டாடினர். சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் குட்செட் தலைவர் தோழர். குத்புதீன் தலைமையில் தோழர். பாலு வாழ்த்துரை வழங்கினார். சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவரும் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான தோழர். ராஜா வாழ்த்துரை வழங்கி பேசினார்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில் சிறப்பம்சங்களை விளக்கியும் இன்றைய அரசியல் சூழலில் கார்ப்பரேட் காவி பாசிச அபாயத்தை வீழ்த்த வேண்டிய நமது கடமைகளை வலியுறுத்தியும் பேசினார் . இறுதியாக சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் (இரும்பு செட்) பொருளாளர். தோழர் பாபு அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தகவல் :
சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்,
திருச்சி.





ஆட்டோ ஓட்டநர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி

திருச்சியில் ஆ. ஓ. பா. ச சார்பாக தோழர் லெனினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.




திருச்சி, மகஇக
இன்று ஜூலை-22 மாமேதை கம்யூனிச ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 151ம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கிலும் உள்ள பொதுவுடமைவாதிகள் அனைவரும் கொண்டாடும் நாள். ரசிய சோசலிச புரட்சியை நடத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி முதலாளித்துவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தோழர்.லெனின்.
தோழர்.லெனின் பிறந்த இந்நாளை சிறப்பிக்கும் வகையில் புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சியில் 3 இடங்களில் தோழர்.லெனின் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தில்லை நகர் காந்திபுரத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா தலைமையில் ம.க.இ.க தோழர்கள் மற்றும் கலைக்குழு தோழர்கள் பகுதி மக்களுடன் இணைந்து தோழர்.லெனின் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினர்.
கலைக்குழு தோழர்.சத்யா அவர்கள் தோழர்.லெனின் பிறந்தநாள் பற்றியும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அணி திரள்வது பற்றியும் உரையாற்றினார்.
மோடி அரசின் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த அணிதிரள்வோம் என முழக்கங்கள் இடப்பட்டது.
தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.





திருச்சி, புமாஇமு

மாமேதை தோழர் லெனின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜா பேட்டை பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக திருச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் அரிச்சந்திரன் தலைமையில் ,மாவட்ட பொருளாளர் தோழர் வின்சென்ட்ராஜ் மற்றும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு தோழர் லெனின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .
தோழர் லெனினை பற்றி தோழர் அரிச்சந்திரன் விளக்கி பேசினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ,
திருச்சி.
99448478885



கரூர், புமாஇமு
கரூரில் இன்று ஏப்ரல் 22 கம்யூனிச ஆசான் தோழர் லெனின் 151 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கரூர் தாந்தோன்றிமலையில் ஜீவா நகர் என்ற பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி RSYF அமைப்பின் கொடி ஏற்றி , தோழர் லெனின் போட்டோவிற்கு மாலை அணிவித்து , தற்போது நடக்கும் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்த போராடுவோம் என உறுதி ஏற்று , பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது . இதில்
மக்கள் அதிகாரம் , விடுதலை சிறுத்தை கட்சி , திராவிட அமைப்பு , தோழர்கள் மற்றும் ஜனநாயக பொறுப்புணர்வு கொண்ட வழக்கறிஞர்கள் மற்றும்
ஜீவா நகர் பொது மக்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளை சிறப்பித்தனர்
தகவல்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி
கரூர்


தஞ்சை

பாட்டாளி வர்க்க ஆசானகளில் ஒருவரும் மாபெரும் ரஷ்ய சோசலிச புரட்சியின் நாயகருமான தோழர் லெனினின் 151 வது பிறந்தநாள் விழா தஞ்சை இரயிலடியில் 22-042021 அன்று காலை 1030மணிக்கு நடைபெற்றது.
சிபிஐ(எம்) மாநகரச்செயலாளர் தோழர். என். குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னதாக லெனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர். முத்து. உத்திராபதி,
சிபிஜ மாவட்ட பொருளாளர் தோழர். என்.பாலசுப்பிரமணியன்,
சிபிஐ வடக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தோழர். ஆர்.தில்லைவனம்,
மக்கள் கலை இலக்கிய கழகம் மாநகரச் செயலாளர் தோழர். ராவணன்,
மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர். தேவா,
ஏஐடியூசி மாநிலச் செயலாளர் தோழர். சி. சந்திரகுமார்,
ஏஐடியூசி மாவட்ட தலைவர் தோழர். வெ. சேவையா,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மாலெ மாவோ சிந்தனை) மாவட்ட செயலாளர் தோழர். அருண்ஷோரி,
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் தோழர். எம்.பி.நாத்திகன்,
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தோழர். ச.அரவிந்தசாமி,
சிஐடியூ தோழர். மணிமாறன்,
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி தோழர். ஆர் கே. செல்வகுமார் ,
ஆர் எம் பி ஐ மாவட்டச் செயலாளர் தோழர். மதியழகன்,
தஞ்சை நஞ்சை கலைக்குழு அமைப்பாளர் தோழர். சாம்பான், தவத்திரு விசிறி சாமியார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் நன்றி கூறினார்.
உலக நாடுகளின் ஏழை எளிய மக்களிளை பசி பஞ்சம் பட்டினியில் இருந்து பாதுகாப்பது,
மூன்றாம் உலக நாடுகளை அச்சுறுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களை வீழ்த்துவது , தொழிலாளர்கள்,விவசாயிகளின் உரிமைகளை பறிக்கின்ற மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைப்பது,
கருத்துரிமை எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பது,
இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்ட ஆதரவு,
இடதுசாரிகள் ஒற்றுமைக்கும்,
ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்திற்கும் தொடர்ந்து பாடுபடுவது குறித்து உரைகள் முழக்கங்களளின் உள்ளடக்ங்கள் அமைந்திருந்தன. இடதுசாரி அமைப்புகளை சார்ந்த தோழர்களின்ஒற்றுமையயை பறைசாற்றிய நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது
22-04-2021








மதுரை

மதுரை ஒத்தக்கடை பகுதியில்..
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்...
ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில்
தொழிலாளியை தோழர் லெனினாக
தோழர் லெனினை தொழிலாளியாக
எவர்சில்வர்யைமின்னச் செய்யும் தொழிலாளியின் கைகளை...
உலகையே தன் வசப்படுத்த புரட்சிசெய்..

மதுரை ஒத்தக்கடை பகுதியில்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்..
தோழர் லெனின் அவர்களின் 151வது பிறந்தநாளில்..
தொழிலாளர்களிடம் பிரசுரத்தை விநியோகித்து பிரச்சாரம் செய்தனர்..







No comments:

Post a Comment