Sunday 27 December 2020

தஞ்சை விவசாயிகள் மாநாடு: டிசம்பர் 29-அணிதிரள்வீர்!

திருச்சி

வேளாண் திருத்த சட்டத்துக்கு எதிராகவும், டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பாக டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற இருக்கின்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி ,லால்குடி, மணக்கால் பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக இளைஞர்களிடம் மற்றும் ஊர் பொதுமக்களிடம் விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது.



தகவல்:

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
திருச்சி.

வருகிற இருபத்தி ஒன்பதாம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை ஒட்டி மக்கள் அதிகாரம் சார்பாக  திருச்சியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. ம. க. இ. க கலைக்குழுவின் சார்பாக பாடல்கள் பாடப்பட்டது.



வருகிற இருபத்தி ஒன்பதாம் தேதி. வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து  தஞ்சையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தை ஒட்டி திருச்சி  நத்தர்ஷா பள்ளிவாசலில் மக்கள் அதிகாரம் சார்பாக  நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது.


தகவல்

மக்கள் அதிகாரம் 
திருச்சி

கோத்தகிரி

இன்று 27 /12/ 2020 வேளான் விரோத இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பை அளிக்கும் பாசிச மோடியின் சட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது. கோத்தகிரியில் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் வரும் 29ஆம் தேதி தஞ்சையில் அனைத்து இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு(AIKSCC) சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், ஆதரவு கொடுக்குமாறும் பிரச்சாரம் செய்யப்பட்டது. தஞ்சையை "டெல்லி சிங்கு எல்லையாக" மாற்றுவோம் வாரீர்.




தகவல்
மக்கள் அதிகாரம் 
கோத்தகிரி

தஞ்சை

தஞ்சையில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு 29.12.2020 அன்று
பேரணி - பொதுக்கூட்டம் மக்கள்அதிகாரம் பிரச்சாரம்.
============================
மோடி அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் கடும் பனியில் இரவு பகல் பாராமல் உயிர் தியாகத்திற்கு அஞ்சாமல்  தொடர்ந்து போராடும் விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டத்தை ஆதரித்தும்,  விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு  தஞ்சையில் 29-12-2020 மாலை நடைபெற இருக்கும் மாநிலம் தழுவிய பேரணி பொதுக்கூட்டதை பிரச்சாரம் செய்தும், மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கினைப்பபாளர் தோழர் தேவா தலைமையில் விவசாயிகள் சந்திப்பு இயக்கம் ரெட்டிப்பாளையம், வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி .சீராளூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.  பிரச்சார இயக்கம் தொடர்கிறது. 



தகவல் 
மக்கள் அதிகாரம் 
தஞ்சை

விழுப்புரம்

முதல் நாள்

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் கடும் பனியில் இரவு பகல் பாராமல் உயிர் தியாகத்திற்கு அஞ்சாமல் இன்றோடு 28 நாட்கள் தொடர்ந்து போராடும் விவசாயிகளின் பேர் எழுச்சிமிக்க போராட்டத்தை ஆதரித்தும், இந்த வேளாண் சட்டங்களால் ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் வருங்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் தமிழகத்தில் தமிழக விவசாயிகள் சங்கங்கள், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நவம்பர் 26 ஆம் தேதியில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம் குறிப்பாக 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.

 5 ஆம் தேதி மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி உருவபொம்மை எரிப்புப் போராட்டம்.

 8 தேதி மறியல். 

14, 15 ,16  தேதிகளில் காத்திருப்பு போராட்டம் என தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த காத்திருப்பு போராட்டத்தை மோடியின் அடிமை எடப்பாடி அரசு  போராட்டத்தை ஒடுக்க முயன்றும் தடுத்தும் அனுமதி மறுத்த நிலையிலும் விழுப்புரத்தில் தடையை மீறி  போராட்டம்  நடத்தப்பட்டது. 
இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக 23, 24 ,25 தேதிகளில் தொடர் பிரச்சார இயக்கத்தை விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய வட்டாரங்களிலும் தாலுகாவிலும், நடத்துவது என்ற அடிப்படையில்  முதல் நாளான 23 ஆம் தேதி   தொடர் பிரச்சார இயக்கத்தை கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம், திருச்சிற்றம்பலம், கூட்ரோடு கிளியனூர், மரக்காணம் ஆகிய இடங்களில் நடத்தி முடித்திருக்கிறோம். திட்டமிட்ட இடங்களில் அடுத்தடுத்த நாள் நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.






தகவல்
மக்கள் அதிகாரம், 
விழுப்புரம் மண்டலம்.
94865 97801

2-வது நாள்

இரண்டாவது நாளான 24 ஆம் தேதி  தொடர் பிரச்சார இயக்கத்தை விக்கிரவாண்டி,
கூட்டேரிப்பட்டு,
திண்டிவனம்,
செஞ்சி,
வளத்தி 
ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.




தகவல்
மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம்.
94865 97801

மூன்றாவது நாள்

மூன்றாவது நாளான 25 ஆம் தேதி   தொடர் பிரச்சார இயக்கத்தை கண்டாச்சிபுரம்,
கெடார்,
காணை,
திருவெண்ணெய்நல்லூர்,
அரசூர்
ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.



தகவல்
மக்கள் அதிகாரம்
விழுப்புரம் மண்டலம்.
94865 97801



விவசாயிகள் விரோத ஆட்சிக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒங்கிணைப்புக்குழு நடத்தும் 

#பேரணி_பொதுக்கூட்டம் 
டிசம்பர் 29, திலகர் திடல் தஞ்சை.
அழைக்கிறது மக்கள் அதிகாரம்

தஞ்சை அழைக்கிறது அணிதிரண்டு வாரீர்.

தோழர் சி.ராஜூ,  
மாநில ஒருங்கிணைப்பாளர், 
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு - புதுவை  

https://youtu.be/bTTTeqP3QYo



No comments:

Post a Comment