Thursday 30 March 2023

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை!

அதானியும் இந்தியப் பிரதமர் நரேந்திரனும் (மோடி) கூட்டு சேர்ந்து "மோதானி"யாக (MODHANI) அவதாரம் எடுத்து நாட்டு வளங்களைக் கபளீகரம் செய்ததை ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது. இதுகுறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து முறையான விசாரணையை மேற்கொண்டு உண்மை நிலையை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

"பிரதமர் நரேந்திரன், அதானியுடன் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தது ஏன்? மொரீசியஸ், கரீபியன் தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் அதானியின் பினாமி பெயரில் எந்தவித செயல்பாடும் இல்லாத ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20000 கோடி பணம் யாருடையது?" என காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி எழுப்பும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கத் திராணியற்ற பிரதமர் நரேந்திரன், பழைய அவதூறு வழக்கு ஒன்றை தூசு தட்டி, ஊராகும் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரது MP பதவியையும் பறித்துப் பழிவாங்கும் ஈனச் செயலில் ஈடுபட்டுள்ளார் நரேந்திரன்.

இது ஏதோ தனிப்பட்ட இராகுல் காந்தி மீதான தாக்குதல் மட்டுமல்ல; இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்து நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 30.03.2023 அன்று நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்கறிஞர் ராஜு தலைமையில் சென்னையில உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்வர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. 

பாஜக கும்பலை ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி எறியும் வரை "மோதானிக்கு" எதிரானப் போராட்டங்கள் மேலும் பரவட்டும். 

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டக் காட்சிகள்.












No comments:

Post a Comment