Tuesday 9 March 2021

சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றுக்கு அங்கீகாரம்!

புத்தகக் கண்காட்சியில் வெள்ளி விழா ஆண்டில் கீழைக்காற்று !

09.03.2021, மாலை 6 மணிக்கு பபாப்சியின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கீழைக்காற்று !
தோழர்களே !
கீழைக்காற்று பதிப்பகம் பபாப்சியில் இணைந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அங்கீகரித்து பபாப்சி சார்பில் 09.03.2021 மாலை கீழைக்காற்று உரிமையாளர் தோழர் முகுந்தன் பெயரில் பரிசு வழங்கினர் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
"முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி" என்ற அறிமுகத்தை அனைவரும் ஏற்கும் வகையிலும் மார்க்சிய - லெனினிய அரசியலில் வழுவாமலும், வியாபார நோக்கமில்லாமலும் தமிழகம் தழுவிய அளவில் உள்ள தோழர்களின் உணர்வுபூர்வமான பங்களிப்போடு இந்த நிலையை கீழைக்காற்று அடைந்துள்ளது.
இதில் கிடைக்கும் உற்சாகத்துடன், நமது அரசியல் பணியை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம் !

இவண்

கீழைக்காற்று







No comments:

Post a Comment