Showing posts with label வேளாண் சட்டங்கள். Show all posts
Showing posts with label வேளாண் சட்டங்கள். Show all posts

Monday, 27 September 2021

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக வேலூரில் ஆர்ப்பாட்டம்!

  • விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம் என்று சொல்லக்கூடிய விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்.
  • ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் என்று சொல்லக்கூடிய விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.
  • அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்
ஆகிய மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை 05.05.2020 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது மோடி தலைமையிலான சங்பரிவார பாஜக அரசு.

வேளாண் பொருள்களை இனி அரசு கொள்முதல் செய்வதை கைவிடுவதற்கும், விவசாயிகளை ஒப்பந்த முறையில் சிக்க வைத்து அவர்களை பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமைகளாக மாற்றவும், எண்ணெய்-பருப்பு உள்ளிட்ட சில முக்கியமான வேளாண் பொருட்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலிலிருந்து நீக்கி பதுக்கலுக்கும் விலைவாசி ஏற்றத்திற்கும் வழி வகை செய்யும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக விவசாயிகள் விடாப்பிடியாகப் போராடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், தமிழக ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் 27.09.2021 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலுக்கு அறைகூவல் விடுத்திருந்தது.

இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், மக்கள் அதிகாரம், CITU, AITUC, HMS, தொமுச, INTUC, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றன.

இராமச்சந்திரன் (CITU), சிம்புதேவன் (AITUC), சுப்ரமணி (LPF), திருப்பதி (HMS), சேகர் (INTUC) ஆகியோர் தலைமையில் வேலூர் தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான வேலூர் மாநகர "தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தைச்" சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள், தோழர்கள் இப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர்.







தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்

Sunday, 26 September 2021

வேலூரில் பகத்சிங் பிறந்த நாள் விழா!

அன்று வணிகம் செய்ய வந்த பரங்கியர் கூட்டம் நாட்டு வளங்களை அள்ளிச் சென்றது. நாட்டைக் காக்க வீரு கொண்டெழுந்த மக்களை அடக்குமுறைச் சட்டங்களாலும் கொடிய அடக்கு முறையாலும் ஒடுக்க முனைந்தக் கூட்டத்தை அஞ்சி நடுங்க வைத்தான் மாவீரன் பகத்சிங். 

இன்றோ நாட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்த்து, ஒட்டு மொத்த மக்களையும் ஓட்டாண்டியாக்கி வருகிறது பிழைக்க வந்த சங்பரிவார் கூட்டம்.  இந்தக் கூட்டத்தையும் விரட்டியடிக்க வேண்டுமானால் இன்று நமக்கு ஓராயிரம் பகத்சிங்குகள் தேவைப்படுகிறார்கள்.

இதை உணர்த்தும் விதமாக, பகத்சிங் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 27.09.2021 அன்று  வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர "தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம்", புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பழைய பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகாமையில் தோழர் பகத்சிங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

'புதிய வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயத் தோழர்களுக்கு துணை நிற்போம்!' என்று முழக்கத்தை முன்வைத்து அனைவரும் உறுதி ஏற்றனர். சங்கத் தலைவர் தோழர் செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ம.க.இ.க தோழர் இராவணன் அவர்கள், தோழர் பகத்சிங் குறித்தும், வேளாண் சட்டத்திருத்தங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.







தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்



Saturday, 6 March 2021

வேளாண் சட்டங்களை எதிர்த்து நூறாவது நாள்! தொடரும் போராட்டங்கள்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நூறாவது நாளை எட்டி உள்ள நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் 06.03.2021 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கடலூர்

நூறு நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அதைக் கண்டுகொள்ளாத மோடி அரசை கண்டிக்கும் வகையில் கடலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.






தகவல்

மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம்

திருச்சி

அன்பார்ந்த வழக்கறிஞர்களே, பொதுமக்களே,

மக்களின் உணவு உண்ணும் உரிமைக்காக டில்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக பன்னாட்டு நிறுவனங்களின் கைக் கூலி மோடி - பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை ஆதரித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 06.03.2021-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருச்சி நீதிமன்ற வாயில் முன்பு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர்கள் போஜக்குமார், ஆதிநாராயணமூர்த்தி, தாஜுதீன், சங்கர், கென்னடி, பானுமதி, பர்சானா, யாசர், சாருவாகன், ராமச்சந்திரன், கலைச்செல்வி, அரிச்சந்திரன், ஜாகீர், கிளர்ச்சியாளன், பிரசாத், சாகுல், ஆனந்தநாராயணன், ஜீவா, வினோத் மற்றும் தோழர்கள் செந்தில், சபி, கார்த்திக் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கார்பரேட் கைக் கூலி மோடி - பா.ஜ.க-வினரையும் ஜால்ரா போடும் எடப்பாடியையும் விரட்டியடிக்க வேண்டுமென்று முழக்கமிட்டனர்.



தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி கிளை,
தொடர்புக்கு:-9444457892.


Wednesday, 13 January 2021

போகியில் பொசுங்கிய வேளாண் சட்டங்கள்!

கடலூர்

கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக போகி தினத்தில் வேண்டாத பழைய பொருட்களை கொளுத்தும் வகையில் மத்திய பாசிச மோடி அரசின் 3 வேளாண் சட்ட நகலை கொளுத்தப்பட்டது.


தகவல்

மக்கள் அதிகாரம் தமிழ்நாடு புதுவை 

கடலூர், வலையமாதேவி

மூன்று வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து 13/01/2021 போகி பண்டிகையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு கடலூர் மாவட்டம் வலையமாதேவியில் பு.மா.இ.மு தோழர்கள் நடத்தினார்.

தகவல்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

கடலூர், திருப்பாதிரிபுலியூர்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் இல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 3 வேளாண் சட்ட நகலை தீயில் கொளுத்தப்பட்டது.


திருமங்கலம்

திருமங்கலத்தில்,
AIKSCC ஒருங்கிணைக்க...
தோழமை இயக்கங்கள் ஒன்னு கூட..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்துகொண்ட....
போகிப்பண்டிகை திருநாளில்...
பழையன கழிதலும்..
புதியன புகுதலுமான...
விவசாயிகளின் தியாக போராட்ட  மரபை புதியன,
புகுத்தலும்...
வேளாண் விரோத சட்ட நகலை பழையன எரித்தலும்...
மகிழ்வோடு போராட்டாம் நடந்தேறியது!

மற்றொரு அராஜகம் போகிப்பண்டிகை 
கொண்டாடிய தோழர்கள் அனைவரும் கைது!


மதுரை, ஒத்தக்கடை

மதுரை ஒத்தக்கடைப் பகுதியில்
AIKSCC ஒருங்கிணைக்க...
தோழமை இயக்கங்கள் ஒன்னு கூட..
மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்துகொண்ட....
போகிப்பண்டிகை திருநாளில்...
பழையன கழிதலும்..
புதியன புகுதலுமான...
விவசாயிகளின் தியாக போராட்ட  மரபை புதியன,
புகுத்தலும்...
வேளாண் விரோத சட்ட நகலை பழையன எரித்தலும்...
மகிழ்வோடு போராட்டாம் நடந்தேறியது!

மற்றொரு அராஜகம் போகிப்பண்டிகை 
கொண்டாடிய தோழர்கள் அனைவரும் கைது!



தகவல்
மக்கள் அதிகாரம் 
மதுரை மண்டலம்

திருச்சி, காஜாப்பேட்டை

திருச்சி காஜாபேட்டை பகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதிய வேளாண் திருத்தச் சட்ட நகல்களை போகிப்பண்டிகை ஆன இன்று எங்களுக்கும்  எங்கள் நாட்டுக்கும் தேவையில்லாத சட்டமான வேளாண் சட்டத்தின் நகல்களை அப்பகுதி இளைஞர்கள் எரித்தனர்

தகவல் : 
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி 
திருச்சி 
9944847888


திருச்சி பு.மா.இ.மு

திருச்சி, காந்திபுரம்

வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் இன்று காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரம் தலைமையில் தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, சரவணன், லதா, பரமசிவம்,
பாலு மணலிதாஸ், நிர்மலா மற்றும் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்செழியன் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.சம்சுதீன், முத்துக்குமார் கலந்து கொண்டு சட்ட நகலை எரித்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நகலை எரித்த முன்னணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். 



செய்தி
மக்கள் அதிகாரம்
திருச்சி
செல்:9445475157

திருச்சி, அரவானூர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டத்தை எதிர்த்து அதன் சட்ட நகலை திருச்சி அரவானூர் பகுதியில் 
மக்கள் அதிகாரம் மாவட்ட குழு உறுப்பினர்  தோழர் ராஜா தலைமையில் ஊர் பொதுமக்களுடன் இணைந்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


செய்தி:
மக்கள் அதிகாரம்
திருச்சி.

சேந்தநாடு

மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டம் எரிக்கும் போராட்டம் .... இந்தியாவில் வாழக்கூடிய 130 கோடி  மக்கள்  வாழ்வாதாரம் பறிக்கும் திட்டம் ....டெல்லியை முற்றுகை இட்டு   1.40 கோடி மக்கள் மேல் கலந்து கொண்டு நடக்கும் போராட்டம் ....62 நபருக்கு மேல் உயிர் தியாகம் செய்து தொடர் போராட்டம் நடக்கிறது .. மோடி அரசு விவசாயி போராட்டத்தை ஒடுக்கி வருகிறது ....அதையும் முறியடித்தும்  போராட்டம் நடக்கிறது ..மூன்று வேளாண் சட்டம் நடைமுறை ஆனால் விவசாயம் ,விவசாயம் சார்ந்த தொழில் ,விவசாயம் சார்ந்த வர்த்தகம் என எல்லாம் கார்ப்பரேட்டிடம் கொடுக்கப்படும் உணவு ஆதாரம் விற்பனை பண்டமாக மாறும் ,உணவு வாழ்வாதாரம் சுரண்ட படும் .இதன் விளைவு ரேஷன் கடை மூட படும் ,ரேஷன் அரிசி இல்லை , சத்துணவு இல்லை ...உணவு பொருள் விலை தங்க விலைபோல் உயரும் .இது நடைமுறை ஆனால் பட்னி,பஞ்சம் தலை விருத்தி ஆடும் ...80 கோடிக்கும் மேற்ப்பாட்ட மக்களின்  வாழ்வாதாரத்திற்க்கெதிரான ...இந்த மூன்று வேளாண் சட்டங்களை முறியடிக்கும் போராட்டம் ஆதரவாக போகி இன்று வேளாண் சட்டம் நகல் எரிப்பு போராட்டம் சேந்தநாடு கிராம பகுதியில் தோழர் பால்ராஜ் தலைமையில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது ...

தகவல்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி தொடர்புக்கு .9788808110

தருமபுரி

வேளாண் திருத்த சட்டத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து பு.மா.இ.மு சார்பில் தமிழ்நாடு முழுவதும் சில இடங்களில் போகி பண்டிகையான இன்று (13/01/2021) எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் புதிய மூன்று வேளாண் சட்ட நகலை எரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் தோழர் அன்பு பு.மா.இ.மு, மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது‌.



தகவல்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம்.

தஞ்சை


வேளாண்சட்டங்களை தீயிலிட்டு எரித்து நாடெங்கிலும் போகிக்கொண்டாட்டம்.
=======================
வேளாண்சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடிவரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு  அறிவிப்பை ஒட்டி நாடுமுழுவதும்  வேளாண்சட்ட எரிப்பு 13-01-2021 போகிப்பண்டிகை அன்று நடைபெற்றது. . மக்கள் தன்னெழுச்சியாக இதனை சொந்த போராட்டமாக கொண்டாடுவதை சமூக ஊடகங்கள் மூலம் உணர முடிகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர்  நான்கு ரோடு சாலையில் சமவெளி விவசாயிகள்  இயக்க நிறுவுனர் தலைவர் தோழர். பழனிராஜன் தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர். பிரவின் குமார், புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி தோழர். மகேந்திரன்,   ஓய்வு பெற்ற ஆசிரியர் அய்யனாபுரம் ஞாணசம்பந்தன்,  சமூக ஆர்வலர் பூதலூர் ஆர். எஸ். புத்தர் மற்றும்  விவசாயிகள்    ஒருங்கிணைப்பு குழு வேண்டுகோளை ஏற்று   வேளாண்சட்டத்தை தீயிட்டுக்கொளுத்தினர். கைதுசெய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர். 

தஞ்சை மானோஜிப்பட்டியில் மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமையில் அப்பகுதி மக்கள் வேளாண் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்தினர். 

தஞ்சை இரயிலடியில்  விவசாயிகள் போராட்டக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். என்.வி.கண்ணன் தலைமையில் வேளாண்சட்ட எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர். காளியப்பன், 
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரமோகன், 
சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.கே. செல்வகுமார், மக்கள கலை இலக்கியக் கழக மாநகர செயலர் இராவணன், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், 
சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே அன்பு, 
தரைக்கடை சங்க மாவட்ட பொருளாளர் எ. ராஜா, 
எஸ்எஃப் ஐ மாவட்ட செயலர் அரவிந்தசாமி மற்றும் குணா, 
விசிறி சாமியார் முருகன் உட்பட பதிமூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கக்கரக்கோட்டை,  ஒரத்தநாடு,  பேராவுரருணி, பாபநாசம், வெளளாண்சட்ட எரிப்பு நடைபெற்றது. 




தகவல்: மதிவேல்
14-01-2021

மத்திய அரசு கொண்டு வந்துள்ள  மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து அதன் சட்ட நகலை  கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்..

இடம் : தஞ்சை 

மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் உரை


https://youtu.be/dTqcWa7