Tuesday, 8 August 2023

வன்னிய இளைஞர்களே; இன்றைய தேவை வாளா? எழுது கோலா?

இந்து மத சாஸ்திரப்படி தற்போது நடப்பது கலியுகம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கலியுகத்தில் சத்திரியர்களும், வைசியர்களும் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். வன்னியர்கள் எல்லாம் சத்ரியர்கள் அல்ல, அவர்களும் சூத்திரர்கள்தான் என்பதை டாக்டர் ராமதாஸ் நன்கு அறிவார். 

தனது வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்களை சத்திரியர்கள் என்று உசுப்பேற்றி தன் பக்கம் தக்க வைத்துக் கொள்கிறார். வன்னியர்கள் மத்தியில் உள்ள படித்த அறிவாளிகள் யாராவது இந்த உண்மையை வன்னியர் சாதி மக்களுக்குப் புரிய வைத்தால் வாள் ஏந்தும் வன்னியர் பிள்ளைகளின் கைகளில் குறைந்தபட்சம் (எழுது) கோல் ஏந்தவாவது உதவும்.

தமிழ்மணி


Sunday, 6 August 2023

கத்தார்: நக்சல்பாரி அரசியல் கலையின் அடையாளம்!

புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொண்டு, தான் பயணித்த காலம் வரை, உயிரையும் துச்சமென மதித்து, பல்வேறு அடக்குமுறைகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு, ஆளும் வர்க்கத்தின் சிம்ம சொப்பனமாய் விளங்கிய இந்தியப் புரட்சிகரப் போராட்ட வரலாற்றில் அழியாத் தடம் பதித்த மாபெரும் புரட்சிக் கலைஞன், நக்சல்பாரிப் பாடகர் கத்தார் மறைந்தார்.

அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியின் சலங்கை ஒலியும், ஆளும் வர்க்கத்தின் காதுகளை அதிரவைக்கும். அவர் மேடையில் பாடி ஆடும் போது, அவர் போர்த்தியிருக்கும் ஆடைகூட உயிர் பெற்று ஆடத் தொடங்கிவிடும். 



காடுகளின் ஊடே, பல மைல் தூரம் கால்கடுக்க நடந்து வந்து அவரது கலை நிகழ்ச்சியைக் காணச் சென்றோர் எண்ணற்றோர்.  அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இலட்சக் கணக்காணோரை தன் மேடை நோக்கி ஈர்க்கும் ஆற்றல் மிகு கலைஞன். அவர் மேடை ஏறி பாடியவரைக்கும் அவர்தான் ஆந்திராவின் 'சூப்பர் ஸ்டார்'. மொழி புரியவில்லை என்றாலும் அவரது தெலுங்குப் பாடல்களைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கும். 

பின்னாளில் அவரது புரட்சிப் பயணத்தில் பெரும் சருக்கல்கள் ஏற்பட்டாலும் நக்சல்பாரி அரசியல் கலையின் அடையாளம் அவர். 

1990 வாக்கில் அவர் திருச்சி உறையூர் கடைவீதியில் சலங்கை கட்டி நடந்து வந்த காட்சிகளும், தில்லை நகரில் அவர் நடத்திய கலைநிகழ்ச்சியும், எனது இரண்டு வயது மகனோடு அவர் கொஞ்சிக் குலாவியக் காட்சிகளும் என் கண்முன்னே வந்து போவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை. 

கோடானுகோடி பாட்டாளி மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மகத்தான கலைஞனே! போய் வா! பொதுவுடமை அரசியல், களத்தில் உள்ளவரை உனது பெயரும் உடன் பயணிக்கும்.

கண்ணீர்த் துளிகளுடன்,

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

Friday, 4 August 2023

பார்ப்பனியம் காட்டுமிராண்டிகளின் கோட்பாடு!

இன்றைய முகநூல் பதிவுகள்

******

இராகுல் எனும் கடப்பாரையால் பார்ப்பனிய சனாதானக் கோட்டையின் காவிக் கற்கள் சிதையத் தொடங்கியுள்ளன. விரைவில் கோட்டையும் தரைமட்டமாகும்!

*****

பார்ப்பனியத்தை பின்பற்றுபவர்கள் கல் நெஞ்சக்காரர்கள். ஆம்! பார்ப்பனியம் காட்டுமிராண்டிகளின் கோட்பாடு.

*****

நீண்டகால தொலை நோக்குப் பார்வையும், கொள்கையும், கோட்பாடும் இல்லாமல் தனி நபர்களால் கட்டமைக்கப்படும் ஒரு சில கட்சிகள், இயக்கங்கள் (சில சாதிய பின்புலத்தோடு) அந்தத் தனி நபரின் மரணத்திற்குப் பிறகு அவையும் மறைந்து போகும். ஒரு சிலருக்கு வாரிசுகள் இருந்தால் சில காலம் முட்டுக் கொடுக்கப்பட்டு அதன் பிறகு அவையும் கரைந்து போகும்.

















*****

சல்லிக் காசுக்கு பெறாத பய சீமான். இன்னுமாடா நம்புறீங்க இவனை?

*****

சீமானுக்கு ஒன்றும் சளைத்தவர் அல்ல திருமுருகன் காந்தி. இவரிடம் தொலை நோக்கு திட்டம் ஏதுமில்லை. பொதுவுடமை அரசியலை நோக்கி அணிதிரள வேண்டிய தமிழ்நாட்டு இளைஞர்களை, 'ஈழம்-கருப்புச் சட்டை, சனாதன எதிர்ப்பு' என்றெல்லாம் பிதற்றி, தன் பக்கம் ஈர்த்துக் காயடிக்கும் வேலையைத்தான் இவர் செய்து வருகிறார். இன்று சீமானின் தம்பிகளில் சிலர் அவரது உண்மை முகத்தை உணர்ந்தது போல திருமுருகனின் உண்மை முகத்தை அவரது சீடர்கள் உணரும் நாள் எந்நாளோ?

*****

நெய்வேலி: "கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பாமக -வைச் சேர்ந்தவர்கள் இல்லை"-அன்புமணி. 

'அமைதியாகக்' போராடிய உங்களைப் போன்ற பாமக-வினர் அன்றே விடுதலை செய்யப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் களத்திலேயே கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டனர். 

அப்ப. பாளையங்கோட்டை சிறையில் இன்று நீங்கள் சந்தித்தது எந்தக் கட்சிக்காரர்களை டாக்டர்?


ஊரான் முகநூல் பதிவிலிருந்து.....









Monday, 3 July 2023

சாவிலும் சாதிக்குச் சவக்குழி வெட்டிய தோழர் ரங்கநாதனுக்கு வீரவணக்கம்!

சாவிலும் சாதிக்குச் சவக்குழி வெட்டிய 
தோழர் ரங்கநாதனுக்கு வீரவணக்கம் !

ஆம்! இன்று அந்தக் கம்யூனிச புரட்சியாளனின் 32 - வது நினைவு நாள்.

32 ஆண்டுகளுக்கு முன்பு 03.07.1991
அன்று அவரது இறுதி உரையில் மகஇக மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் பேசினார்,

"ஒருவன் கம்யூனிஸ்டாக மாறிக் கொள்ளலாம். ஆனால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து மடிவதுதான் வாழ்வில் யாரும் அடைய முடியாதது. அதைத் தோழர் ரங்கநாதன் சாதித்துக் காட்டியுள்ளார்"
என்று அவரது கல்லறையில் முழங்கினார்

இன்று அந்த மாபெரும் மக்கள் தலைவனின் நினைவு நாள். நக்சல்பாரி இயக்கங்கள் வலது இடது சந்தர்ப்பவாதங்களில் சறுக்கி விழுந்த பொழுது, மக்கள் திரள் பாதையை உயர்த்திப் பிடித்து, மக்கள் திரள் அமைப்புகளின் போராட்டங்களை வடிவமைத்து, புரட்சிகர இயக்கங்களுக்கு படை திரட்டிய போராளியின் நினைவு நாள்.

சுற்று வட்டார கிராமங்களில் சாதிய மோதல்கள் ஆனாலும், கிராமங்களுக்கு இடையிலான மோதல்கள் ஆனாலும் பணக்கார கூட்டத்தார் பண்ணையார்களின் நலன்களுக்காக, நிலப்பரப்புகளின் நலன்களுக்காக உழைக்கும் மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளக் கூடாது
என்று தன்னந் தனியாய் தன் தோழர்களை உடன் இணைத்துக் கொண்டு தடுப்பு வேலியாய் நின்று  தடுத்திட்ட மாவீரனின் நினைவு நாள்.

இறுதியாக ஒன்று...
அன்றைய நக்சல்பாரி இயக்கங்கள் இடது தீவிரவாத ஆயுத சாகசவாத நடவடிக்கையில் இறங்கிய போது, அதன் எதிர்வினையாய் காக்கிச் சட்டைப் போலீசின் அடக்கு  முறைகளை நித்தம் நித்தம் எதிர்கொண்டு உயிரைத் துச்சமென நினைத்து, உழைக்கும் மக்களுக்காக தன் இறுதி மூச்சு வரை இருப்பேன் என்று போலீசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும், வர்க்க எதிரிகளுக்கும் அச்சமூட்டிய  அந்தக் காரப்பட்டு கிராமத்தின் வசந்தத்தின் இடி முழக்கம் தோழர் ரங்கநாதன்.

தான் விரைவில் இறந்து விடுவேன் என்று தெரிந்து, தனது உடலைத் தாழ்த்தப்பட்டோர் இடுகாட்டில்தான்  புதைக்க வேண்டும்  என்று உயில் எழுதி வைத்து சாதி வெறிக்கும் சனாதன வெறிக்கும் சவுக்கடி கொடுத்த
உத்தமரின் நினைவு நாள் இன்று.

நச்சல்பாரி புரட்சியாளர் காரப்பட்டு தோழர் ரங்கநாதன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 03.07.2023 அன்று விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டாரம், காரப்பட்டு கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக தோழர் ரங்கநாதன் நினைவு அலுவலகத்தில் திருவெண்ணைநல்லூர் வட்டாரப் பொருளாளர் தோழர் ராவணன் அவர்கள் தலைமையில் கொடியேற்றினார்

மக்களுடன் எளிமையாகப் பேசிப் பழகி அரசியல் படுத்துகின்ற தோழர் ரங்கநாதன் அவர்களின் அழகிய நுட்பத்தைப் பற்றியும் அவருடைய அணுகு முறை பற்றியும் பேசினார்.

பிறகு, திருவெண்ணைநல்லூர் விவசாயிகள் விடுதலை முன்னணியினுடைய வட்டார இணைச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, இன்று காவிப் பாசிசம் எப்படி மக்களை அடக்கி ஒடுக்குகிறது என்பது குறித்து சிறிது நேரம் பேசினார்.

அதன் பிறகு, அனைவரும் பேரணியாக செங்கொடி உயர தோழர்களின் வீரவணக்கம் முழக்கத்தோடு கல்லறை நோக்கிச் சென்றனர்.

கல்லறை அருகில் இருக்கின்ற கொடிக் கம்பத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டாரச் செயலாளர் தோழர் அரிகிருஷ்ணன் தலைமை ஏற்று கொடியேற்றி வைத்தார்.

இறுதியில், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் அம்பேத்கர், 
'சாதி தீண்டாமையை ஒழிப்பதிலும் மற்றும் கூலி ஏழை நடுத்தர விவசாயிகளுடைய உரிமைகளுக்காகவும் எப்படிப் போராடினார், இறுதி வரை சாதி ஒழிப்பில் சமரசம் இல்லாமல் எப்படிப் போராடினார் என்பதை நினைவு கூர்ந்ததோடு, இன்றைக்கு விவசாயம் அழிந்து வரும் சூழலில் விவசாயிகளுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படுவதும், குறிப்பாக மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தில் என்னென்ன பாதிப்பு என்பதைப் பற்றியும், தற்போது திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 எந்தெந்த வகையில் விவசாயிகளை, பொதுமக்களை பாதிக்கின்றது என்பதைப் பற்றியும், மேல்பாதியில் எப்படி அரசே தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறது என்பதைப் பற்றியும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் வழிபாட்டை மறுக்கும் தீட்சிதர் கும்பலை அம்பலப்படுத்தியும், இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்த இருக்கின்ற தஞ்சை மாநாட்டுக்கு அறைகூவல் விடுத்தும் உரையாற்றினார்.

இறுதியாக தோழர்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி தோழர் ரங்கநாதனுக்கும், உழைக்கும் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த நக்சல்பாரி கம்யூனிஸ்ட் தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.

தகவல்: 
விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்டம்











Tuesday, 27 June 2023

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...3

பொதுக் கூட்டம்

"தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் - காவி பாசிசம் மோதி வீழ்த்துவோம்!" எனும் முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழா மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 25.06.2023 அன்று மாலை சென்னை சைதை தேரடியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் இல.பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பு.ஜ.தொ.மு கடந்து வந்த பாதை பற்றி அறிமுக உரையாற்றினார்.  


இல்.பழனி

முகுந்தன்

முன்னிலை

ம.க.இ.க கலைக்குழு பொறுப்பாளர் தோழர் லதா, பு.ஜ.தொ.மு சென்னை உறுப்பினர் தோழர் பேச்சியம்மாள், மக்கள் அதிகாரம் சென்னை பொருளாளர் தோழர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

லதா

பேச்சியம்மாள்

வெண்ணிலா

உரை வீச்சு

பு.ஜ.தொ.மு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தோழர் பிரதீப், அகில இந்திய பொதுச் செயலாளர், IFTU, ஆந்திரா, தோழர் பாலன், பெங்களூரூ உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,  தோழர் கு.பாரதி, துணை பொதுச் செயலாளர் LTUC, தோழர் ஸ்ரீகுமார், தேசியச் செயலாளர் AITUC, தோழர் ஜெயராமன், துணைத் தலைவர் CITU, வடசென்னை, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் தோழர் ராஜூ, மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

லோகநாதன்

பிரதீப்

பாலன்
பாரதி

ஸ்ரீகுமார்

ஜெயராமன்

ராஜூ

காளியப்பன்

கலை நிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தோழர்கள் தோழர் கோவன் தலைமையில் சிறப்பானதொரு கலை நிகழ்ச்சி வழங்கினர்.












ஒரு மாதமாக காலமாக தமிழகமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மேற்கொண்ட விரிவான பிரச்சாரமும், தோழர்களின் கடின உழைப்பும் இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்துள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரை பயன்படுத்திக் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் வினவு மற்றும் செங்கனல் கும்பலைச் சேர்ந்த சிறு கூட்டம் போலிகள் என்பதை இந்த மாநாடு உணர்த்தி உள்ளது. 

மேலும், தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் மற்றும் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு தொழிலாளர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டும் என்பதை இந்த மாநாடு அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...2


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...1