Tuesday 27 June 2023

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...2

மாநாட்டுச் செய்திகள்

தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் - காவி பாசிசம் மோதி வீழ்த்துவோம் ! எனும் தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழா மாநாடு 25.06.2023 அன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.


மலர் வெளியீடு

பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநில தலைவரும், மூத்த தோழருமான தோழர் அ.முகுந்தன் அவர்கள் மலரை வெளியிட தோழைமை அமைப்புகளின் பிரதிநிதிகளும், பெங்களூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

தோழர் காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்

பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்

தோழர் சேகர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி

வழக்கறிஞர் ஜானகிராமன், தலைமைக் குழு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தோழர் அன்பு, மாநில பொதுச் செயலாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

பொதுச் செயலாளர் அறிக்கை

மாநிலத் தலைவர் இல.பழனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் தோழர் முகுந்தன் அவர்களும், முன்னாள் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார் அவர்களும் அறிமுக உரை நிகழ்த்தினர்.

அதன் பிறகு பு.ஜ.தொ.மு வின் 25 ஆண்டுகால தொகுப்பறிக்கையை  மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் மாநாட்டில் முன் வைத்தார்.

மேலும், தொழிலாளர்களை பணி அமர்த்துவதில் தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், தொழிலாளர்களின் மனநிலை, GIG தொழிலாளர்களின் மனநிலை குறித்தும், தொழிலாளி வர்க்கத்தின் முன் நிற்கும் சவால்கள் போன்றவற்றையும் எடுத்துரைத்தார். தொழிலாளர்கள் நிரந்தரம், காண்டிராக்ட், ப்ராஜெக்ட் ஒர்கர்ஸ் போன்ற முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ள பேதங்களை கடந்து பாட்டாளி வர்க்கப் பண்புடன் அமைப்பாகத் திரண்டு சமூகத்தை முன் நகர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாநில பொருளாளர் தோழர் ஜெயராமன் அவர்கள் நிதி அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மாநில துணைத் தலைவர் தோழர் M.K.K சரவணன் அவர்கள் மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார். மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் பொதுக்குழுவால் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மாநில இணைச் செயலாளர் தோழர் K.மகேந்திரன் அவர்கள் நன்றி உரையாற்றினார். 

பழனி

முகுந்தன்

சுதேஷ்குமார்

லோகநாதன்

ஜெயராமன்

சரவணன்

மகேந்திரன்

வாழ்த்துரை

மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய தோழமை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்களும் மாநாட்டில் உரையாற்றினர். 

வழக்கறிஞர் பாலன்

காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்

ஜானகிராமன், PRPC, தலைமைக் குழு

அன்பு, மாநில பொதுச் செயலாளர், RSYF

கோவன், மாநில பொதுச் செயலாளர், மகஇக

சேகர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி

கலை நிகழ்ச்சிகள் 

மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழக கலைக் குழுத் தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மாநாடு நிறைவடைந்தது. 

கலை நிகழ்ச்சி


பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம்

மாலையில் நடைபெற்ற மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சித் தொகுப்பு அடுத்த தொடரில்...

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment