Friday, 2 May 2025

சோளக்கொல்லை பொம்மை!

'பெல் சிட்டி: ஊழல்வாதியின் பக்கம் நின்று, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் திராணி இன்றி அஞ்சி நடுங்கி அமைப்பை விட்டு ஓடிய ஒரு சிறுகும்பல் பக்கம் ஒட்டிக் கொண்ட, ஒரு கிளையின் உறுப்பினரான  ராமலிங்கம் என்ற ஒற்றை நபர் மகஇக பெயரில், தோழர் கோவன் உள்ளிட்ட மகஇக ஒட்டுமொத்த மாநிலத் தலைமையையும் அமைப்பிலிருந்து  நீக்கியதாக வீனாப்போன வினவு தளத்தில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

கோவனின் ரசிகர் ராமலிங்கம், 

ஜனநாயகம் பற்றி பீற்றித் திரியும் இந்தக் கும்பல் கடைபிடிக்கும் ஒற்றை நபர் ஜனநாயகம் என்பது ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானதொரு  புதுவகை. 

நிற்க, கோவன் கோவையில் ஆணாதிக்கத் திமிரோடு பேசினார் என்று ஒரு செய்தியை அள்ளி இறைத்திருக்கிறது இந்தக் கும்பல். செய்வது கலைப்புவாதம் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத மூடர் கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தோழர்கள் மருதையன், கோவன் உள்ளிட்டோரின் கடும் உழைப்பால் உருவான மகஇக வின் பாடல்கள் உள்ளிட்ட படைப்புகளுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார் மேடைக்கு முன்னால் அமர்ந்து பல் இளித்த இந்த இரசிகர்.

பிரம்மன் படைத்ததை அழிப்பதே ஈசனின் வேலை என்பது புராணங்களில் மட்டும் அல்ல, பலரின் கடும் உழைப்பால் உருவான மகஇக அமைப்பையும் அழிக்கப் புறப்பட்டவனும் ஒரு 'கோட்டீஸன்'தான் என்பது இன்றைய நிஜக்கத்தை.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்பதை முழுமையாகக்கூட உச்சரிக்கத் தெரியாத ஒரு நபர், அறிக்கை எல்லாம் தயாரிக்கிற அளவுக்கு ஆற்றல் உள்ளவர் அல்ல.  எல்லாம் அந்த ஈசன் செயலே! பாவம் சோளக் கொல்லை பொம்மையாய் ராமலிங்கம்!

தமிழ்மணி 

No comments:

Post a Comment