Saturday 1 May 2021

தமிழகம் - புதுச்சேரியில் மே நாள் எழுச்சி!

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகமெங்கும் மே நாள் விழா மிக எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.

கும்மிடிப் பூண்டி

MHH ஆலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில்மே நாள் கூட்டம்

லிட்விண்ட் ஸ்ரீராம் ஆலையில்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில்  மே நாள் கொடியேற்றம்

SRF

திருவள்ளூர் மாவட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம் சார்பாக‌ நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில்,‌ சங்கத்தின் தலைவர் #தோழர்_மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் #தோழர்_விகந்தர் கொடியேற்றினார்.
அதன்பிறகு சங்கத்தின் சிறப்பு தலைவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினருமான #தோழர்_சுதேஷ்‌_குமார் சிறப்புரையாற்றினார். அதன்பிறகு முழக்கமிட்டு, மே நாள் சூளுரை ஏற்கப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.



சென்னை
சென்னை #சத்தியபாமா_கிளை சங்கத்தில் புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் டெக்னிசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் #இரா_ஜெயராமன் கொடியேற்றினார். தலைவர் தோழர் #இல_தெய்வீகன் உரையாற்றினார்.
புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் டெக்னிசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் #தோழர்_சிவசங்கரன் கொடியேற்றினார். ஆலோசகர் #தோழர்_இல_பழனி உரையற்றினார்.


வேலூர்
வேலூர் மாவட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தரைக்கடை வியாபாரிகள் சங்கம், மீன் மார்க்கெட் மற்றும் அண்ணா கலையரங்கம் கிளைகளில் மே நாள் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
தோழர் சுப்ரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் தோழர் சேட்டு கொடியேற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் இராவணன் மற்றும் அகிலன் சிறப்புரையாற்றினர். கிளைச் சங்கத் தோழர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர் மாவட்டம்


கடலூர்

மே நாள் தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி வடலூர், மற்றும் நெய்வேலி கடைவீதி பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மண்ணையும் மக்களையும் சூறையாடும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்
9788808110


வடலூர்
மே 1 நாள் சூளுரை:
மண்ணையும், மக்களையும் சூறையாடும் கார்ப்பரேட் -காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
வடலூர் பேருந்து நிலையம் அருகே காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை:
தோழர் மணியரசன்.
கண்டன உரை:
தோழர் வெங்கடேசன் (மாவட்ட செயலாளர்)
புரட்சிகர மாணவர்கள்- இளைஞர் முன்னணி, கடலூர் மாவட்டம்.
தோழர் பாலு
(மண்டல ஒருங்கிணைப்பாளர்) கடலூர்.
மக்கள் அதிகாரம்
தோழர் ரவி
(மண்டல ஒருங்கிணைப்பாளர்) மயிலாடுதுறை
தோழர் சண்முகம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. விருதாச்சலம்
நன்றி உரை :
தோழர் பால்ராஜ்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்டம்.
தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு:
97888 081100


கோவை
கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மே தினத்தில் ஜி டி என் நிறுவனத்தில் தோழர் வெள்ளைச்சாமி அவர்கள் கொடியேற்றினார் , என் டி சி நிறுவனத்தில் மண்டல சங்க செயலாளர் தோழர் ஜெகநாதன் அவர்கள் கொடியேற்றினார். மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் கிளை நிறுவனத்தில் காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடத்தப்பட்டது. எஸ் ஆர் ஐ கிளை தலைவர் கோபிநாத் கொடியேற்றினார்.
பின்னர் கோவை மாவட்ட அலுவலகத்தில் அரை கூட்டம் நடத்தப்பட்டது. அரை கூட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் தோழர் கோபிநாத் அவர்கள் தலைமையேற்று நடத்தினர். கூட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தோழர் பாலமுரளி அவர்களும், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் தோழர் சித்தார்த்தர் அவர்களும், மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் கணேசன் அவர்களும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் தோழர் லோகநாதன் அவர்களும் உரையாற்றினார்கள்.
இறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் திலீப் அவர்கள் நன்றியுரையாற்றினார்.



கோத்தகிரி
01/05/2021 மே தின உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றம் மற்றும் இனிப்பு வழங்கள்ஆகியவை நடைபெற்றது.

இதில் வாகனப் பிரிவு சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் புவனேஷ் அவர்கள் கொடியேற்றினார். தலைவர் தோழர் சுப்பிரமணி அவர்கள் தொடக்க உரையாற்றினார். மக்கள் அதிகாரத்தின் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ஆனந்தராஜ் அவர்கள் மே தினம் என்பது போராட்டத்திற்கான நாள், கொண்டாடுவதற்கான நாள் அல்ல, என்பதை விளக்கி கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்தாமல் நமது எந்த பிரச்சினையும் தீரப் போவதில்லை என்பதை விளக்கியும் சிறப்புரையாற்றினார். இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை போராட்டத்தின் அறைகூவலாக தெரிவித்துக்கொள்கிறோம்...

செய்தி : மக்கள் அதிகாரம், கோத்தகிரி.

திருச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக திருச்சியில் மே நாள் ஆர்ப்பாட்டம்.


தஞ்சை

மேதினி போற்றும் மேதின (2021) நிகழ்ச்சிகள்.
==================
கரோனா தொற்று இரண்டாம் அலை உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடையில் கூடும் கூட்டம் குறித்து வாய்திறக்காத காவல் துறை கொரோனாவை காரணங்காட்டி வியாபாரிகளை ஒன்பது மணிக்கே கடையை மூடச்சொல்லி நெருக்கடி கொடுக்கிறது. சுகாதாரத்துறை செயல்படுகிறதா என்பது கேள்விகுறியாகவே உள்ளது. மக்களின் பிரச்சனைகள் குறித்து யாரும் பேசிவிடக்கூடாது என்பதில் காவல்துறை மிக கவனமாக உள்ளது. கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைபோடுவது மூலம் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்று காவல்துறை நம்புகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தஞ்சையில் உழைப்பாளிகள் மேதின நிகழ்சிகளை நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தஞ்சையில் நடைபெற்ற மேதின நிகழ்ச்சிகள் குறித்த ஒரு பதிவு. .
******
தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் காலை 09.00 மணிக்கு மாநகர செயலாளர் தோழர். இராவணன் தலைமையில் மகஇக தோழர். பாபு கொடியேற்றினார். மக்கள் அதிகாரம் மாநகர ஒருங்கிணைப்பாளர் தோழர். தேவா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று மேதின சபதமேற்றனர்.
தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தம் செய்தை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பெறக்கோரியும் பாசிச மோடி அரசை கண்டித்தும், கார்ப்பரேட் காவி பாசிசத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியும்,
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும்,
தொழிலாளர்கள் விவசாயிகள் ஒற்றுமையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பபட்டன.
*******
மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்துக் கழகம், மின்சாரம், வங்கி, நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார்மய ஆபத்திலிருந்து பாதுகாக்கவும், மின்சார சட்டத் திருத்தம் சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம் ஆகியவற்றை திரும்பப் பெறக்கோரியும், கார்ப்பரேட் காவிபாசிச ஆபாயத்திலிருந்து நாட்டைபாதுகாக்க ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும் உறுதியேற்கப்பட்டு கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற் சங்கம் மேதின கொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கரந்தை போக்குவரத்து கழக புறநகர் கிளை முன்பு நடந்தது.
மத்திய சங்க தலைவர் ஜி சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கக் கொடியினை ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி. அப்பாத்துரை ஏற்றிவைத்தார்.

ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்து ஏஐடியூசி சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன்சிறப்புரை ஆற்றினார் .
பொதுச்செயலாளர் டி. கஸ்தூரி, துணைச் செயலாளர் டி.சீனிவாச தினேஸ்
தொழிற்சங்க நிர்வாகிகள் பீர்தம்பி, ஞானசேகரன், சுப்பிரமணியன், தங்கராசு, ரங்கதுரை, இளங்கோவன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநகர செயலர் இராவணன் சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*******
தஞ்சாவூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியையும், மாநில செயலாளர் சி.சந்திரகுமார் ஏஐடியூசி கொடியையும் ஏற்றி வைத்து உரையாற்றினார். ஏஐடியூசி மாவட்ட தலைவர் தோழர் வெ.சேவையா, மாவட்ட செயலர் தில்லைவனம் மற்றும் தோழர்கள் ஆர்.பி முத்துக்குமார், ஆர்.கே செல்வகுமார், பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி அலுவலகத்திலும், சிஐடியு சார்பு சங்கங்களிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இவை தவிர ஏஐடியூசி ஆட்டோ சங்க சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.செந்தில் நாதன், கட்டுமான சங்க சார்பில் பி.செல்வம், மாலை நேர காய்கறி அங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் பாப்பாயி ,

டாஸ்மாக் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கோட்டீஸ்வரன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜ்,

என் எஃப் பி டி இ -பி எஸ் என் எல் சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் சின்னப்பா ஆகியோர் கொடிகளை ஏற்றினர்.
01-05-2021




புதுச்சேரி
#புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இயங்கும் இணைப்பு சங்கமான #கோத்ரேஜ் சங்கத்தின் மே நாள் கொடியேற்றம் நடைப்பெற்றது. அதனை‌ தொடர்ந்து மே நாள் சூளுரை ஏற்று கலந்து கொண்ட அனைத்து தொழிலாளர்களும் முழக்க ஆர்ப்பாட்டத்துடன், ஆலை வாயிலில் கூட்டம் நடத்தப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான #ஸ்வஸ்திக் சங்கத்தின் சார்பில் மே நாள் கொடியேற்றத்துடன், மே நாள் சூளுரை ஏற்று அனைத்து தொழிலாளர் கலந்து கொண்டு முழக்க ஆர்ப்பாட்டம் ஆலை வாயிலில் நடத்தப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


#புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை சங்கமான #பிரைட் சங்கத்தின் சார்பில் மே நாள் கொடியேற்றத்துடன் மே நாள் சூளுரை ஏற்று அனைத்து தொழிலாளர் கலந்து கொண்டு முழக்க ஆர்ப்பாட்டம் ஆலை வாயிலில் நடத்தப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


புதுச்சேரியில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான #வேல்_பிஸ்கட் சங்கத்தின் சார்பில் மே நாள் கொடியேற்றத்துடன், மே நாள் சூளுரை ஏற்று அனைத்து தொழிலாளர் கலந்து கொண்டு முழக்க ஆர்ப்பாட்டம் ஆலை வாயிலில் நடத்தப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


#புதுச்சேரி, திருபுவனையில் உள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அலுவலகத்தில் மே நாள் கொடியேற்றத்துடன், மே நாள் சூளுரை ஏற்று அனைத்து தொழிலாளர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
அதன்பிறகு இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று #திருபுவனை_தொழிற்பேட்டையில் உள்ள கிளை மற்றும் இணைப்பு சங்க வாயிலில் கொடியேற்றப்பட்டது.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


இணைய வழிக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இணையவழிக்கூட்டம் மாலையில் நடைபெற்றது. திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.



1 comment:

  1. அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுப்பாக அளித்தற்கு வாழ்த்துகள் !

    ReplyDelete