Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Friday, 1 September 2023

தோழர் தமிழரசன் நினைவு நாள்!

தோழர் தமிழரசனின் தனித் தமிழ்நாடு கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ள இன்றைய சில தமிழ்த் தேசியர்கள், தோழர் தமிழரசன் அவர்கள் மேற்கொண்ட பொன்பரப்பி வங்கிக் கொள்ளை, திருச்சி நேரு சிலை குண்டு வெடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களா? அத்தகைய நடவடிக்கைகள் இன்றைக்கும் பொருந்துமா? பொருந்தும் என்றால் அத்தகைய நடவடிக்கைகள் இனி இவர்கள் தொடருவார்களா? இல்லை தமிழரசனை துதிபாடிக் கொண்டே வெறும் வாய்ச் சவடாலோடு நிறுத்திக் கொள்வார்களா?

திருச்சி நேருசிலை குண்டு வெடிப்பில் எந்தவிதத் தொடர்பும் இல்லாத தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, பல்வேறு மிரட்டல்கள், சித்திரவதைகளுக்கு உள்ளானது பற்றி இன்று தமிழரசனைப் போற்றி புகழுவோருக்கு ஏதேனும் தெரியுமா?
 
மக்கள் விடுதலைக்காகப் போராடித் தியாகிகளான தோழர்கள் குறித்த நேர்மறை அம்சங்களோடு அவர்களின் எதிர்மறை அம்சங்களையும் பரிசீலிப்பதன் மூலம் மட்டுமே மக்கள் விடுதலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். 
இத்தகைய பரிசீலனைகளினூடேதான் தோழர் தமிழரசன் அவர்களை நினைவுகூற வேண்டும்.

தமிழ்மணி