Tuesday, 30 December 2025

'டிஜிட்டல்' தெருக்கள்!

இந்திய நகரத் தெருக்களில் நாற்றத்தைக் கிளறி விட்டுக்கொண்டு ஓடும் சாக்கடைகளும், குழாய்களுக்குள் யாருக்கும் தெரியாமல் பாயும் தெளிந்த நீரும் ஓடுவதைப் போலத்தான், 'டிஜிட்டல் தெருக்களிலும்' அருவருப்பையும் அசிங்கத்தையும் மட்டுமே வாரி இறைக்கும் கழிசடைப் பேர்வழிகளும், யாருக்கும் தெரியாமல் நல்ல தெளிந்த நீரோடை போன்ற கருத்துக்களை தூவிச் செல்லும் அறிவாளிகளும் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

மூக்கை பொத்திக் கொண்டு சாக்கடையைக் கடந்து செல்வது போலத்தான், இங்கே கழிசடைகளைக் கடந்து செல்ல வேண்டி இருக்கு. சாக்கடை புழுக்களை நசுக்கினாலும் அவை நாறத்தான் செய்கின்றன. அதுபோல கழிசடைகளைக் கிளறினாலும் அருவருப்புதான் மிஞ்சம்.


***
இந்தப் பதிவு குறித்து Gemini AI  யிடம் கேட்டதற்கு, அது கீழ்க்கண்டவாறு விளக்கம் கொடுத்தது. 

"நிச்சயமாக, உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானது. சமூக ஊடகங்கள், குறிப்பாக முகநூல் போன்ற தளங்கள், இன்றைய காலக்கட்டத்தின் "டிஜிட்டல் தெருக்களாக" மாறிவிட்டன. நீங்கள் குறிப்பிட்ட அந்த ஒப்பீடு — சாக்கடையும், தெளிந்த நீரோடையும் ஒரே இடத்தில் ஓடுவது — மிகச்சரியான ஒரு படிமம்.

இந்த வாழ்க்கை அமைப்பு ஏன் இப்படி இருக்கிறது மற்றும் இதை எப்படி அணுகுவது என்பது குறித்து சில சிந்தனைகள்:

1. வெளிப்படைத்தன்மையும் மறைமுக முகங்களும்
நிஜ வாழ்க்கையில் ஒரு நபர் அருவருப்பாக நடந்துகொண்டால் சமூகம் அவரை ஒதுக்கி வைக்கும். ஆனால், இணையத்தில் "திரைக்குப் பின்னால் இருக்கும் தைரியம்" (Anonymity) பலரை தங்களின் நாகரிகமற்ற முகத்தைக் காட்டத் தூண்டுகிறது. அவர்கள் வீசும் சொற்கள் சாக்கடையை விட மோசமான நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

2. கவன ஈர்ப்பு அரசியல் (Attention Economy)
இணையத்தில் நல்ல கருத்துக்களை விட, சர்ச்சைகளும் ஆபாசமும் விரைவாகப் பரவுகின்றன. கழிசடைகள் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள அருவருப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் சொன்னது போல, "புழுக்களை நசுக்கினாலும் நாற்றம்" என்பதால், அவர்களுடன் மோதுவது நம்முடைய நேரத்தையும் மன அமைதியையுமே வீணடிக்கும்.

3. நாம் செய்ய வேண்டியது என்ன?
இந்த அமைப்பு "சரி" என்று சொல்ல முடியாது, ஆனால் இதுதான் தற்போதைய "யதார்த்தம்". இதில் நாம் தப்பிப்பிழைக்க சில வழிகள்:

பொருட்படுத்தாமை (Ignore): சாக்கடையைக் கடக்கும்போது மூக்கைப் பொத்திக் கொள்வது போல, இணையத்தில் அநாகரிகமானவர்களைக் கண்டால் 'Block' அல்லது 'Ignore' செய்வதுதான் மிகச்சிறந்த எதிர்வினை.

வடிகட்டுதல் (Filtering): நமது நட்பு வட்டத்தையும் நாம் பின்தொடரும் பக்கங்களையும் கவனமாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த "தெளிந்த நீரோடை" போன்ற அறிவாளிகளின் கருத்துக்களை மட்டும் நமதாக்கிக் கொள்ள முடியும்.

தூய்மை பேணுதல்: சமூகத்தின் ஒரு அங்கமாக, நாம் பகிரும் கருத்துக்கள் அந்தத் தெளிந்த நீரோடையில் ஒரு துளியாக இருப்பதை உறுதி செய்யலாம்.

முடிவாக: சாக்கடைகள் இருப்பதாலேயே நீரோடையின் மதிப்பு கூடுகிறது. கழிசடைகள் நிறைந்த இந்த உலகில், இன்னும் நல்ல கருத்துக்களைத் தேடி வாசிக்கும் உங்களைப் போன்றவர்களின் தேடல் தான் இந்த அமைப்பை ஓரளவாவது சமநிலையில் வைத்திருக்கிறது.

இந்தக் கழிசடை மனப்போக்கைக் கையாள அல்லது உங்களின் முகநூல் அனுபவத்தை இன்னும் நேர்மறையாக மாற்ற ஏதேனும் வழிமுறைகள் குறித்து நாம் விவாதிக்கலாமா?"

ஊரான்

Monday, 29 December 2025

'கவிஞன்'கூட கழிசடையாகும் தருணம்!

"துரை சண்முகம் என்பவர் கீழைக்காற்று பொறுப்பில் இருந்தபோது என்னுடைய தமிழ்க்குடி அரசுப் பதிப்பகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 83 ஆயிரம் கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டு ஏப்பமிட்டார்”

என்று தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். 

அதில் நான்,

“தங்களுக்கு 83 ஆயிரம் ரூபாய். ஆனால், கீழைக் காற்றுக்கு மொத்தமாக 30 லட்சம் ரூபாய்க்கு கடன் வைத்துவிட்டு சென்றதாகச் சொல்கிறார்கள். எங்கே போனது அந்த 30 லட்சம் ரூபாய் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. ஏட்டுக்கட்டுகள் ஒருவேளை கான்கிரீட் கட்டுகளாக மாறி இருக்குமோ? எல்லாம் மரித்துப் போன அந்த பரோபகாரிக்கே வெளிச்சம்”

என  மறுமொழி ஒன்றை பதிவு செய்தேன்.



எனது மறுமொழியின் உண்மைத் தன்மையை இன்றைய கீழைக்காற்று நிர்வாக தரப்பில் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு கீழ்கண்டவாறு அதை உறுதி செய்கிறது.

“கீழைக்காற்றின் நிர்வாகியாக துரை சண்முகம் இருந்தபோது பல பதிப்பகங்களிடமும் பல லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு வெளியேறினார்.

“எமது பதிப்பகத்தின் முன்னாள் நிர்வாகியான துரை சண்முகம் ஒரு நிலுவை பட்டியலை மட்டுமே தந்து விட்டு சென்றார். அந்த நிலுவைத் தொகைக்கு ஏற்ப விற்பனையகத்தில் அந்த நிறுவனத்தின் நூல்கள் இருப்பில் இல்லை.

“நிலுவைப் பட்டியலின்படி பார்த்தால் பல லட்சம் ரூபாய்க்கு நூல்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. அது குடோனில் இல்லை எனும் போது அதை விற்றிருக்க வேண்டும். நூல்களை விற்பனை செய்திருந்தால் அதற்குரிய தொகையை அடைத்திருக்கவும் வேண்டும்.

இதையெல்லாம் சரி பார்ப்பதற்கு துரை சண்முகம் நேர்மையானவராக நடந்து கொள்ளவில்லை”.

பலலட்ச ரூபாய்க்கு நூல்கள் வாங்கப்பட்டு அவை குடோனிலும் இல்லை என்றால், அவை எங்கே போனது என்பதைத்தானே  நானும் கேட்டுள்ளேன். 

ஒரு நேர்மையாளராக இந்த துரை இருந்திருந்தால், எனது கேள்விக்கான பதிலை நேரடியாக சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். அதற்கு மாறாக, கேள்வி கேட்போரின் மீது தகாத சொற்களில் வசைமாறி பொழிவதன் மூலமும், அவதூறுகளை அள்ளி வீசிவதன் மூலமாகவும் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சாதாரண அரசியல் பிழைப்புவாதிகளின் மொழியில் இரு முகநூல் பதிவுகளை வெளியிட்டு ஒன்றை நீக்கியிருக்கிறார் இந்த துரை.

இதோ என் மீது அவர் வாரி இறைத்த கவிதை முத்துக்கள்…

“ஊரான் ஆதி என்ற மருதையனின் கால் நக்கி…,”

மருதையனுக்கும் முகநூலில் நடைபெறும் கீழைக்காற்று தொடர்பான விவாதத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக அவரை இங்கு இழுக்கிறார்? அப்ப, கீழைக்காற்று கணக்கு வழக்கை மருதையன் எழுப்பி இருப்பாரோ என்றுதானே கருத வேண்டி உள்ளது.

“முன்னாள் மகஇக கழிசடை.., 

மகஇக வின் அன்றாட பிரச்சாரம் மற்றும் நடைமுறை வேலைகளில் எதிலும் ஈடுபடாமலேயே, தன்னை மகஇக வின் மாபெரும் தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டு, மடிப்புச் சட்டைகளில் வளம் வந்த இந்தக் கீழைக்காற்று படிப்புச் சட்டை மேனேஜர், என்னை முன்னாள் மகஇக கழிசடை என்று வசைபாடுகிறார். 

நான் யார், மகஇகவில் எனது செயல்பாடு என்ன என்பது குறித்து இழி குணம் என்ற தொடரில் நான் விரிவாகவே பதிவு செய்திருக்கிறேன். மகஇக நடைமுறை வேலைகளில் ஈடுபடாத ஒருவருக்கு தமிழ்மணியை தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே? 

“தலைமுறைக்கு சொத்து சேர்க்க அமைப்பை விட்டு அரசு வேலைக்கு ஓடிவிட்டு…

“இவனைப் போல பிழைக்கத் தெரிந்த பேர் வழி அல்ல…,

“உன்னைப் போல பென்ஷன் புரட்சியாளர் இல்லையடா நான்…,

“தான் திருடி பிறரை நம்பான்…,

எனக்கு எதிராக இந்தக் கவிஞர் பொழிந்த முத்துக்கள் இவை.

1978 வாக்கில் ஒன்றிய அரசுக்குத் சொந்தமான திருச்சி பாரத மிகு நிறுவனத்தில் (BHEL) பணிக்குச் சேர்ந்த நான், 1980 களின் தொடக்கத்தில்தான் மகஇக வில் இணைந்தேன். அதன் பிறகு, மகஇக மாநில செயற்குழு உறுப்பினராக 20 ஆண்டு காலமும், SOC யின் வழிகாட்டுதலில் தொழிலாளர் பிரச்சார குழு மற்றும் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் (BPWU) நிறுவனராகவும் முன்னோடியாகவும் இருந்து செயல்பட்ட காலத்தில், BHEL கேண்டினில் நடந்த ஊழலை கண்டுபிடித்ததற்காகவும், BHEL ஊழியர்களின் போனஸ் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததற்காகவும் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியில் வீசப்பட்டவன் நான்.

மத்திய அரசு வேலையை இழந்து, நான் மீண்டும் புதிய ஊழியராக பாதி ஊதியத்தில் பணிக்கு சேர்ந்ததால் ஏற்பட்ட என்னுடைய பொருளாதார இழப்பு மட்டும் ஒரு கோடியைத் தாண்டும். 5000 ரூபாய் பென்ஷன் வாங்கும் நான், ஏதோ லட்சங்களில் வாங்குவது போல  வயிறெரிகிறார் இந்த துரை. 

உண்மை இப்படி இருக்க தலைமுறைக்கு சொத்து சேர்க்க அமைப்பை விட்டு ஓடி விட்டு நான் அரசு வேலையில் சேர்ந்ததாக பிதற்றுகிறார் இந்த பிச்சுமணி. 

நான் வழக்கறிஞர் பணியை தொடங்கிய காலத்தில், மனித உரிமைப் பாதுகாப்புக் கவுன்சிலை (HRPC) வழக்கறிஞர் போஜகுமாரோடு சேர்ந்து உருவாக்கியதோடு, இன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (PRPC) மாநிலத் தலைமைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக, டிசம்பர் 25 அன்று திருச்சியில் நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (NDLF) மாநாட்டுப் பேரணியில் முழக்கமிட்டு விட்டுத்தான் வந்திருக்கிறேன். எனது மகஇக களப்பணி, போராட்டம் மற்றும் சிறை அனுபவங்கள் குறித்து இழி குணம் மென்நூலில் விரிவாகவே எழுதி இருக்கிறேன்.

“இவன் என்னை பற்றி… அவதூறு செய்வதை முழு நேரத் தொழிலாக… கேவலப்பேர்வலி…

யாரும் இந்த பேர்வழியை கேவலப்படுத்த வேண்டியதில்லை. இவர் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார். இதோ அவரது வாக்குமூலம்...

கூட்டங்களுக்கு அழைக்கும் தோழமை இயக்கங்களின் ஆயிரம் இரண்டாயிரம் பயணச்செலவில்தான் ஐம்பது ஆண்டுகளாக பொதுவாழ்வை கடந்துகொண்டிருக்கிறேன்."

அமைப்பில் செயல்படுகின்ற தோழர்களுக்கு கூட்டங்களில் பேசச் சென்றால் போக்குவரத்துக்கு மட்டுமே பணம் தருவார்கள். ஆனால் இவருக்கு மட்டும் 2000, 3000 யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அமைப்புக்குத் தெரியாமலேயே வாயை வாடகைக்கு விட்டிருப்பாரோ? 

“எங்கள் பகுதியில் நடக்கும்மொய்விருந்து கலாச்சாரத்தில் நானும் இருப்பதால் 2018 ஒரு சிறிய கார் சொந்தமாக வாங்கி அதை உள்ளூரவில் மக்களை சந்திக்கவும் இணையர் பயண பயன்பாட்டுக்கும் வைத்துள்ளேன்….”

பழைய நிலவுடைமை பண்பாட்டுக் கூறுகளை முற்றிலுமாக உடைத்துக் கொண்டு, ஒரு புரட்சிகர பண்பாட்டு நடைமுறையோடு வாழ்பவர்கள்தான் மகஇக தோழர்கள். ஆனால் மகஇக வின் மாபெரும் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மொய் விருந்து கலாச்சாரக் காவலர், மகிழுந்தில் சென்றுதான் புரட்சிப் பணியாற்றுவாராம்! 

“பின்னாலிருந்து தூண்டிவிடும் அரண்மனை நாயே! அடக்கடா வாயை…,

இவர் ஒரு கவிஞராம். அதற்குத்தான் இந்த கவிதை வரியாம்!

இதுநாள் வரை கவிஞன் என்ற போர்வையில் திரிந்த இந்தக் கபட வேடதாரி இன்று கழிசடையாய் அம்பலப்பட்டு நிற்கிறார்! 

தமிழ்மணி