Showing posts with label ஆரியர் திராவிடர் சிந்துவெளி நாகரிகம் சரஸ்வதி நதி ஆர் எம் ரவி ரிக் வேதம். Show all posts
Showing posts with label ஆரியர் திராவிடர் சிந்துவெளி நாகரிகம் சரஸ்வதி நதி ஆர் எம் ரவி ரிக் வேதம். Show all posts

Monday, 3 March 2025

சிந்து சமவெளி நாகரிகத்தை 'ஐஜேக்' பண்ண ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி!

உலகில் வெள்ளை, மஞ்சள், கருப்பு ஆகிய மூன்று இனங்களில் வெள்ளை இனம்தான் உயர்ந்தது என, நிற அடிப்படையில் பாகுபாடு இருந்ததாகவும், வின்சன்ட் சர்ச்சில் மற்ற இனத்தை நாய் போலக் கருதினார் என்றும் அங்கலாய்க்கிறார் ஆர்.என்.ரவி. 

"ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம். இந்தியா மீது ஆரியர் படை எடுத்தனர்" என்பதெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதாம். அதை பெரியார் தமிழகத்தில் திணிக்க முயற்சித்தாராம். ஆர்.என்.ரவி சொல்கிறார்.

இந்து தமிழ் மார்ச் 4, 2025

சர்ச்சில் ஒருபக்கம் இருக்கட்டும் சார், எங்களைப் போன்று கருப்பாய் இருப்பவர்களைப் பற்றி, பார்ப்பனர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களையெல்லாம் 'சூத்திரவாள்' 'வேசி மக்கள்' என்று, நாயைவிட மிகக் கேவலமானவர்களாக சொன்னது நீங்கள்தானே சார்? உங்கள் கூட்டம்தானே சார்? இன்றும்கூட எங்களை 'சூத்திரவாள்' என்றுதானே சார் விளிக்கிறீர்கள்!

பார்ப்பனர்கள் அனைவரும் இந்தியா முழுக்க ஏன்
வெள்ளையாக இருக்கிறார்கள்? 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்று பார்ப்பனர்கள் பெருமை பேசுவததற்கும் சர்ச்சிலுக்கும் என்ன வேறுபாடு ஐயா ஆர்.என். ரவி அவர்களே? இப்போ என்ன தீடீர் ஞானோதயம்? 

வரலாற்றைத் திருத்துவதுதானே உங்களது வேலை. அறநெறி தந்த வள்ளுவனை இந்து மத ஆன்மீக சன்யாசியாக்க முயற்சிப்பவர்கள்தானே நீங்கள். அதனால்தானே இன்று "சிந்து சமவெளி" நாகரிகத்தை 'சிந்து சரஸ்வதி' நாகரிகம் என்று கூற வேண்டும் என தொல்லியல் தரவுகள் எதுவும் இன்றி மடைமாற்ற முனைகிறீர்கள்.

ஆரியன் என்ற சொல்லை பெரியாரா உருவாக்கினார்? நீங்கள்தானே அந்தச் சொல்லை சமஸ்கிருதத்தில் வேதங்களில் வைத்திருக்கிறீர்கள்? ஆரியர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்று நேற்று வரை நீங்கள்தானே பெருமை பேசிக் கொண்டிருந்தீர்கள்? 

அப்புறம், ஆரியர்கள் என்றால் 'ஆசிரியர்கள், சிறந்தவர்கள்' என்பதைக் குறிப்பிடவே 'ஆரியர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று புது 'டிக்ஷனரி' எழுதுகிறீர்கள். அது எப்படி சார், பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருந்தார்கள்? இதற்கு யார் சார் காரணம்? வெள்ளைத் தோல் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக ஆவது இருக்கட்டும், நாலு எழுத்துக் கூட்டிப் படிப்பதற்குக்கூட முடியாமல் போனதற்கு யார் சார் காரணம்? 

கடைசியா "அனைவரும் சமம், அனைவரும் ஒரே குடும்பம்" என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதாகச் சொல்கிறீர்கள். இருக்கட்டும். இருக்கட்டும். அப்படியானால் இந்துக் கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் விசயத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்று ஏன் சார் அடம்பிடிக்கிறீர்கள்? 

நீங்கள் மட்டுமே ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது சார். இப்பொழுது நாங்களும் ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக வளர்ந்துவிட்டோம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் ரவி சார். 

தமிழ்மணி