Showing posts with label காவி. Show all posts
Showing posts with label காவி. Show all posts

Tuesday, 27 June 2023

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...3

பொதுக் கூட்டம்

"தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் - காவி பாசிசம் மோதி வீழ்த்துவோம்!" எனும் முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழா மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 25.06.2023 அன்று மாலை சென்னை சைதை தேரடியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் இல.பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பு.ஜ.தொ.மு கடந்து வந்த பாதை பற்றி அறிமுக உரையாற்றினார்.  


இல்.பழனி

முகுந்தன்

முன்னிலை

ம.க.இ.க கலைக்குழு பொறுப்பாளர் தோழர் லதா, பு.ஜ.தொ.மு சென்னை உறுப்பினர் தோழர் பேச்சியம்மாள், மக்கள் அதிகாரம் சென்னை பொருளாளர் தோழர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

லதா

பேச்சியம்மாள்

வெண்ணிலா

உரை வீச்சு

பு.ஜ.தொ.மு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தோழர் பிரதீப், அகில இந்திய பொதுச் செயலாளர், IFTU, ஆந்திரா, தோழர் பாலன், பெங்களூரூ உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,  தோழர் கு.பாரதி, துணை பொதுச் செயலாளர் LTUC, தோழர் ஸ்ரீகுமார், தேசியச் செயலாளர் AITUC, தோழர் ஜெயராமன், துணைத் தலைவர் CITU, வடசென்னை, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் தோழர் ராஜூ, மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

லோகநாதன்

பிரதீப்

பாலன்
பாரதி

ஸ்ரீகுமார்

ஜெயராமன்

ராஜூ

காளியப்பன்

கலை நிகழ்ச்சி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தோழர்கள் தோழர் கோவன் தலைமையில் சிறப்பானதொரு கலை நிகழ்ச்சி வழங்கினர்.












ஒரு மாதமாக காலமாக தமிழகமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மேற்கொண்ட விரிவான பிரச்சாரமும், தோழர்களின் கடின உழைப்பும் இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்துள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரை பயன்படுத்திக் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் வினவு மற்றும் செங்கனல் கும்பலைச் சேர்ந்த சிறு கூட்டம் போலிகள் என்பதை இந்த மாநாடு உணர்த்தி உள்ளது. 

மேலும், தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டல் மற்றும் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு தொழிலாளர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டும் என்பதை இந்த மாநாடு அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...2


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...1

Wednesday, 26 January 2022

குடியரசு: கொண்டாட்ட நாளை போராட்ட நாளாக மாற்றிய மோடி!

மரபுவழி மன்னராட்சிப் பிடியிலிருந்தோ அல்லது அன்னிய நாட்டுக் காலனி ஆட்சிப் பிடியிலிருந்தோ ஒரு நாடு விடுதலை பெற்ற பிறகு, அது தனக்கான அரசியல் சட்டத்தை வகுத்துக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு மக்களுக்காக ஆளப்படும் ஆட்சியையே குடியாட்சி என்கிறோம்.

ஆனால் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு மக்களுக்கான அரசாகவாச் செயல்பட்டு வருகிறது? பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, சிறுபான்மை பார்ப்பன -பனியாக் கும்பலின் நலனுக்கான ஒரு அரசாகத்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அது குடியரசு நாள் கொண்டாட்டத்திலும் வெளிப்படுகிறது.

விடுதலைப் போரின் வீர மரபுகளை நினைவு கூறும் வகையில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், குயிலி உள்ளிட்ரோரைக் காட்சிப் படுத்திய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளில் வேல் பாய்ச்சி இருக்கிறது மோடி அரசு.

நாராயணகுரு அவர்களை காட்சிப்படுத்திய கேரள அரசின் ஊர்தியையும், சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைக் காட்சிப்படுத்திய மேற்கு வங்க அரசின் ஊர்தியையும் மோடி அரசு தடை செய்து, அம்மாநில மக்களின் உணர்வுகளை இழிவு படுத்தியிருக்கிறது.

இவை, சனாதனக் கும்பல் மேற்கொள்ளும் பண்பாட்டு வடிவிலான  தேசிய இன ஒடுக்கு முறையின் ஓர் அங்கமாகும்.

பொதுவாகவே விடுதலை நாளும், குடியரசு நாளும் ஒரு சடங்காகவே இதுநாள்வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மோடியின் மேற்கண்ட நடவடிக்கையால், இந்த ஆண்டு குடியரசு நாள் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு போராட்ட நாளாகவே மாறியிருக்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்திய மோடிக்கு எதிராக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வேலூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் மோடி அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங்  அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  தோழர் சேட்டு, துணைத் தலைவர் பாபு, தலைவர் செல்வம், ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இறுதியாக சங்க செயற்குழு உறுப்பினர் தோழர் வேல் முருகன் நன்றி உரை கூறினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.









தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்