Tuesday 8 August 2023

வன்னிய இளைஞர்களே; இன்றைய தேவை வாளா? எழுது கோலா?

இந்து மத சாஸ்திரப்படி தற்போது நடப்பது கலியுகம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கலியுகத்தில் சத்திரியர்களும், வைசியர்களும் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். வன்னியர்கள் எல்லாம் சத்ரியர்கள் அல்ல, அவர்களும் சூத்திரர்கள்தான் என்பதை டாக்டர் ராமதாஸ் நன்கு அறிவார். 

தனது வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்களை சத்திரியர்கள் என்று உசுப்பேற்றி தன் பக்கம் தக்க வைத்துக் கொள்கிறார். வன்னியர்கள் மத்தியில் உள்ள படித்த அறிவாளிகள் யாராவது இந்த உண்மையை வன்னியர் சாதி மக்களுக்குப் புரிய வைத்தால் வாள் ஏந்தும் வன்னியர் பிள்ளைகளின் கைகளில் குறைந்தபட்சம் (எழுது) கோல் ஏந்தவாவது உதவும்.

தமிழ்மணி


No comments:

Post a Comment