Saturday 10 April 2021

அரக்கோணம் ஆதிக்கச்சாதிப் படுகொலைக்கு எதிராக சிறுத்தைகளுடன் மக்கள் அதிகாரம்!

 திருச்சி

அரக்கோணம் ஆதிக்கச் சாதிவெறிப் படுகொலை! தடுக்காத தேர்தல் ஆணையமே முழு பொறுப்பு! 

வாக்குப்பெட்டிக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு!

ஓட்டுப்போட்ட மக்களுக்கு வாய்க்கரிசி!

பானை சின்னத்திற்கு வாக்களித்த தலித்துகளின் படுகொலையை தடுக்கத் தவறிய உளவுப்பிரிவு, காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு!

கொலையானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையுடன், தலா 50 லட்சம் இழப்பீடு வழங்கு!

ஆதிக்க சாதி வெறி தாக்குதலில் தப்பி உயிர்பிழைத்து சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு 10 லட்சம்  நிவாரணம் வழங்கு!

கொலைக்குக் காரணமான மணல் கொள்ளையர்கள், பா.ம.க, அதிமுக ஆதிக்கச் சாதி வெறியர்கள் அனைவரையும் வன்கொடுமைச் சட்டத்தில் உடனே கைது செய்!  

மக்களைப் பிளவுபடுத்தி மோதவிடும் ஆதிக்கச் சாதி வெறி, மதவெறிக்  கட்சிகளைத் தமிழக மக்கள் புறக்கணிப்பதுடன் அவற்றைத் தடை செய்யப் போராட வேண்டும் !

என்ற முழக்கத்துடன்...

10.04.2021 காலை திருச்சி அண்ணா சிலை எதிரில் ... .

அரக்கோணம் ஆதிக்கச் சாதி வெறிப் படுகொலையைக் கண்டித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சி  நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ராஜா, ஆனந்த், அம்சா உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்களும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் ம.க.இ.க தோழர்களும் கலந்து கொண்டனர். ம.க இ.க கலைக்குழுவினர் தோழர்.லதா தலைமையில் சாதி ஆதிக்கத்தைக் கண்டித்து எழுச்சியான பாடல்களைப் பாடினர்.



தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

மதுரை

அரக்கோணம் ஆதிக்கச்சாதிப் படுகொலைக்கு எதிராக...

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
மக்கள் அதிகாரம் மதுரை தோழர்கள் கலந்து கொண்டனர்.




கடலூர்

அரக்கோணம் சாதிவெறிப் படுகொலையை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.



செய்தி : 
மக்கள் அதிகாரம் 
கடலூர்

சென்னை

அரக்கோணம், சோகனூர் தலித் இளைஞர்கள் இரட்டைப் படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற சென்னை ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்பு!

அரக்கோணம் சோகனூரில் பா.ம.க - அ.தி.மு.க ஆதிக்கச் சாதிவெறியர்களால் தலித் இளைஞர்கள் இரட்டைப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.கணேசன் தலைமையில் சென்னையில் இருந்து  தோழர்கள் கலந்துகொண்டனர். 

வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகில் காலை 10 மணியளவில்  தோழர்கள் ஒன்றுகூடி  கொடி ஏந்தி, பா.ம.க - அ.தி.மு.க ஆதிக்க சாதி வெறி கும்பல் செய்தப் படுகொலையைக் கண்டித்தும், உழைக்கும் மக்களை ஆதிக்க சாதி, மதவெறி ஊட்டி பிளவுபடுத்தும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், முழுக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.


இராணிப்பேட்டை

அரக்கோணம் ஆதிக்கச்சாதிப் படுகொலைக்கு எதிராக...

இராணிப்பேட்டை, முத்துக்கடையில் 10.04.2021 மாலை, தொல்.திருமாவளவன் தலைமையில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
ஆம்பூர் மக்கள் அதிகாரம் மற்றும் வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.




தருமபுரி

அரக்கோணம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்து 
விடுதலை  சிறுத்தைகள் கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  10.04.2021 அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக
மாவட்டச் செயலாளர். தோழர். ஜெயந்தி தலைமை தாங்கினார். கண்டன உரை:
தோழர். நந்தன், மண்டலச் செயலாளர், விசிக .
வழக்கறிஞர் தோழர்.ஜானகிராமன்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம்.
தோழர்.பாலன், மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. தோழர். பாண்டியன் மண்டல செய்தித் தொடர்பாளர். விசிக  ஆகிய தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 



தகவல்:
மக்கள் அதிகாரம், 
தருமபுரி, 
தமிழ்நாடு. 
9597138959.

No comments:

Post a Comment