Showing posts with label NDLF. Show all posts
Showing posts with label NDLF. Show all posts

Monday, 29 December 2025

'கவிஞன்' என்ற பெயரில் ஒரு கழிசடை!

"துரை சண்முகம் என்பவர் கீழைக்காற்று பொறுப்பில் இருந்தபோது என்னுடைய தமிழ்க்குடி அரசுப் பதிப்பகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 83 ஆயிரம் கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டு ஏப்பமிட்டார்”

என்று தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். 

அதில் நான்,

“தங்களுக்கு 83 ஆயிரம் ரூபாய். ஆனால், கீழைக் காற்றுக்கு மொத்தமாக 30 லட்சம் ரூபாய்க்கு கடன் வைத்துவிட்டு சென்றதாகச் சொல்கிறார்கள். எங்கே போனது அந்த 30 லட்சம் ரூபாய் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. ஏட்டுக்கட்டுகள் ஒருவேளை கான்கிரீட் கட்டுகளாக மாறி இருக்குமோ? எல்லாம் மரித்துப் போன அந்த பரோபகாரிக்கே வெளிச்சம்”

என  மறுமொழி ஒன்றை பதிவு செய்தேன்.



எனது மறுமொழியின் உண்மைத் தன்மையை இன்றைய கீழைக்காற்று நிர்வாக தரப்பில் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு கீழ்கண்டவாறு அதை உறுதி செய்கிறது.

“கீழைக்காற்றின் நிர்வாகியாக துரை சண்முகம் இருந்தபோது பல பதிப்பகங்களிடமும் பல லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு வெளியேறினார்.

“எமது பதிப்பகத்தின் முன்னாள் நிர்வாகியான துரை சண்முகம் ஒரு நிலுவை பட்டியலை மட்டுமே தந்து விட்டு சென்றார். அந்த நிலுவைத் தொகைக்கு ஏற்ப விற்பனையகத்தில் அந்த நிறுவனத்தின் நூல்கள் இருப்பில் இல்லை.

“நிலுவைப் பட்டியலின்படி பார்த்தால் பல லட்சம் ரூபாய்க்கு நூல்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. அது குடோனில் இல்லை எனும் போது அதை விற்றிருக்க வேண்டும். நூல்களை விற்பனை செய்திருந்தால் அதற்குரிய தொகையை அடைத்திருக்கவும் வேண்டும்.

இதையெல்லாம் சரி பார்ப்பதற்கு துரை சண்முகம் நேர்மையானவராக நடந்து கொள்ளவில்லை”.

பலலட்ச ரூபாய்க்கு நூல்கள் வாங்கப்பட்டு அவை குடோனிலும் இல்லை என்றால், அவை எங்கே போனது என்பதைத்தானே  நானும் கேட்டுள்ளேன். 

ஒரு நேர்மையாளராக இந்த துரை இருந்திருந்தால், எனது கேள்விக்கான பதிலை நேரடியாக சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். அதற்கு மாறாக, கேள்வி கேட்போரின் மீது தகாத சொற்களில் வசைமாறி பொழிவதன் மூலமும், அவதூறுகளை அள்ளி வீசிவதன் மூலமாகவும் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சாதாரண அரசியல் பிழைப்புவாதிகளின் மொழியில் இரு முகநூல் பதிவுகளை வெளியிட்டு ஒன்றை நீக்கியிருக்கிறார் இந்த துரை.

இதோ என் மீது அவர் வாரி இறைத்த கவிதை முத்துக்கள்…

“ஊரான் ஆதி என்ற மருதையனின் கால் நக்கி…,”

மருதையனுக்கும் முகநூலில் நடைபெறும் கீழைக்காற்று தொடர்பான விவாதத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக அவரை இங்கு இழுக்கிறார்? அப்ப, கீழைக்காற்று கணக்கு வழக்கை மருதையன் எழுப்பி இருப்பாரோ என்றுதானே கருத வேண்டி உள்ளது.

“முன்னாள் மகஇக கழிசடை.., 

மகஇக வின் அன்றாட பிரச்சாரம் மற்றும் நடைமுறை வேலைகளில் எதிலும் ஈடுபடாமலேயே, தன்னை மகஇக வின் மாபெரும் தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டு, மடிப்புச் சட்டைகளில் வளம் வந்த இந்தக் கீழைக்காற்று படிப்புச் சட்டை மேனேஜர், என்னை முன்னாள் மகஇக கழிசடை என்று வசைபாடுகிறார். 

நான் யார், மகஇகவில் எனது செயல்பாடு என்ன என்பது குறித்து இழி குணம் என்ற தொடரில் நான் விரிவாகவே பதிவு செய்திருக்கிறேன். மகஇக நடைமுறை வேலைகளில் ஈடுபடாத ஒருவருக்கு தமிழ்மணியை தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே? 

“தலைமுறைக்கு சொத்து சேர்க்க அமைப்பை விட்டு அரசு வேலைக்கு ஓடிவிட்டு…

“இவனைப் போல பிழைக்கத் தெரிந்த பேர் வழி அல்ல…,

“உன்னைப் போல பென்ஷன் புரட்சியாளர் இல்லையடா நான்…,

“தான் திருடி பிறரை நம்பான்…,

எனக்கு எதிராக இந்தக் கவிஞர் பொழிந்த முத்துக்கள் இவை.

1978 வாக்கில் ஒன்றிய அரசுக்குத் சொந்தமான திருச்சி பாரத மிகு நிறுவனத்தில் (BHEL) பணிக்குச் சேர்ந்த நான், 1980 களின் தொடக்கத்தில்தான் மகஇக வில் இணைந்தேன். அதன் பிறகு, மகஇக மாநில செயற்குழு உறுப்பினராக 20 ஆண்டு காலமும், SOC யின் வழிகாட்டுதலில் தொழிலாளர் பிரச்சார குழு மற்றும் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் (BPWU) நிறுவனராகவும் முன்னோடியாகவும் இருந்து செயல்பட்ட காலத்தில், BHEL கேண்டினில் நடந்த ஊழலை கண்டுபிடித்ததற்காகவும், BHEL ஊழியர்களின் போனஸ் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததற்காகவும் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியில் வீசப்பட்டவன் நான்.

மத்திய அரசு வேலையை இழந்து, நான் மீண்டும் புதிய ஊழியராக பாதி ஊதியத்தில் பணிக்கு சேர்ந்ததால் ஏற்பட்ட என்னுடைய பொருளாதார இழப்பு மட்டும் ஒரு கோடியைத் தாண்டும். 5000 ரூபாய் பென்ஷன் வாங்கும் நான், ஏதோ லட்சங்களில் வாங்குவது போல  வயிறெரிகிறார் இந்த துரை. 

உண்மை இப்படி இருக்க தலைமுறைக்கு சொத்து சேர்க்க அமைப்பை விட்டு ஓடி விட்டு நான் அரசு வேலையில் சேர்ந்ததாக பிதற்றுகிறார் இந்த பிச்சுமணி. 

நான் வழக்கறிஞர் பணியை தொடங்கிய காலத்தில், மனித உரிமைப் பாதுகாப்புக் கவுன்சிலை (HRPC) வழக்கறிஞர் போஜகுமாரோடு சேர்ந்து உருவாக்கியதோடு, இன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (PRPC) மாநிலத் தலைமைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக, டிசம்பர் 25 அன்று திருச்சியில் நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (NDLF) மாநாட்டுப் பேரணியில் முழக்கமிட்டு விட்டுத்தான் வந்திருக்கிறேன். எனது மகஇக களப்பணி, போராட்டம் மற்றும் சிறை அனுபவங்கள் குறித்து இழி குணம் மென்நூலில் விரிவாகவே எழுதி இருக்கிறேன்.

“இவன் என்னை பற்றி… அவதூறு செய்வதை முழு நேரத் தொழிலாக… கேவலப்பேர்வலி…

யாரும் இந்த பேர்வழியை கேவலப்படுத்த வேண்டியதில்லை. இவர் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார். இதோ அவரது வாக்குமூலம்...

கூட்டங்களுக்கு அழைக்கும் தோழமை இயக்கங்களின் ஆயிரம் இரண்டாயிரம் பயணச்செலவில்தான் ஐம்பது ஆண்டுகளாக பொதுவாழ்வை கடந்துகொண்டிருக்கிறேன்."

அமைப்பில் செயல்படுகின்ற தோழர்களுக்கு கூட்டங்களில் பேசச் சென்றால் போக்குவரத்துக்கு மட்டுமே பணம் தருவார்கள். ஆனால் இவருக்கு மட்டும் 2000, 3000 யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அமைப்புக்குத் தெரியாமலேயே வாயை வாடகைக்கு விட்டிருப்பாரோ? 

“எங்கள் பகுதியில் நடக்கும்மொய்விருந்து கலாச்சாரத்தில் நானும் இருப்பதால் 2018 ஒரு சிறிய கார் சொந்தமாக வாங்கி அதை உள்ளூரவில் மக்களை சந்திக்கவும் இணையர் பயண பயன்பாட்டுக்கும் வைத்துள்ளேன்….”

பழைய நிலவுடைமை பண்பாட்டுக் கூறுகளை முற்றிலுமாக உடைத்துக் கொண்டு, ஒரு புரட்சிகர பண்பாட்டு நடைமுறையோடு வாழ்பவர்கள்தான் மகஇக தோழர்கள். ஆனால் மகஇக வின் மாபெரும் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மொய் விருந்து கலாச்சாரக் காவலர், மகிழுந்தில் சென்றுதான் புரட்சிப் பணியாற்றுவாராம்! 

“பின்னாலிருந்து தூண்டிவிடும் அரண்மனை நாயே! அடக்கடா வாயை…,

இவர் ஒரு கவிஞராம். அதற்குத்தான் இந்த கவிதை வரியாம்!

இதுநாள் வரை கவிஞன் என்ற போர்வையில் திரிந்த இந்தக் கபட வேடதாரி இன்று கழிசடையாய் அம்பலப்பட்டு நிற்கிறார்! 

தமிழ்மணி

Tuesday, 11 November 2025

கம்யூனிஸ்டுகளின் போர்க்களங்கள்!

சிறுத்தைகளிடமும், சிங்கங்களிடமும், ஓநாய்களிடமும், முதலைகளிடமும் சிக்கிக் கொள்ளும் ஆடுகளும், மாடுகளும், மான்களும் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள போராடுகின்றன. இதே விலங்குகள்கூட அதேவகை விலங்குகள் வேறு இடங்களிலிருந்து தங்களது எல்லைகளுக்குள் பிரவேசிப்பதையும் எதிர்த்துப் போராடுகின்றன. தாங்கள் வாழும் பகுதியை அவைகளுக்கு யாரும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லையென்றாலும், அது அவைகளுக்கான உயிர் வாழும் உறைவிடங்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தனித்தோ அல்லது கூட்டாகச் சேர்ந்தோ உயிர் வாழ்வதற்காக (struggle for survival) நடத்தப்படுகின்றன.

மனிதர்களும் இங்கே போராடுகின்றனர். தாங்கள் உயிர் வாழ்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விலங்குகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்; அதே வேளையில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும் தங்களது உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பண்ணையார்கள் போன்ற மனித விலங்குகளுக்கு எதிராகவும், அது ஆளும் அரசாயினும் எதிர்த்துப் போராடுகின்றனர். 

இந்துமதி

கருத்துரிமை, மனித மாண்பு சிதைக்கப்படும் பொழுதும், அரசியல் உரிமைகள் நசுக்கப்படும், பறிக்கப்படும் பொழுதும் மனிதர்கள் உலகம் முழுவதும் போராடுகின்றனர். முதலையின் வாயில் சிக்கிய மானைக் காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைத்து உதவும் குரங்கைப் போல, மனிதர்களும், சக மனிதர்களின் நலனைக் காக்க, அது தூரதேசமாயினும் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவாகப் போராடுகின்றனர்.

மனித குலத்தின் ஒவ்வொரு சாராரும், தங்களின் நலனுக்காகப் போராடினாலும், பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் அகிலம் முழுக்க கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

தமிழ்நாட்டிலும்கூட எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நிலவுகின்றனவோ, அது தனியார் ஆலைகளானாலும், அரசு நிறுவனங்களானாலும், பள்ளி கல்லூரிகளானாலும், முறைசாரா தொழிலாளர்கள் என்றாலும், வேளாண்மை என்றாலும் அங்கெல்லாம் கம்யூனிஸ்டுகளை மட்டுமே பார்க்க முடியும். 
ஆம்! கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஒடுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காகப் போராடுபவர்கள்.  ஒரு உழைப்பாளி சுரண்டப்படுவதையும், அவனது உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவனுக்கு உணர்த்துபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

போராட்டங்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், வெற்றியின் சுவடுகளை நினைவுகூர்வதன் மூலம், அவர்கள் மேலும் மேலும் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர்.

1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 அன்று நடைபெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சிதான் கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களில் முதன்மையாகத் திகழ்வது. ரஷ்யப் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் குதூகலத்துடன் நினைவு கூர்வதன் மூலம் அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர். 

இந்த ஆண்டு, நவம்பர் 9ஆம் தேதி அன்று, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய இரு அமைப்புகளின் சார்பில் வேலூர், தொரப்பாடி, வள்ளலார் மண்டபத்தில், நடைபெற்ற 109-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி விழா நிகழ்ச்சியில் நானும் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டேன்.

சிறுவர்களின் சிலம்பாட்டம், கலைஞர்களின் பாடல்கள், தலைவர்களின் சொற்பொழிவு என களைகட்டிய இந்த விழாவில்  எழுந்த கரவொலிகள், வேலூர் கோட்டையில் முட்டி மோதி, கீழ்த்திசை மலைகளில் தவழ்ந்த மேகங்களில் ஊடுருவி சிலாகித்தன. 

இந்த விழாவில், இளம் தோழர்  இந்துமதி அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற நேருரையைக் கேட்டபோது ஆனந்தப்பெருக்கில் எனது கண்கள் சற்றே பணிந்து நீரைச் சொரிந்தன. விழாக்கள்கூட கம்யூனிஸ்டுகளுக்கு போர்க்களம்தான். போர்க்களங்களே வீரர்களை அடையாளம் காட்டுகின்றன!

தமிழ்மணி

விழாக் காட்சிகள்






Tuesday, 27 June 2023

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...3

பொதுக் கூட்டம்

"தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் - காவி பாசிசம் மோதி வீழ்த்துவோம்!" எனும் முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழா மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 25.06.2023 அன்று மாலை சென்னை சைதை தேரடியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் இல.பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பு.ஜ.தொ.மு கடந்து வந்த பாதை பற்றி அறிமுக உரையாற்றினார்.  


இல்.பழனி

முகுந்தன்

முன்னிலை

ம.க.இ.க கலைக்குழு பொறுப்பாளர் தோழர் லதா, பு.ஜ.தொ.மு சென்னை உறுப்பினர் தோழர் பேச்சியம்மாள், மக்கள் அதிகாரம் சென்னை பொருளாளர் தோழர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

லதா

பேச்சியம்மாள்

வெண்ணிலா

உரை வீச்சு

பு.ஜ.தொ.மு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தோழர் பிரதீப், அகில இந்திய பொதுச் செயலாளர், IFTU, ஆந்திரா, தோழர் பாலன், பெங்களூரூ உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,  தோழர் கு.பாரதி, துணை பொதுச் செயலாளர் LTUC, தோழர் ஸ்ரீகுமார், தேசியச் செயலாளர் AITUC, தோழர் ஜெயராமன், துணைத் தலைவர் CITU, வடசென்னை, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் தோழர் ராஜூ, மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

லோகநாதன்

பிரதீப்

பாலன்
பாரதி

ஸ்ரீகுமார்

ஜெயராமன்

ராஜூ

காளியப்பன்

கலை நிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தோழர்கள் தோழர் கோவன் தலைமையில் சிறப்பானதொரு கலை நிகழ்ச்சி வழங்கினர்.












ஒரு மாதமாக காலமாக தமிழகமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மேற்கொண்ட விரிவான பிரச்சாரமும், தோழர்களின் கடின உழைப்பும் இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்துள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரை பயன்படுத்திக் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் வினவு மற்றும் செங்கனல் கும்பலைச் சேர்ந்த சிறு கூட்டம் போலிகள் என்பதை இந்த மாநாடு உணர்த்தி உள்ளது. 

மேலும், தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் மற்றும் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு தொழிலாளர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டும் என்பதை இந்த மாநாடு அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...2


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...1