Friday 25 August 2023

நாங்குநேரி பள்ளி மாணவன் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலூரில் மகஇக ஆர்ப்பாட்டம்!

இந்து மதமும் சாதிய வன்மமும்

இந்து மதம் இருக்கும் வரை சாதியும் இருக்கும். சாதி இருக்கும் வரை தீண்டாமையும் இருக்கும். தீண்டாமை என்பது மேலிருந்து கீழாக, ஒவ்வொரு சாதியப் படிநிலையிலும் கடைபிடிக்கப்படுகிறது. அது கீழே செல்லச் செல்ல மிகவும் கொடூரமாக வெளிப்படுகிறது. 

அதுதான் நாங்குநேரியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த சக மாணவனையே, இடைநிலைச் சாதியினரான மறவர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் கொடும் ஆயதங்களைக் கொண்டு வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தக் காரணமாய் அமைந்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் இந்து மதத்தின் சாதிய வன்மத்தின் உச்சபட்ச வெளிப்பாடு. இக்கொடியத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் எதிர்காலத்தில் இத்தகையத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியும். 

கிராமமோ நகரமோ, ஒருவன் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு இந்துவாக வாழ்கின்ற போது அவன் உள்ளத்தில் தீண்டாமை தவிர்க்க முடியாமல் குடி கொண்டிருக்கும். சாதி மதச் சடங்கு சம்பிரதாயங்களை ஒரு இந்து தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் வரை,  இந்து மத உணர்வும், சாதி-தீண்டாமை உணர்வும் ஒருக்காலும் மறையாது. மாறாக மேற்கண்ட சடங்கு சம்பிரதாயங்களைத் தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்காமல், அதிலிருந்து மாறுபட்டு வேறொரு பண்பாட்டு வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் போது சாதி, மத உணர்வும், தீண்டாமை உணர்வும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

இந்து மத-சாதி-தீண்டாமை ஒழிப்பு என்பது  அவ்வளவு எளிதானதல்ல; அது ஒரு நீண்ட நெடியப் போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் உள்ளடக்கியதாகும்.

நாங்குநேரி தாக்குதலைக் கண்டித்து வேலூரில் மகஇக ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம்,  நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை மீதான சாதிவெறித் தாக்குதல், சக மாணவர்களே வீடு புகுந்து தலை முதல் கால் வரை செதில் செதிலாக வெட்டிய கொடூரத்தைக் கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்  ஒருங்கிணைப்பில்  25.08.2023, வெள்ளி மாலை 5.30 மணிக்கு வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம், தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்கம் (இணைப்பு/பு.ஜ.தொ.மு), தமிழ்நாடு இளைஞர் கட்சி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்புகள், கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் உணர்வு பூராவமாகப் பங்கேற்றனர்.


மகஇக, வேலூர் மாவட்டத் தலைவர் தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மகஇக மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாநகர-மாவட்டச் செயலாளர் தோழர் பிலிப், விசிக திருப்பத்தூர்-வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சஜன் குமார், கிருத்துவ சமூக நீதிப்ண பேரவை மாநில துணைச் செயலாளர் தோழர் ஆல்பர்ட் ஜெயராஜ், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தலைமைக் குழுத் தோழர் சா.குப்பன், AICCTU மாவட்டத் தலைவர் தோழர் ஏழுமலைதோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலசா சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் தோழர்.செல்வம்மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தோழர் கார்த்திக், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி ஆகியோர் நாங்குநேரி தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன உரையாற்றினார். 

இடையிடையே, சாதி மற்றும் காவிப் பாசிசத்திற்கெதிரான பாடல்கள், சிறுவர்கள் பங்கேற்புடன் பாடப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எழுச்சிகரமான முழக்கங்கள் உணர்வு பூர்வமாக எழுப்பப்பட்டன. 

இறுதியாக, தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்க மாவட்டச் செயலாளர் தோழர் சரவணன் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது

சஜன் குமார்

ஆல்பர்ட் ஜெயராஜ்

சா.குப்பன்

பிலிப்


கார்த்திக்



தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்

No comments:

Post a Comment