Showing posts with label Sterlite. Show all posts
Showing posts with label Sterlite. Show all posts

Saturday, 22 May 2021

மக்கள் அதிகாரம்: ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாமாண்டு நினைவஞ்சலி!

 காளையார் கோவில்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நகர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானத் தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலிக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களைத் தியாகிகளாக அறிவித்து துப்பாக்கிச் சூட்டில் பலியான இடத்தில் நினைவுச் சின்னம் அமைத்திடவும், வேதாந்தா நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குச் சட்டமியற்றிடவும், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவல் துறை, வருவாய்த்துறையினருக்கு உரிய தண்டனை வழங்கிடவும் வலியுறுத்தி தமிழக அரசிற்குக் கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.

நன்றி.

செய்தியாளர் மற்றும் தோழர் வைகைசரவணன்
மக்கள் அதிகாரம்
சிவகங்கை மாவட்டம்..

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

மதுரை
மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
தனிச் சட்டம் இயற்ற ஸ்டெர்லைட்டை மூடு!
மூன்றாம் ஆண்டு நினைவு நாள் கோரிக்கை!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மே 22 தூத்துக்குடி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
மக்கள் அதிகாரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மதுரை ஒத்தக்கடை பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி
நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி!
ஆக்சிஜன் தயாரிப்புக்காக திறக்கப்பட்ட தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக இழுத்து மூடவும் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 22.05.2021 காலை 9.30 மணிக்கு திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸ் மேற்கு 80 அடி சாலையில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் நடைபெற்றது.
மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் ஆனந்த் தலைமை வகித்து பேசினார். பின்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழு தோழர் லதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி காந்திபுரம் பகுதி பொறுப்பாளர் தோழர் விடுதலை, மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், அவர்களை சுற்றுச்சூழல் போராளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நிரந்தரமாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி அகற்றவேண்டும், ஆக்சிஜன் வழங்கி தன்னை மக்கள் நல காவலன் போல காட்டிக்கொள்ளும் ஸ்டெர்லைட் கம்பெனி ஒரு கொலைகார கம்பெனி நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மோடி அரசு இந்தியா முழுவதும் மக்களுக்கு குறைந்த நோயிலிருந்து பாதுகாக்காமல் தடுப்பூசி ஆக்ஸிஜன் போன்றவை தயாரிப்பிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையை தடுக்காமலும் இருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரை விடுகின்றனர். இதை கண்டித்து உரையாற்றினர்.

இறுதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராளிகளின் படத்திற்கு மலர்துவியும், ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலிக் கூட்டத்தில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சம்சுதீன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா.பா.சின்னத்துரை, மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் தோழர் கோவன், அமைப்புசாரா தொழிலாளர்கள் இயக்க தோழர் இலியாஸ், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட தலைவர் தோழர் ரமணா, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், தோழர்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தினர் என ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலர் தோழர் ஜீவா நன்றி கூறினார். பின்பு கலந்து கொண்ட அனைவருக்கும், பொது மக்களுக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கி நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி
தொடர்புக்கு:94454 75157






கரூர்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே
வணக்கம் !

மே 22, சனிக்கிழமை காலை 9-00 மணிக்கு, மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு ஜனநாயக இயக்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு மெழுகுவத்தி ஏந்தியும் , ஸ்டெர்லைடை மூட சிறப்பு சட்டம் இயற்று , ஸ்டெர்லைடை அகற்று எனவும் இன்னுயிர் இன்ற தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது ..
கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் நடைபெற்றது
தகவல் :
மக்கள் அதிகாரம்
கரூர்
கடலூர்
மக்கள் அதிகாரம்

கடலூரில் மக்கள் அதிகாரம் ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ல் நச்சு ஆலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 14 பேருக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 22.05.2021 கடலூர் பேருந்து நிலையம் அருகே எஸ்என் சாவடி சிபிஐ அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு தலைமை தாங்கினார். கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் தோழர் கஜேந்திரன். தராசு மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் தோழர் துறைமுகம். துரை வேலு. வெள்ளி கடற்கரை வியாபாரிகள் சங்க தலைவர் தமிழர் கழகம் மாவட்ட தலைவர் பரிவாணன் பேருந்து நிலைய உட்புற வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமார். தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் செல்வம்.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றினார்கள். வட்டார குழு உறுப்பினர்கள் தோழர் ராஜேஷ் செந்தில்குமார் ஆனந்தி உள்ளிட்ட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வேதாந்தா ஆலையை அகற்ற வேண்டும், இதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டெர்லைட்டை அகற்றி அங்கேயே பொதுமக்களுக்கு மருத்துவமனை திறக்க வேண்டும். என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர் தோழர் ரவி நன்றி கூறினார் .

தகவல்
தோழர். பாலு
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர்
கடலூர்





புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மே 22 தூத்துக்குடி நாசக்கார அலையை எதிர்த்து போராடிய மக்களை சுட்டு கொன்ற நாள்...தூத்துக்குடி தியாகளுக்கு 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
செலுத்தப்பட்டது.. நிரந்தரமாக ஸ்டெர்லைட் அலையை மூடக்கோரியும் செந்தநாடு கிராமத்தில் நடத்தப்பாட்ட்து..
தகவல்:
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்
சேத்தியாத் தோப்பு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
சேத்தியாத்தோப்பு கிராமத்தில் நடைபெற்றது.
இதில் தோழர்கள் மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெக்கிளி பகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு 3-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது!
1.சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!
2.உயிர் நீத்த போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவித்து நினைவிடம் அமைத்திட வேண்டும்!
3.பொது மக்களை கொலை செய்த போலீஸ்,வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
4.பொது மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறு!
5.ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீது சுற்றுச்சூழல் மாசுபடுத்திய குற்றத்திற்காக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
6.நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்! என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம்
ஆம்பூர்

கோத்தகிரி
கோத்தகிரி மக்கள் அதிகாரம் சார்பாக , ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
22.05.2021 சனிக்கிழமை அன்று தோழர்கள் தத்தமது இல்லங்களில் சமூக இடைவெளியுடன் நினைவஞ்சலி செலுத்தினர்
குழந்தைகள், பெண்கள் ஆர்வமுடனும் உணர்வுடனும் கலந்து கொண்டனர்.
"நாசகார, கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தங்களது போராட்டம் ஓயாது" என்றும் ,நிரந்தரமாக மூடுவதே உயிர் தியாகம் செய்த, படுகாயமடைந்த மக்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் .
செய்தி: மக்கள் அதிகாரம் கோத்தகிரி.



தேனி
தேனி மாவட்டம், நாராயண தேவன் பட்டியில்,
மக்கள் அதிகாரம் கிளை சார்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்
செலுத்தப்பட்டது.

தஞ்சை

ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் ! தஞ்சாவூர்.!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றக்கோரியப்
போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி தஞ்சையில் இன்று மாலை நடைபெற்றது.
மக்கள் கலை இலக்கியக் கழக மாநகரச் செயலர் இராவணன் தலைமையில், திலகர் திடல் மார்க்கெட் சங்க தலைவர் எம்.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழுஉறுப்பினர் வெ. சேவையா, ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் , மக்கள் அதிகாரம் மாநகரநகரக் குழு உறுப்பினர் அருள் மற்றும் சீனிவாசபுரம் சேவப்பன் தெருவினர் பங்கேற்றனர்.

கடந்த 2018 மே மாதம் மக்கள் வாழ்க்கையை நாசகரமாக்குகின்ற, சுற்றுச் சூழலைக் கடுமையாகப் பாதித்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி தொடர்ந்து நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தில் காவல்துறையால் ஈவு இரக்கமின்றி போராட்டம் நடத்தியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தலில்
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்றவும், சேலம் எட்டுவழிச்சாலை உள்ளிட்டு, காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோகார்ன் திட்டம் உள்ளிட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது,
பல்வேறு மாவட்டங்களில் கால்பதித்துள்ள வேதாந்தா நிறுவனத்தை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்து உறுதியேற்கப்பட்டது.

தகவல்
துரை.மதிவாணன்.
இராவணன்



இணைய வழிக் கூட்டம்

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ தலைமையில் மாலையில் நடைபெற்ற இணைய வழி அஞ்சலிக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தோழர் அய்யநாதன், மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

செய்தித் தொகுப்பு
தமிழ்மணி

Tuesday, 27 April 2021

ஸ்டெர்லைட் திறப்புக்கு எதிராக மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. முதல் அலையின் போது கரோனாவை விரட்டுகிறேன் என்ற பெயரில் மணி அடித்து விளக்குப் பிடித்த கேலிக் கூத்தை தவிர வேறெதையும் ஆக்கப்பூர்வமாக மோடி அரசாங்கம் செய்யாததால் இப்பொழுது இந்தியா திண்டாடிக் கொண்டிருக்கிறது. கரோனா நோய்க்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை சொற்ப அளவில்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நோய் முற்றிய நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் வட இந்தியாவில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிகின்றனர். ஆக்சிஜன் தேவையை உணர்ந்து போதிய முன் ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். ஆனால் இன்றும் கூட ஆக்சிஜன் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை அரசே செய்வதற்கு பதிலாக ஏற்கனவே சுற்றுச்சூழலை நாசப்படுத்தியக் குற்றத்திற்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பதன் மூலம் மறைமுகமாக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை மோடி அரசு செய்து வருகிறது.  எடப்பாடி அரசு இதற்கு ஒத்தூதுவது ஒன்றும் அதிசயம் இல்லை என்றாலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்தது தமிழக மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜனை வேறு எங்கு வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளட்டும், கண்டிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கூடாது என்று தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

எக்காரணத்தைக் கொண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் 26.04.2021 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருவெண்ணைநல்லூர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்று வேதாந்தா சூழ்ச்சிக்கு அடிபணியும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அதன்ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம்அரசூர் நான்குமுனை சந்திப்பில் மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த தோழர்கள் 35 பேர்காவல் துறை அனுமதி தராததால் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்பிறகு கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்         

தகவல்  
மக்கள் அதிகாரம் 
திருவெண்ணநல்லூர் வட்டாரம்


விருத்தாசலம்

ஸ்டெர்லைட்டை திறக்காதே! நிரந்தரமாக மூடு!

என விருதாச்சலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம். 

இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் மணிவாசகம்,

மண்டல ஒருங்கிணைப்பாளர்  தோழர் பாலு,

மாநில ஒருங்கிணைப்பாளர்

தோழர் ராஜூ

மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரம்

கடலூர் மண்டலம்- 81108 15963


திருச்சி

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று !

மத்திய அரசே !

கொலைகார கிரிமினல் வேதாந்தாவிற்கு துணைபோகாதே !

உச்சநீதிமன்றமே!

கொலைகார வேதாந்தா வழக்கைத் தள்ளுபடி செய்!

ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தாவிற்கு ஐந்து மாநிலங்களில் ஆலைகள் இருக்கு மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதற்கு?

என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சியில் இன்று 26.04.2021 காலை 11 மணிக்கு மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மக்கள் அதிகாரம் தலைமையில் ஜனநாயக அமைப்புகள் பங்கேற்று கண்டன முழக்கங்கள் முழங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொடிகளுடன் பெண்கள் சிறுவர்கள் தோழர்கள் என பலரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு  திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் தோழர் ராஜா தலைமையேற்றார். மக்கள் அதிகாரத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஐயா ம.ப சின்னத்துரை ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர்.சம்சுதீன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர்.ஜீவா கண்டன உரையாற்றினர். 

தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர். ரமணா மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் தோழர்.புல்லட் லாரன்ஸ் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் தோழர்.தமிழாதன், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் தோழர்.பசீர் அகமது, மக்கள் உரிமை கூட்டணி தோழர். காசிம், ஜோசப். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர்.கோபி , செயலாளர் மணலிதாஸ் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர்.அரிச்சந்திரன் என ஜனநாயக அமைப்புகள் பெருந்திரளாக  பங்கேற்றனர். ஒரு மணிநேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பரவலாக பொதுமக்கள் நின்று கவனித்தனர் இறுதியாக காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது.

தகவல்
மக்கள் அதிகாரம் 
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு. 94454 75157



தஞ்சை

வேதாந்தா தாக்கல் செய்துள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்! கைது! 

====================

வேதாந்தா தாக்கல் செய்துள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள்அதிகாரத்தின் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடியில்  மக்கள் அதிகாரத்தின் தஞ்சை மாநகர ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமையில் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து.  மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநகரச் செயலாளர் இராவணன், ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன், ஆர்எம்பிஐ மாவட்டச் செயலாளர்  மதியழகன், தஞ்சை நஞ்சை கலைக்குழு சாம்பான், ஆதி தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்  ரங்கராஜ்,  சமூக ஆர்வலர் ஜெயபால், தவத்திரு விசிறி சாமியார்  முருகன், மக்கள் அதிகாரம் நிர்வாகள் பாபு, அருள் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் வெ. சேவையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முறையாக காவல்துறைக்கு அனுமதிக்கு விண்ணப்பித்து கடைசிநேரத்தில் மறுக்கப்பட்டு தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையின் இந்த அனுமதி மறுப்பு கண்டனத்திற்குறியது. நாள்தோறும் இதே இடத்தில்  ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் ஆர்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதி மறுப்பு கண்டனத்திற்குறியது. ஜனநாயக உரிமைகளை மறுத்து  அடக்குமுறையின் மூலம் எந்த ஒரு இயக்கத்தையும்  முடக்கிவிட முடியாது.

தஞ்சை இராவணன் 
26-04-2021

கோத்தகிரி

உயிர் கொல்லி நச்சு ஆலை ஸ்டெர்லைட் ஆலையை புறவாசல் வழியாக திறக்க முயற்சிக்கும் உச்ச நீதிமன்றம,, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக   இன்று கோத்தகிரி பகுதியில்  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... இதில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்பதற்காக எனக்கூறி ஸ்டெர்லைட் திறக்கும் அயோக்கியத் தனத்திற்கும்  எதிராக  கோத்தகிரி பகுதி மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் அவர்கள் உரையாற்றினார்... ஸ்டெர்லைட்டை தமிழகத்தில் இருந்து முழுவதுமாக விரட்டி அடிக்கும் வரை எமது போராட்டம் தொடரும்..

தகவல்
மக்கள் அதிகாரம் 
கோத்தகிரி.


கோவை
ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் மறைமுகமாக வேதாந்தா கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக வேலை செய்யும் உச்ச நீதிமன்றத்தை கண்டிக்கும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய தொழிலாளர் முன்னணி மக்கள் அதிகாரம் மக்கள் கலை இலக்கியக் கழக அமைப்புகளின் சார்பாக கோவை டாடாபாடத்தில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதனை முதலில் அனுமதி தருவதாக இருந்த காவல்துறை பின்பு கைது செய்தது 16 பேர் கலந்துகொண்டு கைதாகினர்..

தகவல்
மக்கள் அதிகாரம்.கோவை


மதுரை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்   ஆக்சிஜன் தயாரித்து தருகிறோம் எனும்,தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால்...

ஸ்டெர்லைட் ஆலையை நயவஞ்சகமாக திறக்காதே..

என்ற முழக்கத்தின் கீழ்..

மதுரை ஒத்தக்கடை பகுதியில்

மக்கள் அதிகாரம் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் தலைமையில்.

ஆர்ப்பாட்டம் நடந்தேறியது.

தோழமை இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

சிபிஐ மதுரை மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர்

தோழர் பூமிநாதன்.

விடுதலை வீரன் மாநில நிதிச் செயலாளர் ஆதித்தமிழர் கட்சி.

தோழர் விஜயகுமார்தமிழ் புலிகள் கட்சி மதுரை புறநகர் மாவட்ட  செயலாளர்.

மக்கள் அதிகாரம் திருமங்கலம் உசிலை ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசை.

நன்றி உரை.

தோழர் ராஜா, மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்
மக்கள் அதிகாரம் 
மதுரை மண்டலம்




கடலூர்

28.04.2021 அன்று கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே உலகக் கிரிமினல் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு!
மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.