Saturday 22 May 2021

மக்கள் அதிகாரம்: ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாமாண்டு நினைவஞ்சலி!

 காளையார் கோவில்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நகர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானத் தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலிக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களைத் தியாகிகளாக அறிவித்து துப்பாக்கிச் சூட்டில் பலியான இடத்தில் நினைவுச் சின்னம் அமைத்திடவும், வேதாந்தா நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குச் சட்டமியற்றிடவும், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவல் துறை, வருவாய்த்துறையினருக்கு உரிய தண்டனை வழங்கிடவும் வலியுறுத்தி தமிழக அரசிற்குக் கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.

நன்றி.

செய்தியாளர் மற்றும் தோழர் வைகைசரவணன்
மக்கள் அதிகாரம்
சிவகங்கை மாவட்டம்..

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

மதுரை
மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
தனிச் சட்டம் இயற்ற ஸ்டெர்லைட்டை மூடு!
மூன்றாம் ஆண்டு நினைவு நாள் கோரிக்கை!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மே 22 தூத்துக்குடி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
மக்கள் அதிகாரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மதுரை ஒத்தக்கடை பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி
நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி!
ஆக்சிஜன் தயாரிப்புக்காக திறக்கப்பட்ட தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக இழுத்து மூடவும் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 22.05.2021 காலை 9.30 மணிக்கு திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸ் மேற்கு 80 அடி சாலையில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் நடைபெற்றது.
மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் ஆனந்த் தலைமை வகித்து பேசினார். பின்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழு தோழர் லதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி காந்திபுரம் பகுதி பொறுப்பாளர் தோழர் விடுதலை, மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், அவர்களை சுற்றுச்சூழல் போராளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நிரந்தரமாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி அகற்றவேண்டும், ஆக்சிஜன் வழங்கி தன்னை மக்கள் நல காவலன் போல காட்டிக்கொள்ளும் ஸ்டெர்லைட் கம்பெனி ஒரு கொலைகார கம்பெனி நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மோடி அரசு இந்தியா முழுவதும் மக்களுக்கு குறைந்த நோயிலிருந்து பாதுகாக்காமல் தடுப்பூசி ஆக்ஸிஜன் போன்றவை தயாரிப்பிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையை தடுக்காமலும் இருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரை விடுகின்றனர். இதை கண்டித்து உரையாற்றினர்.

இறுதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராளிகளின் படத்திற்கு மலர்துவியும், ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலிக் கூட்டத்தில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சம்சுதீன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா.பா.சின்னத்துரை, மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் தோழர் கோவன், அமைப்புசாரா தொழிலாளர்கள் இயக்க தோழர் இலியாஸ், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட தலைவர் தோழர் ரமணா, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், தோழர்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தினர் என ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலர் தோழர் ஜீவா நன்றி கூறினார். பின்பு கலந்து கொண்ட அனைவருக்கும், பொது மக்களுக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கி நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி
தொடர்புக்கு:94454 75157






கரூர்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே
வணக்கம் !

மே 22, சனிக்கிழமை காலை 9-00 மணிக்கு, மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு ஜனநாயக இயக்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு மெழுகுவத்தி ஏந்தியும் , ஸ்டெர்லைடை மூட சிறப்பு சட்டம் இயற்று , ஸ்டெர்லைடை அகற்று எனவும் இன்னுயிர் இன்ற தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது ..
கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் நடைபெற்றது
தகவல் :
மக்கள் அதிகாரம்
கரூர்
கடலூர்
மக்கள் அதிகாரம்

கடலூரில் மக்கள் அதிகாரம் ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ல் நச்சு ஆலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 14 பேருக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 22.05.2021 கடலூர் பேருந்து நிலையம் அருகே எஸ்என் சாவடி சிபிஐ அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு தலைமை தாங்கினார். கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் தோழர் கஜேந்திரன். தராசு மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் தோழர் துறைமுகம். துரை வேலு. வெள்ளி கடற்கரை வியாபாரிகள் சங்க தலைவர் தமிழர் கழகம் மாவட்ட தலைவர் பரிவாணன் பேருந்து நிலைய உட்புற வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமார். தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் செல்வம்.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றினார்கள். வட்டார குழு உறுப்பினர்கள் தோழர் ராஜேஷ் செந்தில்குமார் ஆனந்தி உள்ளிட்ட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வேதாந்தா ஆலையை அகற்ற வேண்டும், இதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டெர்லைட்டை அகற்றி அங்கேயே பொதுமக்களுக்கு மருத்துவமனை திறக்க வேண்டும். என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர் தோழர் ரவி நன்றி கூறினார் .

தகவல்
தோழர். பாலு
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர்
கடலூர்





புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மே 22 தூத்துக்குடி நாசக்கார அலையை எதிர்த்து போராடிய மக்களை சுட்டு கொன்ற நாள்...தூத்துக்குடி தியாகளுக்கு 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
செலுத்தப்பட்டது.. நிரந்தரமாக ஸ்டெர்லைட் அலையை மூடக்கோரியும் செந்தநாடு கிராமத்தில் நடத்தப்பாட்ட்து..
தகவல்:
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்
சேத்தியாத் தோப்பு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
சேத்தியாத்தோப்பு கிராமத்தில் நடைபெற்றது.
இதில் தோழர்கள் மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெக்கிளி பகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு 3-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது!
1.சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!
2.உயிர் நீத்த போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவித்து நினைவிடம் அமைத்திட வேண்டும்!
3.பொது மக்களை கொலை செய்த போலீஸ்,வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
4.பொது மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறு!
5.ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீது சுற்றுச்சூழல் மாசுபடுத்திய குற்றத்திற்காக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
6.நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்! என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம்
ஆம்பூர்

கோத்தகிரி
கோத்தகிரி மக்கள் அதிகாரம் சார்பாக , ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
22.05.2021 சனிக்கிழமை அன்று தோழர்கள் தத்தமது இல்லங்களில் சமூக இடைவெளியுடன் நினைவஞ்சலி செலுத்தினர்
குழந்தைகள், பெண்கள் ஆர்வமுடனும் உணர்வுடனும் கலந்து கொண்டனர்.
"நாசகார, கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தங்களது போராட்டம் ஓயாது" என்றும் ,நிரந்தரமாக மூடுவதே உயிர் தியாகம் செய்த, படுகாயமடைந்த மக்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் .
செய்தி: மக்கள் அதிகாரம் கோத்தகிரி.



தேனி
தேனி மாவட்டம், நாராயண தேவன் பட்டியில்,
மக்கள் அதிகாரம் கிளை சார்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்
செலுத்தப்பட்டது.

தஞ்சை

ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் ! தஞ்சாவூர்.!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றக்கோரியப்
போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி தஞ்சையில் இன்று மாலை நடைபெற்றது.
மக்கள் கலை இலக்கியக் கழக மாநகரச் செயலர் இராவணன் தலைமையில், திலகர் திடல் மார்க்கெட் சங்க தலைவர் எம்.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழுஉறுப்பினர் வெ. சேவையா, ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் , மக்கள் அதிகாரம் மாநகரநகரக் குழு உறுப்பினர் அருள் மற்றும் சீனிவாசபுரம் சேவப்பன் தெருவினர் பங்கேற்றனர்.

கடந்த 2018 மே மாதம் மக்கள் வாழ்க்கையை நாசகரமாக்குகின்ற, சுற்றுச் சூழலைக் கடுமையாகப் பாதித்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி தொடர்ந்து நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தில் காவல்துறையால் ஈவு இரக்கமின்றி போராட்டம் நடத்தியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தலில்
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்றவும், சேலம் எட்டுவழிச்சாலை உள்ளிட்டு, காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோகார்ன் திட்டம் உள்ளிட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது,
பல்வேறு மாவட்டங்களில் கால்பதித்துள்ள வேதாந்தா நிறுவனத்தை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்து உறுதியேற்கப்பட்டது.

தகவல்
துரை.மதிவாணன்.
இராவணன்



இணைய வழிக் கூட்டம்

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ தலைமையில் மாலையில் நடைபெற்ற இணைய வழி அஞ்சலிக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தோழர் அய்யநாதன், மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

செய்தித் தொகுப்பு
தமிழ்மணி

No comments:

Post a Comment