Friday 4 August 2023

பார்ப்பனியம் காட்டுமிராண்டிகளின் கோட்பாடு!

இன்றைய முகநூல் பதிவுகள்

******

இராகுல் எனும் கடப்பாரையால் பார்ப்பனிய சனாதானக் கோட்டையின் காவிக் கற்கள் சிதையத் தொடங்கியுள்ளன. விரைவில் கோட்டையும் தரைமட்டமாகும்!

*****

பார்ப்பனியத்தை பின்பற்றுபவர்கள் கல் நெஞ்சக்காரர்கள். ஆம்! பார்ப்பனியம் காட்டுமிராண்டிகளின் கோட்பாடு.

*****

நீண்டகால தொலை நோக்குப் பார்வையும், கொள்கையும், கோட்பாடும் இல்லாமல் தனி நபர்களால் கட்டமைக்கப்படும் ஒரு சில கட்சிகள், இயக்கங்கள் (சில சாதிய பின்புலத்தோடு) அந்தத் தனி நபரின் மரணத்திற்குப் பிறகு அவையும் மறைந்து போகும். ஒரு சிலருக்கு வாரிசுகள் இருந்தால் சில காலம் முட்டுக் கொடுக்கப்பட்டு அதன் பிறகு அவையும் கரைந்து போகும்.

















*****

சல்லிக் காசுக்கு பெறாத பய சீமான். இன்னுமாடா நம்புறீங்க இவனை?

*****

சீமானுக்கு ஒன்றும் சளைத்தவர் அல்ல திருமுருகன் காந்தி. இவரிடம் தொலை நோக்கு திட்டம் ஏதுமில்லை. பொதுவுடமை அரசியலை நோக்கி அணிதிரள வேண்டிய தமிழ்நாட்டு இளைஞர்களை, 'ஈழம்-கருப்புச் சட்டை, சனாதன எதிர்ப்பு' என்றெல்லாம் பிதற்றி, தன் பக்கம் ஈர்த்துக் காயடிக்கும் வேலையைத்தான் இவர் செய்து வருகிறார். இன்று சீமானின் தம்பிகளில் சிலர் அவரது உண்மை முகத்தை உணர்ந்தது போல திருமுருகனின் உண்மை முகத்தை அவரது சீடர்கள் உணரும் நாள் எந்நாளோ?

*****

நெய்வேலி: "கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பாமக -வைச் சேர்ந்தவர்கள் இல்லை"-அன்புமணி. 

'அமைதியாகக்' போராடிய உங்களைப் போன்ற பாமக-வினர் அன்றே விடுதலை செய்யப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் களத்திலேயே கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டனர். 

அப்ப. பாளையங்கோட்டை சிறையில் இன்று நீங்கள் சந்தித்தது எந்தக் கட்சிக்காரர்களை டாக்டர்?


ஊரான் முகநூல் பதிவிலிருந்து.....









No comments:

Post a Comment