Saturday 6 March 2021

வேளாண் சட்டங்களை எதிர்த்து நூறாவது நாள்! தொடரும் போராட்டங்கள்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நூறாவது நாளை எட்டி உள்ள நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் 06.03.2021 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கடலூர்

நூறு நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அதைக் கண்டுகொள்ளாத மோடி அரசை கண்டிக்கும் வகையில் கடலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.






தகவல்

மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம்

திருச்சி

அன்பார்ந்த வழக்கறிஞர்களே, பொதுமக்களே,

மக்களின் உணவு உண்ணும் உரிமைக்காக டில்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக பன்னாட்டு நிறுவனங்களின் கைக் கூலி மோடி - பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை ஆதரித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 06.03.2021-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருச்சி நீதிமன்ற வாயில் முன்பு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர்கள் போஜக்குமார், ஆதிநாராயணமூர்த்தி, தாஜுதீன், சங்கர், கென்னடி, பானுமதி, பர்சானா, யாசர், சாருவாகன், ராமச்சந்திரன், கலைச்செல்வி, அரிச்சந்திரன், ஜாகீர், கிளர்ச்சியாளன், பிரசாத், சாகுல், ஆனந்தநாராயணன், ஜீவா, வினோத் மற்றும் தோழர்கள் செந்தில், சபி, கார்த்திக் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கார்பரேட் கைக் கூலி மோடி - பா.ஜ.க-வினரையும் ஜால்ரா போடும் எடப்பாடியையும் விரட்டியடிக்க வேண்டுமென்று முழக்கமிட்டனர்.



தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி கிளை,
தொடர்புக்கு:-9444457892.


No comments:

Post a Comment