Showing posts with label பாசிசம். Show all posts
Showing posts with label பாசிசம். Show all posts

Tuesday, 11 November 2025

சனாதன (=பாசிச) எதிர்ப்பு பேசுவோர் ஏன் ஒன்றிணைய வேண்டும்?

அலுமினியம், செம்பு, தங்கம், இரும்பு, ஆக்சிஜன், குளோரின் போன்ற தனிமங்களின் தனித்தனியான பயன்பாடு ஒருபக்கம் இருந்த போதிலும், அவை பிற தனிமங்களோடு சேர்ந்து மூலக்கூறுகளாக மாறும்போது அவற்றின் பயன்பாடு மேலும் பரந்த அளவில் அதிகரிக்கின்றன.


11 புரோட்டான் மற்றும் 11 எலக்ட்ரான்களைக் கொண்ட சோடியம் தனிமத்தில், அதன் வெளிவட்டத்தில் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு வேலன்ஸ் எலக்ட்ரானும், அதேபோல 17 புரோட்டான் மற்றும் 17 எலக்ட்ரான்களைக் கொண்ட குளோரின் தனிமத்தில், அதன் வெளிவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் 7 வேலன்ஸ் எலக்ட்ரான்களும் இணைந்து சோடியம் குளோரைடு (NaCl) எனும் மூலக்கூறு உருவாகும்போதுதான் நமக்கு சுவை சேர்க்கும் உப்பு கிடைக்கிறது. இந்தக் கூட்டுக்கு நேட்ரம் மூரியாடிக்கம் (Natrum Muriaticum) என்று பெயர். 

NaCl

இந்த நேட்ரம் மூரியாடிக்கத்திலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோ மருந்து, உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவற்றை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

உயிரற்ற தனிமங்களே மனிதர்களுக்குப் பயன்படும் பொழுது, உயிருள்ள மனிதர்கள் பலரும் சோடியத்தில் உள்ள ஒரு வேலன்ஸ் எலக்ட்ரானைப் போல தனித்தோ, குளோரினில் உள்ள ஏழு வேலன்ஸ் எலக்ட்ரான்களைப் போல ஒரு சிறு கூட்டமாகவோ ஒன்று சேராமல் வனாந்தரத்தில் அனாதியாக எவருக்கும் பயனின்றி வெளிவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். 

சனாதனம் எனும் நச்சுக்கழிவு இந்த நாட்டின் மொத்த செயல்பாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த சனாதனக் கழிவுகளை வெளியேற்ற கரிப்புத் தன்மை கொண்ட நேட்ரம் மூரியாடிக்கம் எனும் உப்பு தேவைப்படுகிறது. அதற்கு, வேலன்ஸ் எலக்ட்ரான்களைப் போல தனித்தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும், சிறுசிறு கூட்டமாக சுற்றிக் கொண்டிருக்கும் அமைப்பு சார்ந்த களப்போராளிகளும் இணைந்து நேட்ரம் மூரியாடிக்கம் எனும் மூலக்கூறாக மாறவில்லை என்றால் சனாதனம் எனும் நச்சுக் கழிவுகளால் இந்த நாடு அழுகிப் போவதைத் தடுக்க முடியாது.

மூன்று, ஐந்து உள்ளிட்ட சிறு சிறு எண்ணிக்கையில் வேலன்ஸ் எலக்ட்ரான்களாக சுற்றிக்கொண்டிருக்கும் இயக்கத்தாருக்கும் இது பொருந்தும். ஒரு தனிமத்தில் உள்ள மூன்று வேலன்ஸ் எலக்ட்ரான்களும், மற்றொரு தனிமத்தில் உள்ள ஐந்து வேலன்ஸ் எலக்ட்ரான்களும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரே மூலக்கூறாக உருவாக முடியும்.

இந்த நிலையிலும், இன்னமும் நீங்கள் வேலன்ஸ் எலக்ட்ரான்களாக தனித்தனியே சுற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்களா அல்லது மூலக்கூறுகளாக ஒன்றிணைந்து மக்களுக்குப் பயன்படப் போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்!

தமிழ்மணி

Tuesday, 27 June 2023

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...3

பொதுக் கூட்டம்

"தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் - காவி பாசிசம் மோதி வீழ்த்துவோம்!" எனும் முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழா மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 25.06.2023 அன்று மாலை சென்னை சைதை தேரடியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் இல.பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பு.ஜ.தொ.மு கடந்து வந்த பாதை பற்றி அறிமுக உரையாற்றினார்.  


இல்.பழனி

முகுந்தன்

முன்னிலை

ம.க.இ.க கலைக்குழு பொறுப்பாளர் தோழர் லதா, பு.ஜ.தொ.மு சென்னை உறுப்பினர் தோழர் பேச்சியம்மாள், மக்கள் அதிகாரம் சென்னை பொருளாளர் தோழர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

லதா

பேச்சியம்மாள்

வெண்ணிலா

உரை வீச்சு

பு.ஜ.தொ.மு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தோழர் பிரதீப், அகில இந்திய பொதுச் செயலாளர், IFTU, ஆந்திரா, தோழர் பாலன், பெங்களூரூ உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,  தோழர் கு.பாரதி, துணை பொதுச் செயலாளர் LTUC, தோழர் ஸ்ரீகுமார், தேசியச் செயலாளர் AITUC, தோழர் ஜெயராமன், துணைத் தலைவர் CITU, வடசென்னை, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் தோழர் ராஜூ, மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

லோகநாதன்

பிரதீப்

பாலன்
பாரதி

ஸ்ரீகுமார்

ஜெயராமன்

ராஜூ

காளியப்பன்

கலை நிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தோழர்கள் தோழர் கோவன் தலைமையில் சிறப்பானதொரு கலை நிகழ்ச்சி வழங்கினர்.












ஒரு மாதமாக காலமாக தமிழகமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மேற்கொண்ட விரிவான பிரச்சாரமும், தோழர்களின் கடின உழைப்பும் இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்துள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரை பயன்படுத்திக் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் வினவு மற்றும் செங்கனல் கும்பலைச் சேர்ந்த சிறு கூட்டம் போலிகள் என்பதை இந்த மாநாடு உணர்த்தி உள்ளது. 

மேலும், தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் மற்றும் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு தொழிலாளர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டும் என்பதை இந்த மாநாடு அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...2


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...1