Saturday 23 January 2021

டெல்லி போராட்டக் களத்தில் மக்கள் அதிகாரம்!

மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் 41 பேர், அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் டெல்லி சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் போராடும் விவசாயிகளுடன் 2021, ஜனவரி 17-20 தேதிகளில் உடனிருந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு போராடும் விவசாயிகளிடையே உரையாற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழுத் தோழர்கள் பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினார். 

மக்கள் அதிகாரம் தோழர்கள் டெல்லி விவசாயிகளோடு போராட்ட களத்தில் இருந்த செய்திகள் வட இந்திய ஊடகங்களில் விரிவாக எடுத்துச் செல்லப்பட்டன. 

டெல்லி போராட்டக் களத்தில் 
மக்கள் அதிகாரம்












No comments:

Post a Comment